tag:blogger.com,1999:blog-25297849748793627402024-02-07T10:08:20.844-08:00சுவாதியும்கவிதையும்Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comBlogger401125tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-60343825591078855712019-09-22T09:43:00.000-07:002019-09-22T09:43:43.641-07:00விடுமுறைப் பயணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திங்கள் வரை பள்ளி உண்டு என்று சொல்லவும் ஒரே நாளுக்காக ஊருக்குப் போக வேண்டாமே என்று நினைத்து சுக்ரீவன் அம்மாவிடம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் போகப் போகிறேன் என்றேன்..நானும் வரேன்.போற வரவு செலவு அவரவர் உடையது தண்ணீர் வாங்கினால் கூட அவரேர் காசுல வாங்கிக்கலாம் டீல் ஓகேயா என்றாள்..<br />
<br />
சரி..தனியா போறதுக்கு துணையா இருக்குமேனு ஓகே சொன்னேன்<br />
<br />
சிறிது நேரத்தில் விமலா போன் செய்து நானும் வரேன் டி என்றாள்<br />
<br />
சனிக்கிழமை இரவே பரமேஸ்வரி எங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ள ..காலையில் 5.30 க்கு கிளம்பினோம்<br />
<br />
வாசலில்.பார்த்தால் 20 பேர்..<br />
<br />
பின்னாலிருந்து பரமேஸ்வரி நான் தான் எல்லோரிடமும் சொன்னேன் என்றாள் பெருமையாக...<br />
<br />
( என் கூடத் தானே படுத்திருந்தாள்..🤔🤔இது எப்ப நடந்தது?)<br />
<br />
அவரேர் காசுல வரோம்.ஆனா ஒன்னாப் போறோம் என்றனர்<br />
<br />
முதலில் பிரம்மபுரீஸ்வரர் கோயில்<br />
<br />
அங்கிருந்து அரேங்கேற்ற அய்யனார் கோயில்...அங்கிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சாப்பிட்டு வெக்காளியம்மன் கோயில் ..அங்கும் தரிசனம்.செய்து விட்டு பஞ்சவர்ணேஸ்வரர் ்..உடனுறை காந்திமதியம்மை கோயில்...அங்கிருந்து வராஹி தனி ஸ்தலம் குழுமணி ரோடில் மங்கள் நகரில் இருப்பதாகச் சொல்லவும் அங்கு கிளம்பினோம்<br />
<br />
அங்கும் போய் வராஹி அம்மனை வழிபட்ட பின் மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் வந்து...அங்கு ஒரு ஹோட்டலில் மேனேஜர் வரை அனைவரையும் அலற வைத்து...உரிமையாளரையே சாப்பாடு பரிமாறவைத்து..அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் வந்து...அங்கிருந்து புதுகை வந்துவிட்டோம்..<br />
<br />
பேருந்தில் பத்மாவதி க்கு தான் எங்கும் முகம் கழுவி மாலையில் பூ வைத்துக் கொள்ளவில்லை என்ற குறை..( நெற்றி நிறைய குங்குமமும் மஞ்சளும் இருந்ததால், அதனை அழிக்க மனமில்லாமல் மாலை கோயிலில் நேரம்.இருந்தும் தண்ணீர் வசதி இருந்தும் தன்னை அழகாக்கிக் கொள்ளவில்லை என்று மூன்று முறை சொன்னார்<br />
<br />
எப்போதும் முடி முதல் கால் வரை வலிக்குது என்று தினம் என்னிடம் புலம்பும் தன்வந்திரி அம்மா அவ்வளவு நடந்தும் ஒன்றுமே சொல்லவில்லை<br />
<br />
இடையில் யாருக்குமே வீட்டு நினைவு வரவே இல்லை..நான் மட்டுமே என் அம்மா.அப்பாவும் என் மகள்களுக்கும் ஒவ்வொரு கோயில் சன்னதியிலும்.தொடர்பு கொண்டு பேசினேன்<br />
<br />
பொதுவாக எந்த கடையில் சாப்பிட்டாலும் யார் வீட்டில்.கல்யாணத்தில் எங்கு சாப்பிட்டாலும் சாப்பாட்டைக் குறை சொல்லும்.நகுலன் அம்மா சாப்பாட்டை பற்றி மூச்சு விடவில்லை..<br />
<br />
பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் அமர்ந்துருக்கும் வேளையில் சப்தமாக பாடினார்கள்..அங்கு வந்திருந்த அனைவரும் நாங்கள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதாக நினைத்துக் கொண்டனர்<br />
<br />
பேருந்தில் என்னை டீச்சர் டீச்சர் என்று எல்லோரும் அழைக்க பஸ் கண்டக்டரும் டிரைவரும் கூட அப்படியே அழைத்தனர்..<br />
<br />
பரமேஸ்வரி நேற்றே என் வீட்டிற்கு வரக் காரணம் ஏற்கனவே அஷ்டமு அன்று பைரவர் கோயிலுக்குக் கூட்டிப் போவதாகச் சொல்லி பத்து நிமிடம்.கால தாமதமாக வந்ததால் அவளை விட்டு விட்டு கிளம்பிட்டேன்..அதனால் தானாம்.<br />
<br />
கடைசி வரை எனக்கு நிறைய தமிழ் தெரிவதாகவும் எனக்கு பலத்த ஞானம் இருப்பதாகவும் நம்பினர்..<br />
<br />
( உண்மையில் பட்டிமன்றம்.பேசவும்..பதவி உயர்விற்காகவும் பிறரை இம்பிரஸ் பண்ணவும்..தேவாரத்தில் பத்து பாடல்கள். திருப்புகழில்.ஐந்து பாடல்கள்.அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்துவில் இரண்டு பாடல்கள்.பாரதியார் பாடல்கள்.பத்து...பாரதிதாசன் பாடல்கள்.பத்து கண்ணதாசன் பத்து இவை மட்டுமே தெரியும் என்பதை ஒரு முறை நான் சொல்லியும் நம்பவில்லை<br />
<br />
<br />
கடைசி வரை கேசவய்யர் மனைவி என்னோடு கோபத்துடன் இருந்தாள்..வெக்காளியம்மன் கோயிலில்.இருந்து துலுக்க நாச்சியார் கோயில் பக்கம்.அங்கு நான் கூட்டிப் போகவில்லையாம்.<br />
<br />
ஆனால் இது புரட்டாசி மாதம் என்பதால் மதியம் ஸ்ரீ ரங்கம் செல்வதாய் தான் முதலில் சொன்னேன்..ஆனால் ப்ளான் மாறியதும் ஒரு காரணம்.( அழுத்தக் காரி என்னை மாமி என்று அழைக்கக் கூடாது என்றும் சுவா என்று அழைக்கக் கூடாது என்றாலும்.கேட்காமல் வேண்டுமென்றே அப்படியே அழைப்பாள்.எனக்கு.கனகாம்பர்ம்.தலையில் வைக்கப் பிடிக்காது என்று தெரிந்தும் என் தலையில் வலுக்கட்டாயமாய் வைப்பாள்)<br />
அதனால் என்ன லீவில் ப்ளான் பண்ணி போய்ட்டு வாங்க என்றேன்.என்னோடு தான் வரணுமாம்..சரி சரஸ்வதி பூஜைக்கு கூட்டிப் போறேன் என்றேன..அப்ப தான் உங்க அம்மா வீட்டுக்குப் போறீங்களே. என்று எப்படியும் ஒரு நாள் கூட்டிப் போறேன் என்று சொல்லி இருக்கிறேன்..<br />
<br />
<br />
வழக்கம் போல் வசந்தா ..பிரேமா..பானுப்பிரியா..கலைச்செல்வி எதுவும் பேசவில்லை..<br />
<br />
என்னை சமத்து என்றும்..நல்லபடியாக் கூட்டிப் போய் வந்தீர்கள் என்று சொன்ன போது "ஙே" என்று விழித்து..ஹி என்று சிரித்து வைத்தேன்..( அவரேர் காசுல போனது எப்படி நான் கூட்டிப் போனதாகும்??)<br />
<br />
நீண்ட நாளுக்குப் பின் நான் மகிழ்வாய் இருப்பது போல் உணர்ந்தேன்.<br />
<br />
<br />
சிப்காட் நகர்..பழனியப்பா நகர்.சண்முகா நகர்..பாலன் நகர்..கம்பன் நகர்.பெரியார் நகர்..என்று ஒன்பது நகரிலிருந்து ஒரே இடத்தில் குவிந்து பயணித்திருக்கிறோம்<br />
<br />
கீரனூர் வந்தவுடன் மழை பார்த்ததும் தான் எல்லோருக்கும் வீட்டு நினைவே வந்தது..<br />
<br />
ஏதோ தேவலோகத்துக்கு அழைத்துப் போனதுமாதிரி இரண்டு மூன்று முத்தங்கள் வேறு தந்தார்கள் பிரியும் வேளையில்..<br />
<br />
இன்னமும் எனக்கு ஒரு சந்தேகம்<br />
<br />
நான் முதலில் சொன்னது சாவித்திரியிடம்.அவள் வரவில்லை..நான் பரமேஸ்வரி.கலைச்செல்வி மூன்று பேர் மட்டுமே போக திட்டமிட்டிருந்தோம்.<br />
<br />
அதுவும் சனிக்கிழமை மதியம் தான் சொன்னேன்<br />
.எப்படி அதற்குள் எல்லோரும் இணைந்தார்கள் என்பது ஆச்சர்யம் தான்<br />
<br />
பிஸ்கெட்..பேரீட்சை..கடலை மிட்டாய்..கல்கண்டு..கொய்யா...திராட்சை என்று ஆளுக்கு ஒன்றே ஒன்று என்று பகிர்ந்து உண்டது மறக்க இயலாது..<br />
<br />
இறங்கும் போது சுவா மாமி ஸ்ரீரங்கம் எப்போனு சொல்லுங்க என்று கத்தி ச் சொல்லி என் கோபத்தை ரசித்து விட்டிச் சென்றாள் கேசவய்யர் மனைவி..</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-40754465828705727082016-04-24T00:33:00.001-07:002016-04-24T00:56:20.438-07:00இயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20..<br />
<br />
திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.<br />
<br />
கிட்டத்தட்ட 56 தொலைக்காட்சிகளுக்கு மேல் வந்து எங்களை பேட்டி எடுத்து சிறப்பித்தார்கள்..<br />
<br />
ராஜாராஜா இயக்குநர்...இப்படத்தின் வசனகர்த்தா இவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.<br />
<br />
எங்கள் இருவருக்கும் ஒரே வயது<br />
<br />
அதனால் இவரைப் பார்த்தே அன்றே என்னை தோழி என்றும் சகோதரி என்றும் சொல்லி விட்டார்.<br />
<br />
திரை உலகில் பெண்களுக்கு பயம் என்றெல்லாம் ஒரு மாயை ஏற்படுத்தியது யாரோ.....அக்கருத்தை குப்பைக்குள் தள்ளியவர்.<br />
<br />
பழகுவதற்கு மிகவும் எளிய நபர். இனியவர். எல்லோரையும் அரவனைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதே சமயம் தன் உழைப்பு முழுமையாகவில்லை என்றால் மிகச் சரியான நேரத்தில் சரியான நபரிடம் மட்டும் கோபம் கொள்ளும் உள்வியல் அறிந்தவர்.<br />
<br />
டப்பிங் தியேட்டரில் யார் யார் எந்த கேரக்டருக்கு பேச முடியும் என்பதை உணர்ந்து அவரவர்களை அழைத்து பேசவைத்தார்.<br />
<br />
இன்று பத்ரகாளி பிலிம்ஸ் தனது அனைத்துப் படத்தையும் தமிழகத்தில் இவருடைய ரசி மீடியாவில் மட்டுமெ தன் பணிகளை மேற்கொள்ளும், அந்தளவிற்க்கு தன் பணிகளை மிகவும் சிறப்பாக செய்வதில் சூரர்.<br />
<br />
நல்லோர்களுக்கு எல்லாம் நல்லவிதமாக அமையும் என்பது போலவே இவருடைய உதவியாலர் திரு கார்த்தி அவர்கள், அற்புதமாக பணி ஆற்றக்கூடியவர். இவர் நினைத்தனை அவர் செய்யும் அளவுக்கு இருவருக்கும் ஒரு வேதியல் பொருத்தம்.<br />
<br />
அதே போல் ஸ்கைரவி சார் பணீகளை நமக்கு நன்கு தெரியும்..எல்லாவற்றௌயும் பார்த்து பார்த்து செய்பவர்.<br />
<br />
