போய் வருகிறேன் புதுகையே
என்
தாயின் கருவறை தாங்கியதை விட
நீ
தாங்கினாய்
என் சோகங்கள் - உள்
வாங்கினாய்
இங்குள்ள்
ஒவ்வொரு நபர்களும்
என்
பிரியத்திற்குரியவ்ர்கள்
எனக்கான எதிர்பையோ
மறுப்பையோ
கொண்டிருந்தாலும்
எனக்கான
பள்ளங்கள் தோண்டியோருக்கும்
இந்நேரத்தில் நான்
என் பாசங்களை
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்
திருமணம் ஆனதும்
திருப்பூர் சென்ற போது
அடர் காட்டில்
அமிழ்த்தப்பட்டதாய் உணர்ந்து
குற்றம் சாட்டி,,,,,
பேரம் பேசி,
வாதாடி,
போராடி,,,,
மீண்டும்
புதுகையே வந்துவிட்டேன்
ஆனால் இப்போது?????
நாற்றுகள்
ஒரே இடத்தில் இருந்தால்
வளர்ச்சியும் இல்லை
முதிர்ச்சியும் இல்லை
எனவே தான்
இந்த மாறுதல்
கை கூப்பி அழைக்கும் சென்னை
என்னை
ஆதரிக்குமா?
அபகரிக்குமா ?
ஆற்றுப்படுத்துமா?
எதுவும் தெரியவில்லை.
இப்போதைக்கு
அதன்
அழைப்பின் அணைப்புக்குள் கிடக்கிறேன்
பரந்து விரிந்த மாநகரத்தில்
எனக்கான
பிரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இயல்பில் பிரியமானவளுக்கு
நிறைய நிறைய்ய
பிரியங்களைக் கோர்த்திருக்கிறேன்
நட்பால் வார்த்திருக்கிறேன்
எங்கும் விதைத்திருக்கிறேன்
எனக்கான
பிரியங்களையும்
கருத்து வேறுபாடுகளையும்
நல்ல வேளை
இது வரை
நான்
பகைமைகளைச் சந்திக்கவே இல்லை
பகைமையென யாரையும் உணரவே இல்லை
இறைவனுக்கு நன்றி
இப்போது
எல்லோரிடமும் கொட்டிச் செல்கிறேன்
எனக்கான அன்புகளை மட்டும்
என் பிரியத்திற்குரிய புதுகையே
உன்
பாதம் தொட்டு வணங்கி
விடைபெறுகிறேன்
என்னை
ஆசிர்வதித்து அனுப்பு
என் மூச்சுக்குள் நிறைந்த புதுகையே
உன்னை
என் உயிருக்குள் வைத்து
ஆரத்தழுவுகிறேன்
என் நெற்றியில் முத்தமிட்டு
விடைகொடு!!!!!!
இனியும் வருவேன்
உன்னைக் காண
விருந்தினர் போல
ஒருநாள்...இருநாள்...
பயணத்திட்டங்களுடன்
என் பணிகள் சிறக்க செழிக்க
உன்னிலிருந்து
எடுத்துச் செல்கிறேன்
ஊக்கங்களை
ஆக்கங்களை
அன்புகளுடனும்,
நன்றிகளுடனும்
இந்த ஊர்குருவி
பருந்தாக ஆசைப்பட்டு
பறந்து செல்கிறேன்
வல்லூறுகளின்
வலிமை பழகவில்லை நான்,,,
எனினும்
எனக்கான
வளிமண்டலத்தில்
வாகைசூடுவேன்
அழுத்தமாய்...ஆழமாய்...
என் பாதைகளில்
பன்னீர் தெளிப்பார்களா?
கண்ணீர் தெளிப்பார்களா?
என அறியவில்லை நான்
ஆனால்
கண்ணீரையும்
பன்னிர் ஆக்கிக் கொள்ள
பழக்கு!!!!
நினைவின் கூடுகளில்
நீயே நிறைந்திருப்பாய்!
உன்
சேமநலநிதிக்கணக்கில்
எப்போதும்
எனை வரவில் வை
வரலாற்றுப்பக்கத்தில்
எப்போதும்
எனை
உறவில் வை...!!!!
அழுத்தமாய்....ஆழமாய்...!!!
உன் சுவாதி...