இசை கோர்ப்பு அன்று ரெக்கார்டிங் தியேட்டரில் திரு செந்தில் குமார் அவர்களின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு சின்ன பிசிர் த்ட்டினாலும் தன் கூர் புத்தியால் கண்டுபிடித்ததோடு எந்த இடத்தில் எதனால் ஏற்பட்டது? அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு வரியையும் ரசித்து கோர்வையாக்கினார். அவரின் ரசனை எங்கள் வார்த்தைகளை பாடல்களாக்கியது என்றே சொல்ல வேண்டும்..<br />
<br />
இயக்குநர் ராஜராஜாவைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நல்ல மனிதர் எனக்கு நண்பராகக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..<br />
<br />
நட்பு விஷயத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்றே சொல்ல வேண்டும்<br />
<br />
என் பிரியத்திற்குரியவர்கள் எப்போதும் என்னை விட்டு விலகுவதுமில்லை. மாறுவதுமில்லை.<br />
<br />
அதற்கு சான்று...ராதா, பிரபா, வானதி, பாத்திமா, கருணாநிதி அண்ணா, ராகவன் டாடி,<br />
<br />
ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதில்லை. எப்போதும் பேசிக் கொண்டே இருப்பதும் இல்லை. ஆனால் எங்கள் குடும்பத்தின் நபர்களுக்காக அவரவர்கள் பிரார்த்தனை செய்து கொள்வோம்...<br />
<br />
ஆறு மாதம் கழித்துப் பேசினாலும் அதே அன்பு எங்களுக்குள் எப்போதும் ஊற்றெடுக்கும்<br />
<br />
அப்படித்தான் என் பிரியத்திற்குரிய அண்ணா திரு கருணாநிதி அவர்கள்...<br />
<br />
கல்லூரி காலங்களில் அவர் நிறைய கவியரங்கம் செல்வார். முதுநிலைப் படிப்பில் தங்க மெடல் வாங்கியவர்..அந்த சிறு வயதில் என் அம்மாவிடம் தன் கவிதைகலை அழகாக சப்தமாக, உச்சரிப்பு சுத்தமாக வாசித்துக் காண்பிப்பார்.<br />
<br />
இதெல்லாம் விட எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்.<br />
<br />
யார் யாரிடமோ அவரின் இணைப்பு எண் வாங்கி அண்ணா நான் சென்னைக்கே வந்துவிட்டேன் அண்ணா என்று சொன்னேன்..அதே அன்பு...அதே பிரியம்..என்னடா செல்லம் என்றே எங்கும் அழைப்பவர். திருமணத்திற்கு முன் கவியரங்கம் செல்லும் போது கருணா அண்ணா வந்தால் அம்மா துணைக்கு வருவதில்லை. அதான் அண்ணா வரான்ல என்பார் அந்தளவுக்கு பிரியமானவர். நேயமானவர்.<br />
<br />
இன்று பல பாடல் கள் எழுதி இருப்பதோடு பல பேச்சாளர்கள் கவிஞர்கள் தலைவர்கள் எல்லோரும் விரும்பும் ஒரு நபராக இருப்பது புதுகைக்குக் கிடைத்த பெருமை என்றே சொல்ல வேண்டும்<br />
<br />
அன்று நாங்கள் பாடல் ஒலிப்பதிவு முடித்து சாலிகிராம் வழியாக வந்த போது ஒரு பெரிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் தான் போன ரெனால்ட் டஸ்டர் காரை நிறுத்தி என்னப்பா நன்றாக இருக்கியா? என்று விசாரித்ததோடு தன்னை எனக்கும் அறிமுகம் செய்து கொண்டார்.(அவரைத் தெரியாதோர் யார்)<br />
<br />
கவிஞர் வைரமுத்து அவர்கள் அண்ணன் மேல் அன்பும் அக்கறையும் அதிகம் உள்ளவர்..<br />
<br />
அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளங்களோடு எனக்கு திரை உலகம் தன் இரு கைகளை நீட்டி வரவழைத்திருக்கிறது...<br />
<br />
கருணா அண்ணா மூலம் தான் எனக்கு இயக்குநர் ராஜராஜ அவர்களின் அறிமுகம் கிடைத்தது..<br />
<br />
இந்த நன்றியை அன்பை என்றும் மறவேன்...<br />
<br />
நல்ல உள்ளங்களின் துணையோடு இன்னும் நிறைய சாதிப்பேன்...<br />
<br />
பின் குறிப்பு...எனது பாடல்கலை ரசித்துப் பாடினார் தம்பி ஜெகதீஷ்<br />
<br />
திருமலை சோமு, மீனாட்சி சுந்தரம், அருண்பாரதி இவர்களும் இப்படத்தில் தங்கள் பங்குக்கு அற்புதமான பாடல்கள் தந்துள்ளனர்...அவர்களுக்கும் என் வாழ்த்தும்,,,வணக்கமும் உரியதாகுக<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIo8EdjDudFfOQgGNh9cpG5RZorGsypNej-Qc3kDGYNotsxDYlFc3kXK0Z31IHcbBwUYXN6IEhclMRBaSJeTJy4IG4f5iO3_p0n-_V0n-uShwkfMX18mzL1WKWJJjsEcBfp-Ije5lQxDs/s1600/swa+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIo8EdjDudFfOQgGNh9cpG5RZorGsypNej-Qc3kDGYNotsxDYlFc3kXK0Z31IHcbBwUYXN6IEhclMRBaSJeTJy4IG4f5iO3_p0n-_V0n-uShwkfMX18mzL1WKWJJjsEcBfp-Ije5lQxDs/s320/swa+1.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQyruLu7BLOD86ScnLopnk7r5SF-lnC7JM5RTMi9lm_xoCZNQXT4CBE7cj7-LXa3XkhzA_4hGA6V-kmDE13HH9DzvAYyciSBSOdDU02jXfQciIUwB_1u39zn6cvB3Pcedvw9OMY8ZXOYw/s1600/swa+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQyruLu7BLOD86ScnLopnk7r5SF-lnC7JM5RTMi9lm_xoCZNQXT4CBE7cj7-LXa3XkhzA_4hGA6V-kmDE13HH9DzvAYyciSBSOdDU02jXfQciIUwB_1u39zn6cvB3Pcedvw9OMY8ZXOYw/s320/swa+2.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzfhTorKzdnECqws1U_y2WlItXypfonD29mPUih2flx7MGGyUAxjTRpk9h8UQJVgzGwwRh3BMqIXHgJL9894KwDJqEEQyvCeNcnJOWHl-bOa_ACmDjZ_95tgCz6hO2j6LIFz4mMjShAgQ/s1600/swa+3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzfhTorKzdnECqws1U_y2WlItXypfonD29mPUih2flx7MGGyUAxjTRpk9h8UQJVgzGwwRh3BMqIXHgJL9894KwDJqEEQyvCeNcnJOWHl-bOa_ACmDjZ_95tgCz6hO2j6LIFz4mMjShAgQ/s320/swa+3.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLSEz8ADEIwNCLJo7alG10Gf8rLZOZ6mgB5kXuihRbkSV2N8TDlhDa0qR8Vv14y6EGgixP07a-s3aTb_saFC8uAxRU656NWO9xroh7O6Zf3fGSNht8zomWZ5gHiG53j2LSluG0LUIhcbM/s1600/swa+4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLSEz8ADEIwNCLJo7alG10Gf8rLZOZ6mgB5kXuihRbkSV2N8TDlhDa0qR8Vv14y6EGgixP07a-s3aTb_saFC8uAxRU656NWO9xroh7O6Zf3fGSNht8zomWZ5gHiG53j2LSluG0LUIhcbM/s320/swa+4.jpg" width="320" /></a></div>
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-65020860103660082992016-02-02T07:20:00.005-08:002016-02-09T22:51:58.086-08:00கைப்பைக்குள் இருந்ததை கவர்ந்து சென்றவள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நானும் ஆசிரியர் என்றாள்<br />
சினேகமாய் சிரித்து வைத்தேன்<br />
<br />
தனியார் பள்ளிகள் சில வற்றின்<br />
அராஜகங்களையும்<br />
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்<br />
அன்பையும் அடுக்கினாள்<br />
அதிகமான<br />
அன்பை உணர்ந்தேன்<br />
<br />
பையத்தான் என் பையைக் கேட்டாள்<br />
நீ போய் வா என்றாள்<br />
இயற்கை உபாதை தனித்து<br />
இறங்கி வந்தேன்<br />
<br />
கைப்பையில் இருந்ததை<br />
பாதியைக் கவர்ந்திருந்தாள்<br />
அவள் எடுத்தது தெரியாமல் இருக்கவே<br />
பேருந்துகளின் திருட்டுகள் பற்றி<br />
சிறு விளக்கம் கூடக் கொடுத்தாள்<br />
<br />
நான் அப்படி சந்தித்ததில்லை என்றேன்<br />
சந்திக்க வைத்து விட்டாள்<br />
<br />
நல்லவேளை<br />
சென்னை வந்தபின்<br />
என் இருப்பிடம் போக<br />
கொஞ்சம் சில்லறை வைத்திருந்தாள்<br />
<br />
ஆனாலும் அவள் பாவம்<br />
இருக்கும் இரண்டு வங்கி அட்டைகளில்<br />
ஒன்றில்<br />
சம்பளம் போக<br />
மீதிக் கடனிருப்பதை<br />
எப்படி சமாளிப்பாள்??<br />
<br />
மற்றொன்றில் பத்திரிக்கைகள்<br />
எப்போதேனும் போடும்<br />
எளிய தொகையை வைத்து என்ன செய்வாள்??<br />
<br />
பதிப்பகங்கள் நிராகரித்த<br />
அந்த<br />
கவிதைக் காகிதங்களை<br />
பண்டமாற்று முறையில்<br />
பஜ்ஜி வாங்கித் தின்பாளோ???<br />
<br />
<br />
அறுந்து விழுந்து நான் சேகரித்து வைத்திருந்த<br />
கொலுசு<br />
ஏற்கனவே ஆறுமுறை பத்த வைத்த கதை<br />
அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை<br />
வட்டியைக்கூட கட்டவில்லை என<br />
என்னை மிரட்டி அல்லது திட்டி<br />
இரண்டு வங்கிகளிருந்து வந்த<br />
கடிதங்களை என்ன செய்வாள்??<br />
<br />
பிள்ளைகளின் படிப்பிற்கும்<br />
தவணை முறையில் தான்<br />
கட்டணம் செலுத்துகிறேன் என்பதறிந்து<br />
எள்ளி நகையாடுவாளோ?<br />
<br />
அடைக்க இயலாத<br />
வீட்டுக்கடன் ரசீதுகள்<br />
கட்டிய வீட்டையும்<br />
கட்டாத கடனுக்கென<br />
அடகு வைத்த ரசீதுகளை வைத்து<br />
என்ன செய்யப் போகிறாள்???<br />
<br />
என்<br />
கம்பீரத் தோற்றமும்<br />
கவர்ந்திழுக்கும் பேச்சும்<br />
அவளையும் கவர்ந்திருக்கலாம்<br />
ஆனால்<br />
அதில் கடன் இருக்கும் என்பது<br />
அவள் அறியாதது தானே???<br />
<br />
மகளுக்கென<br />
மருத்துவர் தந்த மருந்து சீட்டில்<br />
பாதியை மட்டுமே வாங்கி<br />
மருத்துவரையும், மருத்துவத்தையும் நான்<br />
ஏமாற்றிய கதை தெரிந்து போயிருக்கும் தானே???<br />
<br />
ஒவ்வொரு மாதமும்<br />
வாங்க வேண்டும் என நினைத்து<br />
நான் போட்ட பட்டியல்களில்<br />
பலவற்றை பல மாதங்கலாய்<br />
வாங்காமலேயே<br />
காலம் கடத்துவதைச் சொல்லும்<br />
பட்டியல்கள் பார்த்து<br />
என்ன நினைத்திருப்பாள்???<br />
<br />
செத்துப் போன அப்பாவுக்கு<br />
என்று நான் தொடங்கி எழுதியிருந்த<br />
கடிதங்களைப் பார்த்து<br />
பைத்தியக்காரி<br />
என்று கூட நினைத்திருக்கலாம்<br />
<br />
இதன் மூலம்<br />
அவள் ஒன்றை அறிந்திருக்கலாம்<br />
பெண்கள்<br />
தூக்கிச்செல்லும் கைப்பையில்<br />
காசுகளோடு<br />
கவலைகளையும் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று<br />
<br />
ஒன்றே ஒன்று நிச்சயம்<br />
இவ்வளவு கடன்களையும்<br />
தூக்கலான சில துயரங்களையும் தூக்கிக் கொண்டு<br />
இவள் எப்படி உயிரோடு இருக்கிறாள்?<br />
என்று யோசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது<br />
<br />
இருந்த கொஞ்சப்பணம் அவளுக்கு<br />
இரண்டு நாள்<br />
அரிசிக்கும் மளிகைக்கும் பாலுக்கும் காய்கறிக்கும்<br />
அவளுக்கு உதவி இருக்கக்கூடும்<br />
<br />
அவள் வரையில்<br />
என் மானம் போய் விட்டது<br />
என்<br />
கம்பீரம் பார்த்தவள்<br />
இப்போது<br />
கடன்களையும் பார்த்திருப்பாள்<br />
<br />
ஆனால் அந்த அட்டைகள்<br />
ஒரு நாளும்<br />
அவளுக்கு உதவப்போவதில்லை<br />
<br />
ஆனாலும்<br />
அவளுக்கென் ஆழ்ந்த அனுதாபங்கள்<br />
<br />
உடலும் முகமும்<br />
பணக்காரத்தனம் காட்டியதால் தான்<br />
வந்து பக்கத்தில் அமர்ந்திருக்க வேண்டும்<br />
<br />
அகத்தின் அழகு முகத்தில் தெரிந்த<br />
அவளுக்கு<br />
வாழ்க்கையின் கடன்கள்<br />
வார்த்தைகளில் கூட இல்லை<br />
என்பதை அவள் உணரவே இல்லை<br />
<br />
அவளுக்கு என்<br />
ஆழ்ந்த அனுதாபங்கள்..<br />
அடுத்த முறை<br />
<br />
உனக்கு<br />
இன்னும் கொஞ்சம் அதிகமாய் வைக்க முயல்கிறேன்<br />
அதுவரை<br />
அதிகம் உள்ளவர்களிடம் திருடு<br />
**************************************************************<br />
<br />
<br />
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-83474009845831963232015-12-23T06:49:00.001-08:002015-12-23T06:49:39.018-08:00 போய் வருகிறேன் புதுகையே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
போய் வருகிறேன் புதுகையே<br />
என்<br />
தாயின் கருவறை தாங்கியதை விட<br />
நீ<br />
தாங்கினாய்<br />
என் சோகங்கள் - உள்<br />
வாங்கினாய்<br />
<br />
இங்குள்ள்<br />
ஒவ்வொரு நபர்களும்<br />
என்<br />
பிரியத்திற்குரியவ்ர்கள்<br />
எனக்கான எதிர்பையோ<br />
மறுப்பையோ<br />
கொண்டிருந்தாலும்<br />
<br />
எனக்கான<br />
பள்ளங்கள் தோண்டியோருக்கும்<br />
இந்நேரத்தில் நான்<br />
என் பாசங்களை<br />
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்<br />
<br />
திருமணம் ஆனதும்<br />
திருப்பூர் சென்ற போது<br />
அடர் காட்டில்<br />
அமிழ்த்தப்பட்டதாய் உணர்ந்து<br />
குற்றம் சாட்டி,,,,,<br />
பேரம் பேசி,<br />
வாதாடி,<br />
போராடி,,,,<br />
மீண்டும்<br />
புதுகையே வந்துவிட்டேன்<br />
ஆனால் இப்போது?????<br />
<br />
நாற்றுகள்<br />
ஒரே இடத்தில் இருந்தால்<br />
வளர்ச்சியும் இல்லை<br />
முதிர்ச்சியும் இல்லை<br />
எனவே தான்<br />
இந்த மாறுதல்<br />
<br />
கை கூப்பி அழைக்கும் சென்னை<br />
என்னை<br />
ஆதரிக்குமா?<br />
அபகரிக்குமா ?<br />
ஆற்றுப்படுத்துமா?<br />
எதுவும் தெரியவில்லை.<br />
இப்போதைக்கு<br />
அதன்<br />
அழைப்பின் அணைப்புக்குள் கிடக்கிறேன்<br />
<br />
<br />
பரந்து விரிந்த மாநகரத்தில்<br />
எனக்கான<br />
பிரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்<br />
இயல்பில் பிரியமானவளுக்கு<br />
நிறைய நிறைய்ய<br />
பிரியங்களைக் கோர்த்திருக்கிறேன்<br />
நட்பால் வார்த்திருக்கிறேன்<br />
<br />
<br />
எங்கும் விதைத்திருக்கிறேன்<br />
எனக்கான<br />
பிரியங்களையும்<br />
கருத்து வேறுபாடுகளையும்<br />
நல்ல வேளை<br />
இது வரை<br />
நான்<br />
பகைமைகளைச் சந்திக்கவே இல்லை<br />
பகைமையென யாரையும் உணரவே இல்லை<br />
இறைவனுக்கு நன்றி<br />
<br />
இப்போது<br />
எல்லோரிடமும் கொட்டிச் செல்கிறேன்<br />
எனக்கான அன்புகளை மட்டும்<br />
<br />
<br />
என் பிரியத்திற்குரிய புதுகையே<br />
உன்<br />
பாதம் தொட்டு வணங்கி<br />
விடைபெறுகிறேன்<br />
என்னை<br />
ஆசிர்வதித்து அனுப்பு<br />
<br />
<br />
என் மூச்சுக்குள் நிறைந்த புதுகையே<br />
உன்னை<br />
என் உயிருக்குள் வைத்து<br />
ஆரத்தழுவுகிறேன்<br />
என் நெற்றியில் முத்தமிட்டு<br />
விடைகொடு!!!!!!<br />
<br />
<br />
இனியும் வருவேன்<br />
உன்னைக் காண<br />
விருந்தினர் போல<br />
ஒருநாள்...இருநாள்...<br />
பயணத்திட்டங்களுடன்<br />
<br />
<br />
என் பணிகள் சிறக்க செழிக்க<br />
உன்னிலிருந்து<br />
எடுத்துச் செல்கிறேன்<br />
ஊக்கங்களை<br />
ஆக்கங்களை<br />
அன்புகளுடனும்,<br />
நன்றிகளுடனும்<br />
<br />
<br />
இந்த ஊர்குருவி<br />
பருந்தாக ஆசைப்பட்டு<br />
பறந்து செல்கிறேன்<br />
<br />
<br />
வல்லூறுகளின்<br />
வலிமை பழகவில்லை நான்,,,<br />
எனினும்<br />
எனக்கான<br />
வளிமண்டலத்தில்<br />
வாகைசூடுவேன்<br />
அழுத்தமாய்...ஆழமாய்...<br />
<br />
என் பாதைகளில்<br />
பன்னீர் தெளிப்பார்களா?<br />
கண்ணீர் தெளிப்பார்களா?<br />
என அறியவில்லை நான்<br />
<br />
<br />
ஆனால்<br />
கண்ணீரையும்<br />
பன்னிர் ஆக்கிக் கொள்ள<br />
பழக்கு!!!!<br />
<br />
நினைவின் கூடுகளில்<br />
நீயே நிறைந்திருப்பாய்!<br />
<br />
<br />
உன்<br />
சேமநலநிதிக்கணக்கில்<br />
எப்போதும்<br />
எனை வரவில் வை<br />
<br />
<br />
வரலாற்றுப்பக்கத்தில்<br />
எப்போதும்<br />
எனை<br />
உறவில் வை...!!!!<br />
<br />
<br />
அழுத்தமாய்....ஆழமாய்...!!!<br />
<br />
உன் சுவாதி...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIfzXpCwI80cgWkRmu_Kb6kjvftG6VpHHvYxLJ2ySjxJ_ZnuX_pVHMIajDzmw7PMFnNxdCMYpsN21zvaTVcen_eTmlfW45tVTE02l0MLuHXNlv4DxmMW-KYuk-iM9L__KeEdObcVSuidY/s1600/12289516_1708215466076453_937590545481760561_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIfzXpCwI80cgWkRmu_Kb6kjvftG6VpHHvYxLJ2ySjxJ_ZnuX_pVHMIajDzmw7PMFnNxdCMYpsN21zvaTVcen_eTmlfW45tVTE02l0MLuHXNlv4DxmMW-KYuk-iM9L__KeEdObcVSuidY/s320/12289516_1708215466076453_937590545481760561_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
**************************************************************************</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-47390202534939107712015-12-08T12:52:00.003-08:002015-12-10T06:46:23.192-08:00இது கட்டுரை அல்ல....கண்ணீர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து விட்டு போகவும் என்று கத்திக் கொண்டே தான் சென்றனர்.<br />
<br />
* அவர்களே மிகத் துரிதமாகத்தான் கத்திக்கொண்டு சென்றனர். தீபாவளியை ஒட்டி வந்த மழையில் எல்லோர் வீட்டிலும் மூன்றடித் தண்ணீர்.எனவே, காவல் துறையினர் அறிவிப்பு செய்தும் சில பொருட்களைப் பரணில் பத்திரப்படுத்தி விட்டு படுக்கச் சென்று விட்டனர். அறிவிப்பு செய்த போது மணி 11.30..மூன்று நாட்களாய் ஒரு விநாடி கூட நிற்காத மழை. சாலையில் முழங்கால் அளவுக்குத் தான் தண்ணீர்.<br />
<br />
அரைமணி நேரத்தில் மழை கட்டிலைத் தாண்ட சில குடும்பங்களில் லாப்டில் ஏறி அமர்ந்துள்ளனர். ஆனால் அடுத்த இருபது நிமிடத்தில் மேற்கூரையைத் தாண்டி விட்டது நீர்.வெளியேயும் வர இயலாமல் அப்படியே சில குடும்பங்களோடு இறந்து கிடந்தது எல்லோர் மனதையும் குலைத்தது.<br />
<br />
புதிதாய் மராமத்து பணி செய்யப்பட்ட வீடு. தன் சேமநலநிதிக் கணக்கு மற்றும் வீட்டுக்கடன் பெற்று கட்டிய வீடு 20 ஆண்டுக்கடனில் 5 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருக்க , கட்டுமானப் பணியில் என்ன கோளாறு என்று அறியாமலேயே குடும்பத்தோடு இடித்துத் தள்ளிக் கொண்டே போய்விட்டது.<br />
<br />
அறிவிப்பு வந்த நேரத்தில் ஒரு சில கடைகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ( இரவு 2 மணிக்குப் போனாலும் எல்லா சாலைகளிலும் வாகனங்களும் மனிதர்களும் நகர்ந்த வண்ணமிருப்பர்.) முன்பே மழை மூன்றடிக்கு வந்து போயிருந்ததால் அவர்கள் இந்த அறிவிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.<br />
<br />
சர சர வென்று நீர்மட்டம் ஒரு பேய் வேகத்தில் உயர, திறந்திருந்த கடைகள் மட்டுமல்ல சாலைகளில் பயணித்தோர் அனைவரும் நீரோடு போராட முடியாமல், போய்ச் சேர்ந்தனர்.<br />
<br />
இருசக்கரவாகனங்கள், கார்கள், லாரிகள், வேன்கள், பஸ்கள், என்று அனைத்து வகை வாகனங்களும் உருட்டிக் கிடந்தது.<br />
<br />
சைதாப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு கணினியாளர் அன்று வேலை இருந்ததால் திடீரென்று அறிவிப்பும் அதைத் தொடர்ந்து கூச்சல், எல்லாம் கேட்க மாடியில் நின்று பார்த்தவர் உறைந்து போயிருக்கிறார். தன் கண்ணால் மரணங்களின் தொகுப்பைப் பார்த்து இன்னும் எந்த மிரள்வில் இருந்து மீளாமல் காணப்படுகிறார்.<br />
<br />
மாணவர்களுக்கு தண்ணீரின் அடர்த்தி பற்றி வேகம் பற்றி கற்பிக்க ஒரு பவுடர் டப்பாவில் மூன்று துளையிட்டு அதில் அடியில் இருக்கும் துளையில் தண்ணீர் அதிகமாக வருவதைச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று வகுப்பெல்லாம் தண்ணீராக்க்கி, ஆயாம்மாவிடம் கொஞ்சம் முனகல் பெற்று, ஆனாலும் விடாமல் அவர்களை தண்ணீர் ஊற்ற சொல்லிகிறேன் என்று நானே ஊற்றி ஊற்றி விளையாடி இருக்கிறேன். நீரின் வேகமும் அடர்த்தியும் இவ்வளவே நான் அறிந்தது. ஆனால் இழுத்துக் கொண்டு போன பலரை நேரில் பார்த்ததும் இன்னும் ரீங்கரிக்கிறது பயத்தின் அலறலும், உயிரின் பீதியும், கடைசியாய்க் கத்திய மரணவலியும்.<br />