**************************************************************************
என்
தாயின் கருவறை தாங்கியதை விட
நீ
தாங்கினாய்
என் சோகங்கள் - உள்
வாங்கினாய்
இங்குள்ள்
ஒவ்வொரு நபர்களும்
என்
பிரியத்திற்குரியவ்ர்கள்
எனக்கான எதிர்பையோ
மறுப்பையோ
கொண்டிருந்தாலும்
எனக்கான
பள்ளங்கள் தோண்டியோருக்கும்
இந்நேரத்தில் நான்
என் பாசங்களை
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்
திருமணம் ஆனதும்
திருப்பூர் சென்ற போது
அடர் காட்டில்
அமிழ்த்தப்பட்டதாய் உணர்ந்து
குற்றம் சாட்டி,,,,,
பேரம் பேசி,
வாதாடி,
போராடி,,,,
மீண்டும்
புதுகையே வந்துவிட்டேன்
ஆனால் இப்போது?????
நாற்றுகள்
ஒரே இடத்தில் இருந்தால்
வளர்ச்சியும் இல்லை
முதிர்ச்சியும் இல்லை
எனவே தான்
இந்த மாறுதல்
கை கூப்பி அழைக்கும் சென்னை
என்னை
ஆதரிக்குமா?
அபகரிக்குமா ?
ஆற்றுப்படுத்துமா?
எதுவும் தெரியவில்லை.
இப்போதைக்கு
அதன்
அழைப்பின் அணைப்புக்குள் கிடக்கிறேன்
பரந்து விரிந்த மாநகரத்தில்
எனக்கான
பிரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இயல்பில் பிரியமானவளுக்கு
நிறைய நிறைய்ய
பிரியங்களைக் கோர்த்திருக்கிறேன்
நட்பால் வார்த்திருக்கிறேன்
எங்கும் விதைத்திருக்கிறேன்
எனக்கான
பிரியங்களையும்
கருத்து வேறுபாடுகளையும்
நல்ல வேளை
இது வரை
நான்
பகைமைகளைச் சந்திக்கவே இல்லை
பகைமையென யாரையும் உணரவே இல்லை
இறைவனுக்கு நன்றி
இப்போது
எல்லோரிடமும் கொட்டிச் செல்கிறேன்
எனக்கான அன்புகளை மட்டும்
என் பிரியத்திற்குரிய புதுகையே
உன்
பாதம் தொட்டு வணங்கி
விடைபெறுகிறேன்
என்னை
ஆசிர்வதித்து அனுப்பு
என் மூச்சுக்குள் நிறைந்த புதுகையே
உன்னை
என் உயிருக்குள் வைத்து
ஆரத்தழுவுகிறேன்
என் நெற்றியில் முத்தமிட்டு
விடைகொடு!!!!!!
இனியும் வருவேன்
உன்னைக் காண
விருந்தினர் போல
ஒருநாள்...இருநாள்...
பயணத்திட்டங்களுடன்
என் பணிகள் சிறக்க செழிக்க
உன்னிலிருந்து
எடுத்துச் செல்கிறேன்
ஊக்கங்களை
ஆக்கங்களை
அன்புகளுடனும்,
நன்றிகளுடனும்
இந்த ஊர்குருவி
பருந்தாக ஆசைப்பட்டு
பறந்து செல்கிறேன்
வல்லூறுகளின்
வலிமை பழகவில்லை நான்,,,
எனினும்
எனக்கான
வளிமண்டலத்தில்
வாகைசூடுவேன்
அழுத்தமாய்...ஆழமாய்...
என் பாதைகளில்
பன்னீர் தெளிப்பார்களா?
கண்ணீர் தெளிப்பார்களா?
என அறியவில்லை நான்
ஆனால்
கண்ணீரையும்
பன்னிர் ஆக்கிக் கொள்ள
பழக்கு!!!!
நினைவின் கூடுகளில்
நீயே நிறைந்திருப்பாய்!
உன்
சேமநலநிதிக்கணக்கில்
எப்போதும்
எனை வரவில் வை
வரலாற்றுப்பக்கத்தில்
எப்போதும்
எனை
உறவில் வை...!!!!
அழுத்தமாய்....ஆழமாய்...!!!
உன் சுவாதி...
**************************************************************************