<br />
மண்டபங்களில், பள்ளிகளில், பாதுகாப்பில் உள்ளோர் எண்ணிக்கையும் மரணத்தைத் தழுவியோர் எண்ணிக்கையும் குறைவாகத்தான் வெளியிடப்படுகிறது. ஏனெனில் உண்மைக் கணக்கு யாருக்குத் தெரியும்,,(அந்தந்த பகுதியில் பார்த்தவர்கள் தான் சாட்சி)<br />
<br />
இடுப்பு அளவையும் தாண்டி தண்ணீர் உள்ளே வந்ததால் இனி ஆபத்து நேரலாம் என்று உணர்ந்த ஒரு சகோதரி, தன் மகனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு(மூன்றாம் வகுப்பு) மற்றொரு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் சற்று பெரியவள் என்பதால் தனியே நடக்கவிட்டுக் கூட்டி வர தன் மகள் தண்ணீருக்குள் கரைவதைப் பார்த்த பின்னும் தன் மகளை இழுக்கப் போனால் கையில் இருக்கும் குழந்தையும் சிறுவனையும் கூட இழக்க நேரிடும் என்று உணர்ந்து இவர்களைக் காப்பாற்றி விட்டு தன் மகளின் சடலமாவது கிடைக்குமா என்று என்று கதறிய காட்சியைப் பார்த்த போது என் இதயம் சுக்கு நூறாகி வெடிக்கும் ஓசையை நானே கேட்டேன்,<br />
<br />
அறிவிப்பு வந்தபின் சாப்பிட்டு விட்டு நிதானமாக கிளம்ப கொஞ்சம் துணிகள், உணவுப் பொருளுடன் கிளம்பிய குடும்பம் மொத்தமும் அடித்துச் செல்லப்பட்டனர்.<br />
<br />
மழைநீர் தேங்கிய பகுதிகளில் சுற்றிலும் நீர் என்பதால் வெளியே வர இயலவில்லை. மின்சாரம் இல்லை. எனவே சுற்றி தண்ணீர் இருந்தும் குடிக்கத் தண்ணீர் இல்லை.<br />
<br />
கழிப்பறை வசதி இல்லாததால் உணவு உண்டால் தான் அந்தத் தொல்லை என்றே உணவே எடுத்துக் கொள்ளாமல் காலம் தள்ள முயற்சித்தோம்<br />
<br />
ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்த்து சாப்பிடு என்று சொன்னது போக , கொஞ்சம் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய் மா என்று சொல்ல ஆரம்பித்தோம்.<br />
<br />
திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் தான். ஆனால் ஆறு நாட்களும் நரகவேதனையில் 600 ஆண்டுகள் போல் நீண்டது<br />
<br />
முதல் தளத்தில் இருப்போர் கீழ்த்தளம் வரைதான் தண்ணீர் வரும் என்றும் மேலே வரை எட்ட வாய்ப்பே இல்லை என்று எண்ணிய எண்ணத்தில் விழுந்தது நீர்<br />
<br />
மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் நான்காம் நாள் மின்சாரம் வந்து விடக்கூடாது என்றே பயந்தோம். வந்தால், பூட்டப்பட்ட வீடுகளின் வழியாகவும் நீரால் சூழப்பட்டு உள்ளேயே இறந்து கிடந்தோரின் வீட்டின் மூலமாகவும் பல பகுதிகளில் மின்சாரம் வந்தால் தண்ணீர் வெளியேறாத நிலையில் தாக்கப்படுவோம் என்றே பயந்தோம். அதற்கு இருட்டு வாழ்வே தேவலாம் என்று தோன்றியது.(திங்கள் முதல் சனி வரை மின் இணைப்பும் வழங்கப்படவில்லை)<br />
<br />
கீழ்தளத்தில் சிலர் வண்டியை வைத்துப் பூட்டி சென்றிருந்தாலும் அது அடித்துச் செல்லப்பட்டு எங்கு போனதென்ற சுவடே தெரியவில்லை.<br />
<br />
அடித்து வரப்பட்ட இருசக்கர வாகனங்கள் பல இடங்களில் தேங்கிக் கிடந்தன. ஆனால், அவைகளை சுமந்தவர்களை,??<br />
<br />
வீட்டுக்குள் சுழற்றி அடித்த் தண்ணீர் அதுவாகவே பீரோவைத் திறக்க வைத்து, மிக்ஸி, கிரைண்டர், அடுப்பு சிலிண்டர், வாஷிங் மிசின்,பிரிட்ஜ் என்று அனைத்துப் போருட்களையும் சேதப்படுத்தி அல்லது அதனையும் அடித்துச் சென்றிருந்தது.<br />
<br />
நான்கு நாட்கள் கழித்து வீடு பார்க்கும் போது மாநாகராட்சிக் கழிப்பரையைவிட அலங்கோலமாகக் கிடந்தது.<br />
<br />
இன்னும் மேல் மாடி வரை எட்டியத் தண்ணீரின் அதிசயத்தை பே<br />
<br />
சிப் பேசி மாளவில்லை. மேல் தளத்திலும் 5 அடிக்குத் தண்ணீர்<br />
<br />
சுதாரித்தோர், மொட்டை மாடிக்கு சென்று நடுங்கும் குளிரில், மழையில் நனைந்து கொண்டே இருந்ததால் மொட்டை மாடிகளிலும் பிணங்களின் குவியல்கள்<br />
<br />
சர சரவென இடிந்த வீடுகளை வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே வந்த நிமிடத்தில் தண்ணீரால் இழுக்கடிக்கப்பட்டு மரணித்தனர்<br />
<br />
சென்னையின் பிரதான் சாலைகள் அனைத்திலும் தண்ணீர்..( அளவின் விகிதம் தான் கூடியதும் குறைவானதாகவும் இருந்ததே யன்றி எங்கும் நீரால் சூழ்ந்தது உலகு<br />
<br />
தீபாவளியை ஒட்டி வந்த மழையில் இடுப்பளவு மட்டுமே வீட்டுக்குள் புகுந்த்தால், பலர் வீட்டைவிட்டு போகாததாலும் இறந்தனர்<br />
<br />
கழிப்பறை அளவு உள்ள இடத்தையும் வீணாக்காமல் வீட்டாய் மாற்றி வாடகை பெற்ற சென்னை இன்று மொத்தமாகவே கழிப்பறை ஆனது<br />
<br />
சாலைகள் அனைத்தும் ஆங்காங்கே பிளவு பட்டு கார் முங்கும் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டதால் மறுநாள் வந்த கார்கள் மூழ்க சில சாலைகள் மூடப்பட்டு போக்குவ்ரத்தை தடை செய்து உத்தரவு போட்டிருந்தனர்.<br />
<br />
சென்னையின் மழை தாக்கத்தை மீம்ஸ் ஆக்கி மகிழ்ந்தோருக்கு உணமையில் மழையின் இறப்பு சதவீதமும் இழப்பு சதவீதமும் தெரியவில்லை<br />
<br />
எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர்தான். தனது ஊதியத்தில் வாங்கிய பொருட்கள் தான் அவ்வளவும். இனி அடுப்பிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் ஆரம்பிக்க வேண்டும். பாத்திரங்கள், சமையல் பொருட்கள், படுக்க, இருக்க என்று ஒவ்வொரு பொருளும் இனி வாங்கிச் சேர்த்துவிடலாம். ஆனால் இந்த மனபாரத்தைத் தான் எப்படித் தாங்குவது எனத் தெரியவில்லை<br />
<br />
அப்பா, அம்மாவை விட்டு இங்கே வேலை பார்த்தவர்கள், மனிவியை விட்டுப் பிரிந்து இருப்போர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பிரிந்து வந்தோர் தான் பெரும்பாலும். ஆனால் யாரும் யாருடனும் தொடர்பு கொள்ள இயலாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற தகவலுக்குக் கூட தொலைபேசிக்கு மின்சாரம் இல்லை. நெட்வொர்க்கும் இல்லை.<br />
<br />
வெளியூரிலிருந்து பால் பிஸ்கட், பிரட் போன்ற பொருட்கள் மக்கள் தங்கியிருந்த பள்ளிகள், மண்டபங்களை எட்டினாலும் பாதிப்பே இல்லாதோர் தான் முண்டி அடித்துக் கொண்டு வாங்கினர்.<br />
<br />
இதிலும் வியாபாரம் பார்க்க நினைத்த சிலர் அந்தப் பொருட்களையும் வாங்கி விற்றனர்.<br />
<br />
ஒண்ணாம் தேதியே மழை பெய்ததால் ஊதியத்தை ஏடிஎம் லிருந்து நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்த பணத்தையும் செலவு செய்து விட பாங்குகளில் எல்லாம் தண்ணீர் சூழ எந்த வங்கிகளும் இயங்கவில்லை. ஏடிஎம்மில் பணமும் எடுக்க இயலவில்லை. இதனால் அட்டைகளில் பணம் இருந்தும் எடுக்க இயலாத கொடுமையும் நேர்ந்தது<br />
<br />
இரவு இரண்டு மணியானாலும் காலை நான்கு மணியானாலும் போக்குவரத்து வாகனங்களாலும் மக்களாலும் தூங்காமல் விழித்திருக்கும் சென்னையில் அனைத்துக் கடைகளும் மூடியே கிடந்தன. வியாபாரிகள் பாடு கொண்டாட்டமாகவும் மக்கள் பாடு திண்டாட்டமாகவும் இருந்தது<br />
<br />
எங்கும் போக இயலவில்லை. எல்லாவற்றுக்கும் விலை வைத்தார்கள்.<br />
<br />
பால் 200 கத்தரி 200 மற்ற பொருட்கள் அதன் மடங்குகளில்<br />
<br />
சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் குறைந்ததும் நாங்கள் கேட்ட ஒலி எல்லாம் ஹெலிக்காப்டர் சத்தமும், ஆம்புலன்ஸ் சத்தமும்<br />
<br />
வேளச்சேரி பகுதியின் ஹவுசிங் யூனிட், கல்கி நகர், ராஜலட்சுமி நகர், விஜய நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, தண்டீஸ்வரம் நகர் தான் மற்ற பகுதிகளை விட பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது<br />
<br />
அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் இரண்டு நிமிட நடையில் எட்டும் தூரம் எல்லாம் 6 மணி நேரம் பிடித்தது. வெளியில் போனால் உயிரோடு மீண்டும் வீட்டுக்குள் வருவோம் என்ற உத்திரவாதமே இல்லை<br />
<br />
மண்டபத்தில் உணவு வழங்குகிறோம் என்ற போர்வையில் பெண்கள் கையைத் தடவி, வருடி, உணவு வழங்கிக் கொண்டது சில மனித மிருகங்கள்<br />
<br />
சில இடங்களில் தங்கும் போது மோசமாக நடந்து கொண்டிருக்கின்றனர்<br />
<br />
வெளியூரிலிருந்து வந்த பொருட்களை வியாபாரிகள் பிடிங்கி விலை வைத்து விற்றனர்.<br />
<br />
பிஸ்கட், பால், பிரட் என்று என்ன பொருட்கள் வழங்கினாலும் போட்டோ எடுத்துக் கொண்டனர் கொடுத்தவர்கள், அதில் அழகாய் இருப்பவர்கள் புறக்கனிக்கப்பட்டனர். அவர்களுக்கு சோக எஃபக்ட் பத்தலையாம்<br />
<br />
பலரின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளிருப்போர்களை மீட்ட கொடுமையும் நடந்தது.<br />
<br />
அனைத்து இடங்களிலும் கழிவுநீர் பாதாள சாக்கடைகள் மூடி தானே திறக்கப்பட்டு இரண்டும் ஒன்றாகக் கலந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது<br />
<br />
இவ்வளவு அழிவுகளைத் தந்த நீர் தனக்காக காவுகளை எடுத்துக் கொண்ட நேரம் அரை மணி நேரம் தான்<br />
<br />
முதல் நாள் முதல் தளம் வரை எட்டிய நீர் இரண்டு நாட்கள் கழித்து தான் சாலையில் இடுப்பளவில் நடக்கும் அளவில் குறைந்தது<br />
<br />
சாலையோரங்களில் மிக உயர்ந்த மரஙகளில் எல்லாம் முதல் நாள் அடித்துக் கொண்டு போன பாலிதீன்கவர்கள் தொங்கியது<br />
<br />
ஒரு மனநல்ம் குன்றியோர் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், டோனர்கள் கொடுத்த பணம், மளிகைப் பொருட்கள், அக்குழந்தைகளுக்குப் பயன்படுத்தப் பட்ட வேன் எல்லாம் எல்லாம் ஒட்டு மொத்தமாக அழிந்தது<br />
<br />
எல்லோருடைய வீட்டிலும் பள்ளிப் புத்தகங்கள் நீரோடு போய் விட்டது<br />
<br />
இப்போது எங்கள் வீடுகளில் அடுப்பு, மற்ற் சமையல் உதவி சாதனங்கள், மளிகைப் பொருட்கள் என்று எதுவும் இல்லை<br />
<br />
இதில் நான் குறிப்பிட்டுருப்பது 0.000000000001 சதவீதம் கூட முழுமையாய் சொல்லவில்லை.<br />
<br />
இன்னமும் மழைநீர் சூழ்ந்து வீடுகள் நிறைய இருக்கின்றன். உணவு பால் பொருட்கள் இல்லாமல் மின் இணைப்பும் இல்லாமல் என்ன செய்ய இயலும்?<br />
<br />
இன்னும் முழுமையாக நீர் வடியாததால் எங்கே ம்ன் கம்பிகள் ஷாக் அடிக்குமோ என்று பயந்து ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் விடப்படுகிறது<br />
<br />
இன்னும் பெரும்பான்மையான் கடைகள் திறக்கப்படவில்லை. காரணம் உள்ளே இருந்த பொருட்கள் இனி விற்பனைக்குகந்தவையாக இருக்காது<br />
<br />
இப்போது பலரின் மனது உதவியை விட ஆறுதலைத்தான் எதிர் பார்கிறது<br />
<br />
அன்பான வார்த்தைகளால் இழந்த பொருட்களை மீட்டெடுப்போம் என்று நான் நம்புகிறேன்<br />
<br />
ஆனால் உயிர்கள்???<br />
<br />
அதே போல் இதைச் சாக்கிட்டு பெண்களைத் தவறான முறையில் அணுகியோர்கள் அழுகிச் சாக வேண்டும் என்று சாபமிட்டாலும் இறைவா அவர்களுக்கு நல்ல மனதைத் தா என்று வேண்டுகிறேன்<br />
<br />
இனி வரும் ஊதியத்தில் ஒவ்வொன்றாய் வாங்கலாம். பிறக்கும் போதே எல்லாம் கொண்டா வந்தோம்??????<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com41tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-66680426185880135752015-11-30T00:30:00.002-08:002015-11-30T01:26:59.850-08:00இதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை விட்டு தலை நகரம் நோக்கி நகர்ந்திருக்கிறேன்..<br />
<br />
மாறுதல் கிடைக்க வில்லை ( கிடைக்கவே கிடைக்காது) என்பதால் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறேன்.<br />
<br />
ஒருநாள் அல்லது இருநாட்கள் மட்டுமே புதுகையில் என்பதால், புதுகை செல்வது தான் எனது பயணக் கட்டுரை..( வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் எழுத வேண்டுமா என்ன? என் நாடு புதுகை தான்...)(இம்முறை திங்கள் முதல் சனி வரை)<br />
<br />
இதனை வருத்தங்கள், ஏக்கங்கள்,பெருமைகள், வேலைகள், பார்வைகள், செய்திகள் என்ற உணர்வுகளில்...வரிசையாக...அல்லது வரிசையற்று..<br />
<br />
வருத்தங்கள்<br />
**************<br />
1.புவனேஸ்வரி கோயில், புதுக்குளம், பிரகதம்பாள் கோயில், நார்த்தாமலை, குமரமலை, போக நினைத்தேன்...போகவில்லை.<br />
<br />
2.புதுக்குளக்கரையில் தனிமையில் அமர்வது மிகவும் பிடிக்கும்..ஆனால் நேரம் ஒதுக்க இயலவில்லை.<br />
<br />
3,பெரியார் நகர் பூங்காவில் அமரவும், ஆரோக்கியசாமி அம்மாவிடம் பேசவும் நினைத்தேன்.<br />
<br />
4. வாணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது . பார்க்க வில்லை.<br />
<br />
5. கார்த்திகை தீபம் அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மேன்மைமிகு சரஸ்வதி ராமநாதன் அம்மா தலைமையில் பட்டி மன்றம் சென்று விட்டதால் உள்ளூரில் முருகன் கோயில்களுக்குச் சென்று சொக்கப்பனை பார்க்க இயலவில்லை.( கோயில்கள் செல்லவில்லை என்று நான் எழுதுவதைப் பார்த்து நான் மிகப் பெரிய பக்திமான் என்று என்னை நினைத்து விடாதீர்கள்..தயவு செய்து)<br />
<br />
6. எனக்கு தினமும் சிகப்பு ரோஜாக்களைத் தரும் சீதா அக்காவை ( உடல்நல குறைவாய் இருக்கிறார்) பார்க்கவில்லை.<br />
<br />
7.நீலா,குணா,வசந்தி,வளர்மதி,ரேவதி,அருணா,டயனா,தேவகி,பாத்திமா,பஷீரா,நிஷா ஆகியோர்களைப் பார்க்கவில்லை<br />
<br />
8. சேமநலநிதிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும்..இயலவில்லை. அரியர் ஒன்று மூன்று வருடங்களாய் கிடப்பில் இருக்கிறது.அதற்கான ஏற்பாடுகள் செய்ய இயலவில்லை.<br />
<br />
ஒரு வாரம் இருந்தும் பள்ளி சென்று மீதமான நேரத்தில் நிறைய பணிகள் இருந்ததால் என் பயணத்திட்டத்தில் இவையெல்லாம் இருந்தும் என்னால் செயல் படுத்த இயலவில்லை.<br />
<br />
இன்னொரு வருத்தமும், பார்த்த எல்லோரும் கொஞ்சம் குண்டாகி வந்திருப்பதாகச் சொன்னார்கள்.<br />
<br />
பெருமைகள்<br />
*****************<br />
1. ஒரு பட்டிமன்றம் பேசி விட்டேன்<br />
<br />
2. த.மு.எ.க.ச. திருக்கோகர்ணம் கிளை கூட்டம் நடத்தி விட்டேன்..<br />
<br />
3.பள்ளியில் குழந்தைகள் தின விழா நடத்தி விட்டேன்.<br />
<br />
4, ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தி விட்டேன்<br />
<br />
5. பள்ளிக்கு எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரையும் பள்ளிக் கருத்தாய்வாளர்களையும் வரச்சொ ல்லி ஒரு சிறிய பெற்றோர் சங்கக் கூட்டம் நடத்தி விட்டேன்<br />
<br />
6. பசுமைப் படைக்கு தாவரங்கள் சிலவற்றை ஊருக்குள் நட்டு (வேப்பம் கன்றுகள்) அதனை பராமரிக்க ஆட்கள் நியமித்து விட்டேன்.<br />
<br />
7. நான் வரும் சனிக்கிழமை( கிளம்பும் நாள்) என் மாணவர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற தலைப்பில் என்னை மகிழ்விப்பதாய் நினைத்து தங்கள் தனித்திறமைகளைக் காட்டி அவர்களே திறம்பட ஏற்பாடு செய்து நடத்தினார்கள்..( என் பிள்ளைகளை நான் நல்லா வளர்த்திருக்கே ன்னு உணர்ந்த தருணம் அது..என் பிள்ளைகள் என்று நான் சொன்னது என் மாணவர்களை)( இந்த அன்புக்கு நான் இன்னும் இரண்டு ஜென்மங்கள் எடுத்து நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்)<br />
<br />
8. கண்ணதாசன் விழாவிற்கு சென்று கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் பேச்சையும் திரு முத்துநிலவன் அவர்களின் பேச்சையும் கேட்டு வந்தேன்..(கிளம்பும் போது..அங்கிருந்து அப்படியே பேருந்து ஏறிவிட்டேன்)விழாவில் முபா,கஸ்தூரிநாதன்,கஸ்தூரிரெங்கன்,முருகபாரதி,பொன்க,திருப்பதி,குருநாதசுந்தரம்,முத்துசீனிவாசன்,சம்பத்குமார்,பாரதி,இளங்கோ எல்லோரையும் பார்த்தேன்..( எல்லாப் பெயர்களுக்கு முன்னால் திருவும் பின்னால் அவர்களும் போட்டுப் படிக்குமாறு வேண்டுகிறென்)<br />
<br />
அன்புகள்...ஆதரவுகள்..நெகிழ்வுகள்<br />
***********************************<br />
<br />
1. என் மாணவர்கள் என்னைச் சுற்றி நின்று கொண்டே இருந்தனர். ( வகுப்பறை சத்தமாகவே இருந்தது..ஆனால் நான் ரசித்தேன்.நேசித்தேன்.<br />
<br />
2. வாயே திறக்காத முத்து, நல்லாருக்கியாப்பா, எப்போ வந்த, எப்போ போறே, இனி எப்ப வ்ருவ? என்று 4 கேள்விகள் கேட்டுவிட்டான்..(பள்ளித் தோழன்)<br />
<br />
3. நான் இங்கே இருந்ததை விடவும் அதிக நட்பையும் அன்பையும் பெற்றிருக்கிறேன்.<br />
<br />
4. முதல் நாள் (திங்கள் கிழமை ) தலைமைஆசிரியர் கூட்டத்தில், ஆறு கூட்டங்களாக வராதது கண்டு அனைவரும் நலம் விசாரித்தனர். சென்னையில் வெள்ளம் பற்றி கேட்டறிந்தனர்.<br />
<br />
5. நான் புதுகையில் இருக்கும் போது என்னைக் கண்டு கொள்ளாதவர்கள் எல்லாம் வாகனங்களை நிறுத்தி நலம் விசாரித்தனர்.(நான் தான் உயிர் என்று வசனம் பேசியவர்கள் வாய் திறக்கவில்லை)<br />
<br />
6. வேளச்சேரியில் வெள்ளம் பற்றி கேட்டறிந்து கொண்டனர். மீனா, வத்சலா, குழுவினர்<br />
<br />
7. எதிரில் நடந்து போனாலும் கண்டு கொள்ளாத கதிரேசன் தன் மனைவியோடு பள்ளிக்கு வந்து பார்த்துச் சென்றான்...<br />
<br />
8. நலமா சுவாதி என்ற விசாரிப்பில் ஸ்டாலின் குரலில் அவ்வளவு அன்பு(உணர்ந்தேன்.உணர்ந்தேன்)<br />
<br />
9. இம்முறை தொலைபேசியில் பேசியதை விட அதிகம் பேசினார் தோழர் மதியழகன்<br />
<br />
10. சக்ஸஸ் புத்தகக் கடையும் எஸ்.பி.எம் புத்தகக் கடையும் சென்றதில் விசாரிப்புகள். ( இங்கே தான் புத்தகங்கள் வாங்க வேண்டுமாம்..தொலைபேசியில் சொல்லச் சொன்னார்கள்)<br />
<br />
11. முருகேசன்,வசந்த்,காளியப்பன்,இசாக்,இஸ்மாயில் ( என் வகுப்புத் தோழர்கள் இதில் இருவர் ஆசிரியர்கள் மற்ற மூவரும் மளிகைக் கடை சொந்தமாக வைத்திருக்கிறார்கள்..) புதுகை என்னை மிஸ் செய்வதாகச் சொன்னார்கள்.<br />
<br />
12 நண்பன் சுரேஷ், தம்பி சுரேஷ், அண்ணன் சுரேஷ் மூவரையும் பார்த்தேன்..பேசினேன்.(கடைவீதிகளில்)(எங்கள் ஊரில் சுரேஷுகள் அதிகம் என் பள்ளியில் 6 சுரேஷ்)<br />
<br />
13. கலா, மீனா, சுந்தரி, பாமா வோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்..( ஒரே சிரிப்பு..( கான்பிரன்ஸ் கால்)<br />
<br />
14 சுரேஷ் அதிகமாகவே நலம் விசாரித்து, என் வருங்காலத் திட்டம், வாழ்வியல் சிந்தனை என்று பேசி என்னை மகிழ்வில் ஆழ்த்தினார்( இது வேறு சுரேஷ்...அட நீ இவ்வளவு பேசுவியா சுரேஷ்????)<br />
<br />
15. இப்போது என்னும் அதிகமாக நெருக்கத்தையும் அன்பையும் உணர்கிறேன்.<br />
<br />
எஸ்.இளங்கோ சார் புதுகையில் நான் வராத வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறியதோடு, அவரின் சில கருத்துக்கள், ஆதங்கங்கள் ஆகியவற்றை சொன்னார். (நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட நட்புரை)<br />
<br />
16. பேரா,மாதவன், நிறைய பேசினார் பல செய்திகளை, நினைவுகளை, பகிர்ந்து கொண்டார்.. ( இப்போது அவர் வீட்டருகே அல்லவா?)<br />
<br />
17. நிர்வாக ரீதியாக அருள் அண்ணாவுடன் ஒன்றரை மணிநேரம் பேசினேன்..(அதில் கொஞ்சம் என் குடும்பம் பற்றியும்)(எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்<br />
<br />
18.தொலைபேசியில் ஏற்கனவே என் தன் விருப்ப ஓய்வு பற்றி விவாதித்த திரு கவிஞர் தங்கம்மூர்த்தி நேரிலும் மறு ஒளிபரப்பு செய்தார் சற்று கூடுதலான அக்கரையுடனும், அன்புடனும்`<br />
<br />
19ஆக்ஸ்போர்டு சுரேஷின் கருத்தும் இதே தான்..(நிறைய பேசினோம்)<br />
<br />
20.ஒரு நண்பனின் குறுஞ்செய்தி..பட்டிமன்றம்,பள்ளி, கூட்டம் நடத்தல், கூட்டம் செல்லல், நட்பு வட்டங்கள் சேர்த்தல் என்று எல்லாவகையிலும் மிளிர்ந்தாய் நன்று வாழ்த்துக்கள் என்று இருந்தது..அவனுக்கு நன்றி..<br />
<br />
வேலைகள்<br />
*************<br />
என் சொந்த வீடு சென்று பார்த்து வந்தேன்.<br />
<br />
2. நான் வளர்ந்த வீட்டையும் பார்த்து வந்தேன்..( அதிக மன பாரத்துடன்..அது விற்கப்பட்டதால் ,கொஞ்சம் கலக்கமானது,சிறிது நேரம் தான்..)<br />
<br />
3. நகைக் கடன் வாங்கியிருந்த இரு வேறு வங்கிகளில் கடனின் வட்டியை கணக்கிட்டு வந்திருக்கிறேன்<br />
<br />
4. பெரியவள் அவள் ஆசிரியருக்கு கடிதம் வழங்கியிருந்தாள்.( சமர்த்தாகக் அதனை அவர்களிடம் சேர்த்து விட்டேன்...அந்த ஆசிரியரின் கண்களில் சிறு கண்ணீரையும் கண்டேன்..அவருடைய கணவரை அழைத்து சத்தமாகப் படித்துக் காண்பித்தார்...ஒரு ஆசிரியராக நானும் அந்த மகிழ்வை உணர்ந்தேன்)<br />
<br />
5. குழந்தைகளுக்கு மணப்பாறை முறுக்கு, மறமடக்கி கடலை, அங்கே இனிப்பகத்தில் இனிப்புகள், அவள் வழக்கமாக சாப்பிடும் காரசேவ் போன்றவை வாங்கிக் கொண்டு, முறுக்கு மாவும் அரைத்து எடுத்து வந்துள்ளேன்,<br />
<br />
6. செட்டியார் கடையில் எண்ணெய்க்கு செட்டியார் அய்யா தொலைபேசி செய்திருந்தும் வாங்க நேரம் இல்லை.<br />
<br />
7. புதுகையில் அடுப்பு இல்லாததால் காலையில் ஆச்சி கடையில் மாலை நேரம் பிருந்தா,வீரமணி,சங்கர் கபே என்றும் சாப்பிட்டுக் கொண்டேன்<br />
<br />
8. வற்புறுத்தி சாப்பிட அழைத்த தோழிகளை மறுதலித்து விட்டேன். என் வீட்டில் அடுப்பு இருக்கும் போது கூப்பிட்டால் அது விருந்தோம்பு. அது இல்லாத நிலையில் என்னைக் கூப்பிடுவதால் அதுக்குப் பேர் (?) அதனால் அவர்கள் அழைப்பை புறக்கணித்தேன்,( என்னை மன்னிப்பார்களாக)<br />
<br />
<br />
நான் இனி சந்திக்கவே கூடாது என்று நினைத்த இருவரைச் சந்தித்தேன்..அவர்களோடு பேசவும் நேர்ந்தது...(பிரியமாய் பேசுவது போல் நடித்தனர்)(ஒரு ஆண்..ஒரு பெண்)<br />
<div>
<br /></div>
<br />
பின்குறிப்பு:<br />
*************<br />
<br />
இதில் புதுகையில் இருந்த போது பலர் பேசாதவர்கள் கண்டு கொள்ளாதவர்கள், மெல்லிய புன்னகை மட்டும் தருவோர்கள் என்று அனைவரும் அடக்கம்..ஆனால், ஒவ்வொருவரின் பேச்சிலும், அன்பை உணர்ந்தேன்...நன்றி .புதுக்கோட்டை...<br />
<br />
பெரும்பான்மையானவர்கள் இன்னும் எனக்கு 15 வருடம் சர்வீஸ் இருப்பதால் நான் வி.ஆர்,எஸ் கொடுப்பது வேண்டாம் என்றே சொன்னார்கள். (ஏ.இ.ஒ உள்பட)<br />
<br />
அடுத்த முறை என் பயணத்திட்டங்கள் மிகச் சரியாக வடிவமைத்து ஒவ்வொன்றுக்கும் மிகச் சரியான நேரப் பங்கீடு கொடுக்க வேண்டும்..<br />
நேர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்..<br />
<br />
I MISS YOU PUDUKKOTTAI<br />
<br />
*********************************************************************************<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-82341448341979582012015-11-17T07:14:00.001-08:002015-11-17T07:29:52.538-08:00மழ...மழ...மழ..மழ...மழேய்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\ளின் மழை முற்றிலுமாக பயத்தைத் தந்துவிட்டது.<br />
<br />
சென்னையின் தனித்தீவாக ஆகிவிட்டது வேளச்சேரி பகுதி..<br />
<br />
ஒரு கதையில் படகுக்காரனும் படித்தவனும் பேசுவது மாதிரி..எல்லாம் கற்றதற்கு நிஜம்மாவே நீச்சல் கற்றிருக்கலாம் என்றே தோன்றியது..<br />
<br />
நான் பார்த்தவை...<br />
<br />
1. கீழ்தளத்தில் இருந்தவர்களும், தரைதளம் மட்டுமே கொண்ட வீட்டுக்காரர்களும் வீட்டுக்குள் தண்ணி போகப் போகிறது என்று தெரிந்ததும் எல்லோரும் மண் மூட்டைகளை விலைக்கு வாங்கினார்கள். அவரவர் பாத்ரூமில் மூட்டைகளைப் போட்டு அடைத்து விட்டு வேறு இடம் சென்றனர்.( கிருமி தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்களாம்)<br />
<br />
2. மழை ஊரே வெள்ளம். ஆங்காங்கே நடைபெற்றன.பஜ்ஜி,பக்கோடா விற்பனை..( எங்கேர்ந்து வந்தீங்க? எப்ப சுட்டீங்க?)<br />
<br />
3. கடை வைத்திருந்தோர் மூடி விட்டனர். தள்ளு வண்டிகள் , மற்றும் ஒரு டி.வி.எஸ் பிஃப்டி கூட தற்காலிக தேநீர் கடையாக மாறியது.( அட பாருங்கய்யா அங்கயும் ஆண்கள் கொத்தா நின்னு டீ குடிச்சிட்டு, பாரிஸ் கதைகளையும், பிரிட்டன் நடைமுறைகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.)( எப்பவுமே இப்படியா அல்லது இப்படித்தான் எப்பவுமேமா என்பதை என் மூளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.)<br />
<br />
4. அந்தத்தந்தப்பகுதியின் கட்சிக்காரர்கள் வந்து இவர்கள் அவர்களைப் பார்த்து அவர்கள் வைத்து விட்டுப் போன லட்சணங்களால் தான் தமிழகமே தடுமாறுகிறது என்று சொல்லி திட்டித் தீர்த்தனர்.`பிறகு வேறு ஒரு பெரிய்ய்ய கட்சி அண்ணாச்சியும் இவர்கள் ஆட்சியில் எல்லாமே இப்படித்தான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டனர். ( கடைசி வரை தண்ணீர் வெளியேற்ற ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய வில்லை)<br />
<br />
5. கழிவு நீர் ஊர்தியாளர்கள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மணிநேரம் என்று பேரம் பேசி, தண்ணீர் எடுத்து விட்டனர்.<br />
<br />
6. கோயம்பேடு தண்ணீரில் நிரம்பியதால் காய்கறிகறியே கிடைக்காமல் வீட்டில் என்ன இருந்ததோ அதனை சாப்பிட்டு பசி போக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். அசைவர்களுக்கு மீன் கிடைத்தது. ( அவர்களே அவர்களுக்குத் தேவையானதை பிடித்துக் கொண்டனர்.)<br />
<br />
7. எங்கள் வீட்டின் முன்பாக காட்சி அளிக்கும் ஏரி.....இந்த வேளச்சேரி ஹவுசிங் யூனிட் பகுதி முழுமையுமே ஏரியின் இடம் தானாம்..( அதான் , பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஏரி...என் இடத்தை எனக்குத் தா என்று கேட்க வந்தது போல் இருந்தது..வெள்ளம்)<br />
<br />
8. பிரதான சாலையில் வழக்கமாய் ஒரு தோசை 80 ரூபாய்க்குத் தரும் ஹோட்டல்கள் அன்றைய தினம் 150 ரூபாய் என்றது.( அதனையும் மக்கள் உண்டார்கள்)( வீட்டில் அடுக்களை வரை தண்ணீர் புகுந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதனையும் புசித்து பசியாறினர்.)<br />
<br />
9. 25 ரூபாய்க்கு தோசை தந்தவர்கள் 80 ரூபாய் என்றார்கள். சோளம், கடலை என்று தின்பதற்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது...( ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை மூன்று நாட்களில் செலவாக இருக்கும் போல் ஒரு காட்சிப்பிழை அல்லது கருத்துப் பிழை எனக்கு மட்டும் தோன்றியது)<br />
<br />
10 .பால் இருந்தாலும் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்திற்கே பால் தந்தனர். அவர்கள் தான் கேட்ட விலையையும் தந்தனர். பாலின் விலை லிட்டருக்கு 100 ரூபாய்<br />
<br />
11. காய்கறிகள் , பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. கிடைத்தாலும் இரட்டிப்பு மடங்கு வைத்து விலை பேசப்பட்டது.<br />
<br />
12. பள்ளிப் பிள்ளைகள் தண்ணீருக்குள் நடந்து நடந்து தங்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொண்டனர். (பெரும் பாலும் ஆண்பிள்ளைகள்)<br />
(இனி எப்போது தண்ணீரைக் காண்பார்களோ)<br />
<br />
13. அலுவலர்கள் வேலைக்குப் போக வேண்டியிருந்தது . ஆனால் சாலை போக்குவரத்து சில இடங்களின் வழியாக செல்வதை தடை செய்யப்பட்டிருந்ததால், எப்படியும் போக முடியாமல் தவித்தனர். சில ஆட்டோ ஓட்டுநர்கள் நிறைய சம்பாதித்தனர். சிலர் சவாரி கிடைக்காமல் ஆனால் கிடைக்கும் என்ற ஆசையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தனர்.<br />
<br />
14. எங்கள் பகுதியில் இருக்கும் தியேட்டரில் கடந்த மூன்று தினங்களும் 6 ஷோக்கள் ஓடியது.( மழையின் காரணமாக வெளியே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டவர்கள் வீட்டுக்கு வராமல் இருக்க என்ன செய்வது என்பதால் அப்படி நிரம்பி வழிந்தது என்றும், தல” படம் என்பதால் என்ன மழை கொட்டினாலும் பார்ப்பது தான் ரசிகர்களின் இலக்கணம் என்பதாலும் அப்படி வழிந்ததாகப் பேசிக் கொண்டார்கள்.( உண்மை நான் அறியேன்)<br />
<br />
15. கழிவு நீர் வெளியேற்றும் பாதாள அல்லது திறந்த நிலை சாக்கடைகளில் பாலீதீன் கவர்களும், பெப்ஸி கோக் போன்ற பாட்டில்களும், மதுபாட்டில்களும் அதிகம் தென்பட்டு அவற்றாலும் விரைவில் தண்ணீர் வெளியேற்றப்படுவது தாமதமானது.<br />
<br />
16. எல்லோரும் எல்லோரையும் திட்டிக் கொண்டனர். பாலிதீன்களை ஒழிக்க வேண்டும் என்று சபதம் ஏற்றனர். கையில் பாலிதீன் கவர்களில் இருந்த பால் அல்லது மற்ற பொருட்கள் வாங்கிக் கொண்டே,..<br />
<br />
17. கார் தண்ணீரில் மூழ்கும், காட்சியைப் பார்த்த டூ வீலர் காரர்கள், அல்லது அதை வாங்க இயலாமல் பொறாமையோடு பார்த்தவர்கள் எல்லோரும் அந்தக் காட்சியைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்`<br />
<br />
18. குப்பைகளை ஆங்காங்கே வீசிவிட்டுச் சென்றனர். தண்ணீரில் அதுவும் மிதந்து வந்தது. எல்லோரும் அதனைப் பார்த்துக் கொண்டே அதனை செய்து கொண்டே அதனைக் கடந்தனர்.<br />
<br />
19. இன்னும் சென்னை கழிவு நீர் வெளியேற்றத்தில் விழிப்புணர்வு பெற வேண்டும். என்று ஆளாளுக்கு, சாலமன் பாப்பையாவாக மாறி தீர்ப்பளித்தனர்.<br />
<br />
20..மூன்று நாட்கள் முற்றிலுமாக மின்சாரம் தடை செய்யப்பட்டது..( மாவு அரைத்தால் தானே தோசை, சட்னி..தண்ணீர் வந்தால் தானே குளிப்பு துவைப்பு...ஏதும் நடக்கவில்லை)<br />
<br />
<br />
21. தண்ணீர் சற்று வெளியேற்றப் பட்ட நிலையில் (இப்போது)சாலைகளில் தார் எல்லாம் தண்ணீரோடு போய் வெறும் சரளைக் கற்களாகக் காட்சியளிக்கிறது சாலைகள்...( சில பகுதிகளில் இன்னும் கூட தண்ணீர் வெளியேற்றப்படவில்லை)<br />
<br />
<br />
இவ்வளவு நடந்தும்..<br />
**********************<br />
<br />
<br />
. துணி காயப் போட முடியவில்லை என்று இரண்டாம் தளத்தின் இந்திரா அலட்டிக் கொண்டது தான் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது.<br />
<br />
<br />
மற்றொரு விஷயம் சரவணாஸ்டோர்ல இப்பவும் கூட்டமாம் </div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-42679704404943572072015-11-17T02:06:00.002-08:002015-11-17T02:07:15.966-08:00பாடாதே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கனவுக் காட்சிகள்....பாடாதே.....கவிஞர் சுவாதி...கல்கியின் தீபம் இதழில் தொடராக வந்து கொண்டிருப்பது....10<br />
<div>
*********************************************************************************</div>
<div>
<br /></div>
<div>
அன்பிருந்தால் பாடாதே “ இந்த வார்த்தை காளிதாசனை நிலை குலையச் செய்தது. சொன்னது யார்? அவன் ஆராதிக்கும், அவனை ஆட்டுவிக்கும் காளிதான். காளிதாசனைப் பொருத்த வரை காளி தேவி கடவுள் இல்லை: ஒரு தோழி,தாய், தங்கை, மகள் என்று எல்லா விதமாகவும் இருந்தவள் அவள்தான். அவளா சொல்கிறாள் “பாடாதே” என்று.</div>
<div>
<br /></div>
<div>
மெலிந்த தேகமாகவும் தீட்சண்யமான கண்களும் கொண்ட காளிதாசன் எப்போதும் சூலம் வரைந்த பின் வெளியில் செல்லும் பழக்கம் கொண்டவன். சூலமாய் இருந்து தனக்கு வரும் தீங்குகளைக் களைந்து, நன்மைகளைக் கொண்டு வருவாள் காளி என்றே நம்பினான்.</div>
<div>
<br /></div>
<div>
ருதுசம்ஹாரம், மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம் என்று உலகளவில் ஒப்பற்ற இலக்கியம் படைத்தவன் காளிதாசன். இந்தப் பெயர் வரக் காரணமாய் இருந்தவள் காளி. காரியமாய் இயங்கியவளும் அவள் தான்.</div>
<div>
<br /></div>
<div>
காளிதேவிக்கும் காளிதாசனுக்குமான பிணைப்பை சொல்லி முடியாது. அந்தப் பிரியங்களின் வடிவைப் படைக்க, பகிர, வடிவமைக்க ஏதும் இல்லை. அதனால் தான் அவனுடைய எழுத்துக்களில் இறைமையின் எல்லையும் இருந்தது. இளமையின் துள்ளலும் இருந்தது. ஏனெனில், எல்லாவற்றுக்கும் காளிதேவியே மின்மொழிந்தாள்.</div>
<div>
<br /></div>
<div>
ஆடு மேய்க்கும் காலங்களில் மட்டுமல்ல: எப்போதும் இயற்கையுடன் இணைந்தவன், இயல்பாகவே மக்களோடு இயைந்து போகிறவன். காலம் அவனை உச்சத்தில் வைத்த போதும் இயற்கையை நேசிப்பது , மற்றவர்களை நேசிப்பது என எதுவும் மாறவில்லை: மாற்றிக் கொள்ளவே இல்லை. காளிதாசனிடத்தில் எது செய்த போதும் அதில் புதுமை இருந்தது. அவனது உழைப்பில் வேகமும், செயல்களில் விவேகமும் இருந்தது. குறைபாடுகள் உடையோர் மட்டும் தான் மனிதர்கள் என்ற வார்த்தைகளையும் உடைக்கத் தெரிந்தவன் அவன். உருவ அழகு சுமாராக இருந்தாலும் உள்ளத்தால் தேவாழகு பெற்றிருந்தவன். உருவ அழகைவிட உள்ள அழகை இந்த உலகம் கொண்டாடத் தவறுவதில்லை. </div>
<div>
<br /></div>
<div>
உலகஎமே கொண்டாடும் போது போஜமன்னன் மட்டும் கொண்டாட மாட்டானா? எழுத்தால், இலக்கியத்தால் இணைந்த பிணைப்பு தான் இருவருக்கும். பொதுவாக, திருமணத்துக்குத்தான் பத்து பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஆனால், நாம் வாழ்க்கையில் பார்ப்போர், பழகுவோருக்கெல்லாம் பார்த்தால் ஆகுமா? அப்படியான பொருத்தங்களை உடையோர் தான் இருவரும். மற்ற கவிஞர்களைத் தாண்டி, படைத்தலைவவை, அமைச்சர்களைத்தாண்டி, மற்ற பணியாளர்கள், ஏன் பட்டத்தரசியையும் தாண்டிய ஒரு பிரியமும், பாசமும் கொண்டிருந்தான் மன்னன்.</div>
<div>
<br /></div>
<div>
அப்படி எத்தனை பேருடன் நமக்கான இணக்கம் இருக்கும்? எல்லாப் பாத்திரங்களிலும் பொருந்திப் போகும் தண்ணீராய் இருந்தான் காளிதாசன். அதே சமயம் தன் கொள்கைகளில் ஒன்றைக்கூட அவன் விட்டுத் தருவதில்லை. பிறரை மாற்றுவதில் காளிதாசனுக்கு நிகர் அவனேதான். ஒரே ஒருவன் திடமானவனாகவும், நெகிழ்தன்மை உடையவனாகவும் இருக்க முடியுமா? மன்னனுக்கு வியப்பு. இப்படி ஒரு மனிதனை , மகா கவிஞனை தன் வாழ்நாளில் சந்தித்திருக்கவில்லை. அவன் என் அரசவைக் கவிஞன் என்ற இறுமாப்பு, பெருமிதம் எல்லாமும் இருந்தது.</div>
<div>
<br /></div>
<div>
அவன் நட்பிலும், பேச்சிலும், செயலிலும், அப்படிப்பட்டவனைத்தான், “பாடாதே” என்கிறாள் காளி. </div>
<div>
<br /></div>
<div>
காலை முதல் இரவு வரை எல்லா நேரங்களிலும் இலக்கியம் அன்றி வேறொன்றும் அறியாதவன, “பாடு, பாடு” என்று ஆற்றுப்படுத்தி மாளவிகாக்கினி மித்திரம், விக்கிரம ஊர்வசியம், அபிஞான சாகுந்தலம் என்ற புகழ் பெற்ற இலக்கியம் தந்த ஒருவனைத்தான் “ அன்பிருந்தால் பாடாதே” என்கிறாள் காளி</div>
<div>
<br /></div>
<div>
காளிதாசனுக்குத் தோன்றிய கனவு இது தான். அருள் பொங்கும் காளீதேவி, அன்பிருந்தால் பாடாதே” என்று சொல்வது போல், கீழே பச்சை தென்னை ஓலை காண்பிக்கப்படுகிறது. இந்தக் கனவால் தான் இந்தக் குழப்பம்.</div>
<div>
<br /></div>
<div>
பாடு என்றோ, செய் என்றோ ஊக்கம் கொடுத்துத்தானே காளிக்கும் பழக்கம், மாறாக, செயலற்று இரு என்று சொல்வாளோ என்று சிந்தித்துக் கொண்டே இருந்தவன் துள்ளிக் குதித்தான்.</div>
<div>
<br /></div>
<div>
கனவில் வந்தது காளிதேவியின் கருணை முகம் தாங்கிய உருவம் தான். ஆனால், குரல் தனக்குப் பழக்கப்பட்ட ஒரு குரல். யார் குரல்? ஆம்: அது மன்னனின் குரல்.</div>
<div>
<br /></div>
<div>
பச்சைத் தென்னை ஓலை காட்டப்பட்டதே...அப்படியானால் அது இறப்பைக் குறிக்கிறதே...நான் பாடினால் என் இனிய நண்பன் மன்னனுக்கு ஆபத்தா? என் பாட்டால் உற்சாகம் அல்லவா பெறுவான்?</div>
<div>
<br /></div>
<div>
சிந்தனை வலுப்பெற்று, கேள்விகள் மூளையை துளைத்தெடுத்தன. ஒருவேளை பகலில் யாருடனாவது பேசியது, எதிர்மறையாக எனக்குள் கொண்டு வந்து அப்படி பிரமையாக்கியதோ? எதார்த்தமாக ஒரு சாதாரணக் காரணமாக இருக்கலாம். சரிதான். அதை மறந்து விட வேண்டியது தான் என்று நினைத்த வேளையில் மன்னன் அழைத்தான்.</div>
<div>
<br /></div>
<div>
“ நண்பா, உன் பாடல் எல்லாவற்றையும் கேட்கும் பாக்கியமும் அதிஷ்டமும் பெற்றேன். ஆனால், இரங்கற்பா கேட்கவில்லை.. எனவே, இரங்கற்பா பாடு” என்றான்.</div>
<div>
<br /></div>
<div>
நிமிடத்தில் புரிந்து விட்டது காளீதாசனுக்கு. கனவின் எச்சரிக்கை இதுதானா?</div>
<div>
<br /></div>
<div>
”என் தாயே! தக்க சமயத்தில் விழிப்புணர்வு தந்தாய். உன்னைத் தவிர வேறு யார் இப்படி உணர்த்த முடியும்” என உருகினான். போஜனிடம், ”பாட இயலாது” என மறுத்தான்.</div>
<div>
<br /></div>
<div>
கேலியாய் பேசியும், கிண்டலாய் உணர்த்தியும் மசியாத காளிதாசனை வழிக்குக் கொண்டு வர வேண்டி, “அப்படியானால் என் கண்ணில் விழிக்காதே போ...நான் இருக்கும் இந்த அரண்மனையில் கூட வாழாதே எங்கேனும் போ” என்று கத்தித் தீர்த்தான் போஜராஜன். நட்பை மீறி தன் ஆணைக்கேனும் பணிவான் என்ற ஒரு நப்பாசையிலும் எப்படியும் பாடல்களைக் கேட்டுவிட வேண்டும் என்ற துடிப்பிலும் அவன் வார்த்தைகள் தீயைக் கக்கின.</div>
<div>
<br /></div>
<div>
காளிதாசனுக்கு அவன் வார்த்தைகள் வலித்தன என்றாலும், மன்னன் இந்த மண்ணில் இருக்க வேண்டும், மண்ணுக்குள் இருக்க வேண்டியவன் அல்ல. இன்னும் பல கலைஞர்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். “ இன்னும் பல களைகளையும் எடுக்க வேண்டும். “ என நினைத்தான். நெஞ்சமெல்லாம் கனத்துடன் “ சரி நான் போகிறேன்” என்றான்.</div>
<div>
<br /></div>
<div>
காளிதாசனைப் பிரிந்த போஜனால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை, என்றுமே அன்பு காந்தமானது, அது அதன் ஒத்தவற்றை ஈர்த்தே தீரும், ஈர்ப்பு விசையால் இயங்குவது தான் அதன் அற்புதம்: அதன் நறுமணமும் உலகை ஈர்க்கும்.</div>
<div>
<br /></div>
<div>
இப்போது போஜனுக்கும் கவலை ஏற்பட்டது. “ நான் கேட்டது தவறோ? என் மேல் பிரியம் இருந்ததால் தானே மறுத்தான்? அந்த அன்பின் அடர்த்தியை நான் தான் உணரத் தவறினேனோ? “ என்றெல்லாம் குமைந்தான். யோசித்த வேளையில் மன்னனுக்கு ஒரு வழி புலப்பட்டது. மாறுவேடத்தில் காளிதாசனைப் பார்ப்பது. அது ஒன்றும் எளிதல்ல. காளிதாசன் பளிச்சென்று கண்டுபிடித்து விடக்கூடும். அதே சமயம் கடினமானதும் இல்லை. காரணம், தன்னைப் போல அவனும் வருத்தத்தில் இருப்பான் என்றும் தோன்றியது. நட்பை நோக்கிக் கிளம்பினான். ஆறு நாட்கள் தேடலில் கண்டடைந்தான். இப்போதும் மனதுக்குள் இரங்கற்பா ஆசை துளிர்விட்டது. “ சரிதான் முயற்சி செய்வோம். கிடைத்தால் பாடல்:இல்லாவிட்டால் நட்பு” என்று நினைத்தவனாய், அவன் பக்கம் போய், வேறு ஒரு வணிகனிடம் பேசுவது போல் காளிதாசனுக்குக் கேட்குமாறு, “ மன்னன் மடிந்தான் தெரியுமா? “ என்றூ.</div>
<div>
<br /></div>
<div>
சொன்னது யார்? அது உண்மையா? பொய்யா? என்று எதுவும் கேட்கத் தோன்றவில்லை காளிதாசனுக்கு. இதென்ன கொடுமை? எப்படிப்பட்ட மன்னன்? எப்பேர்ப்பட்ட ரசிகன்? அவனா இறந்து போனான்? துக்கம் தொண்டையை அடைத்தது. நெஞ்சு கலங்கியது. கண்கள், அருவியின் தொடக்கத்தை அறிந்து கொண்டன. “ உன்னை இழக்கக்கூடாது என்று தானே இரங்கற்பா பாடாது வந்தேன்? இறக்கும் தருவாயில் உன் அருகில் இல்லாது போனேனே? என்னை நினைத்தாயோ? கர்வம் பிடித்த காளிதாசன் என்று நினைத்து என்னை வெறுத்தவாறே உயிர் விட்டாயோ? உயிரோடு இறந்த பாடல் கேட்டாய். ஆனால், இறந்து இந்த உயிர்ப் பாடலக் கேட்க வருவாயோ?</div>
<div>
<br /></div>
<div>
என் காளி எல்லாமும் தந்தாளே? எனக்கு என் நண்பனை மீட்டுக் கொடுப்பாளா? என்று கதறித் துடித்தான்.</div>
<div>
<br /></div>
<div>
அந்தக் கலக்கத்தின் எல்லையில் தன்னை மீறிப் பிறந்தது இரங்கற்பா. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஆனந்தமாகக் காளிதாசனை அணைத்துக் கொண்டான்.</div>
<div>
<br /></div>
<div>
அவனைக் கண்ட காளிதாசன் திடுக்கிட்டான். ஆம்: அவன் போஜராஜன். “நண்பா, தவறு செய்து விட்டாயே...இன்னும் 60 நாழிகைகள் தான் உன் ஆயுள். அதற்காகத் தானே, இரங்கற்பா பாட மறுத்தேன்” என்று துடித்தான்.</div>
<div>
<br /></div>
<div>
கதறலுடன், மன்னனை அணைத்தான். அந்தக் கண்ணீரில் வெளிப்பட்ட நட்பின் வாசலில் இரண்டு இதயங்கள் உதயமாயின: உறவாயின: ஒன்றின: இந்த நட்பில் ஏழ்மை, உயர்மை என்ற ஏற்ற தாழ்வுகள் இல்லை. அன்பும் அதனைச் சார்ந்த எண்ணங்களுமே வலிமை கொண்டிருந்தன.</div>
<div>
<br /></div>
<div>
மன்னனும் கலங்கினான். ஆனால், அஞ்சவில்லை. தெளிவாகச் சொன்னான். “ நண்பா, இன்றில்லா விட்டால், நாளை இறக்க வேண்டிய வாழ்க்கை தானே இது. அதைவிடு. நமக்கு இன்னும் 60 நாழிகை இருக்கிரது. அதற்குள் நாமிருவரும் ராமாயணத்தைப் பாடலாமா?” </div>
<div>
<br /></div>
<div>
மரணகாலம் தெரிந்து விட்ட நிலையிலும் , மகாரசிகனாக போஜன் எழுப்பிய ஆசை காளிதாசனை உருக்கியது. சரி என்று போஉக் கொண்டான். இருவருமாக பாட ஆரம்பித்தார்கள். “ போஜ சம்பு” உருப்பெற்றது. காளிதாசனின் கனவும் பலித்துப் போனது.</div>
<div>
<br /></div>
<div>
காண்போம்</div>
<div>
<br /></div>
<div>
********************************************************************</div>
</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-1326782083861804832015-11-13T01:08:00.001-08:002015-11-17T02:07:54.807-08:00கடவுளைக் கண்டேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும்<br />
( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட வேண்டும்...அவுங்களும் பாவம் ல.)<br />
<br />
2. அனைத்து தொழில் நுட்பக் கல்லூரிகளும் இந்தியாவுக்குள் வர வேண்டும். இங்கே வந்து படிக்க வேண்டும். வேலை பார்க்க வேண்டும் என்று எல்லோரும் (அயல் நாட்டில்) கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
3. டாஸ்மாக்கை மூட வேண்டாம். அது திறந்தே கிடக்கட்டும். ( ஆனால் ஒருத்தர் கூட அங்கே போகக் கூடாது)( எப்பூடி? என்னைக் கைது பண்ண முடியாதுல்ல)<br />
<br />
4. இந்தியாவுக்குள் மட்டுமே சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் வேண்டும். ( வருடத்திற்கு ஒரு முறை 10 நாள் விடுப்பில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற சலுகை என்னால் அளிக்கப்பட்டு விட்டது)<br />
<br />
5. அமைச்சர்கள், மற்ற உயர் அதிகாரிகள் அனைவரும் சாதாரண டவுன் பஸ்ஸைத் தான் உபயோகிக்க வேண்டும். ( தனியாரிடம் யாரிடமும் கார் வசதி இருக்கக் கூடாது...நான் உள்பட)<br />
<br />
6. பெண்களைக் கொச்சையாகத் திட்டும் திரைப்படங்கள், பெண்களை கேவ்லமாக , எழுதும் எழுது கோல்கள் உடைந்து போக வேண்டும்..திரைப்படங்கள் தீக்கிரையாக வேண்டும்.<br />
<br />
7. உலகத்தில் எந்த மூளையில் புத்தகங்கள் வெளியிட்டாலும் அது அடுத்த நொடியே எனக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.<br />
<br />
8. எனது 50 வயதிற்குள் நான் எனது 100வது புத்தகத்தை வெளியிட வேண்டும்.<br />
<br />
9. உலகத்தின் உச்ச விருதுகள், வழங்குவதற்கு என் அனுமதி பெற்றே வழங்க வேண்டும்.நோபல் உள்பட.<br />
<br />
10. எனக்குள் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே வளர வேண்டும்.<br />
<br />
*********************************************************************************<br />
<br />
நான் பரிந்துரைக்கும் 10 நபர்கள்<br />
******************************<br />
<br />
1. http://www.jokkaali.in/<br />
<br />
2. http://bharathidasanfrance.blogspot.in/2015/11/blog-post_10.html<br />
<br />
3.http://oomaikkanavugal.blogspot.com/<br />
<br />
4. http://manamkondapuram.blogspot.com/<br />
<br />
5.http://timeforsomelove.blogspot.in/<br />
<br />
6. http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/<br />
<br />
7.http://inithuinithu.blogspot.in/<br />
<br />
8.http://saamaaniyan.blogspot.in/<br />
<br />
9.http://unmaiyanavan.blogspot.in/<br />
<br />
10.http://gobisaraboji.blogspot.in/2015/11/blog-post.html<br />
<br />
இதுல இத்தனை பேருகளை ஏற்கனவே வேறு யாராவது கோர்த்திருந்தால்கம்பெனி (நான் )பொறுப்பல்ல.<br />
********************************************************************************8</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-25351256817998562142015-11-12T06:55:00.001-08:002015-11-12T06:55:46.918-08:00நட்பின் சிகரம் ( கனவுக்காட்சிகள்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நட்பின் சிகரம்.....( கனவுக்காட்சிகள்...கவிஞர் சுவாதி...11)<br />
<br />
( விரைவில் விடுபட்ட பதிவுகள் வரும்)<br />
*********************************************************************************<br />
<br />
<br />
ஆனந்தம், குழப்பம் இரண்டின் சங்கமகாகவே இருந்தான் கர்ணன். கனவு அவனுக்குள் இரண்டு விதமான அலைகளையும் பெருக வைத்திருந்தது.<br />
<br />
ஒன்று, அவன் அரச குலத்தைச் சேர்ந்தவன் என்பது. அதனால் உண்டானது ஆனந்தம். இதை ஏற்கனவே அவன் அறிந்திருந்தான்.சொன்னவர் பரசுராமர்.<br />
<br />
வண்டு தொடையைத் துளைத்து அப்புறம் போகும் வரை பொறுத்திருக்க ஒரு ஷத்திரியனால் தான் முடியும் . நீ என்னிடம் பொய் சொல்லி, கற்றுக் கொண்ட வித்தை கடைசித் தருணத்தில் உனக்குப் பயன் படாமல் மறந்து போகும் “.<br />
<br />
இப்படி ஒரு சாபத்தை அவர் சொன்ன போது, முதலில் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த சாபத்துக்குள், தான் ஒரு ஷத்திரியன் என்கிற செய்தியும் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்த நிலையில், வருத்தத்தை விட சந்தோஷம் பீறிட்டது. அந்த சந்தோஷம் சரிதான் என்பதை , இந்தக் கனவு ஊர்ஜிதம் செய்து விட்டது.<br />
<br />
ஆனால், கனவின் அடுத்த பகுதிதான் குழப்பமாயிருந்தது. அப்படி என்ன தான் கனவு?<br />
<br />
வானத்தில் இருந்து வந்த ஒளி, அவன் நாட்டைக் கருப்பாக்கி விட்டது. முகம் தெரியாத ஒரு பெண் தென்படுகிறாள். அவளையே அம்மா என்றும், மகாராணி என்றும் குறிப்பிடுகிறார்கள். தெய்வம் வந்து யாசகம் கேட்கிறது. அம்மா எனப்பட்டவளே வரம் கேட்கிறாள். துரியோதனனின் தோட்டம், பூக்களெல்லாம் கருகி பொலிவிழந்து கிடக்கின்றன.<br />
<br />
இவ்வளவு தான் கனவு. தான் ஷத்திரியன் என்று அறிந்தால் ஆனந்தப்பட்டவன், கனவின் பிற பகுதிகள் இன்னெதென்று புரியாமல் குழம்பிப் போனான். அதே சமயம், அவை நல்ல செய்தியை உணர்த்தவில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது.<br />
<br />
இருந்தால் என்ன? இனி என்ன செய்வது? எல்லாவற்றையும் தன்னோடு பகிர்ந்து கொள்ளும் துரியோதனனிடம் இதைச் சொல்வதா? வேண்டாமா? ஆனால், கனவு அவனைப் பற்றியது, அவனிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பது? சொல்லவும் முடியாது. நல்ல செய்திகளைப் பகிரலா,. இது அப்படியா? சரி, போகட்டும்.<br />
<br />
தான் ஷத்ரியன் இல்லை என்பதால் ஏற்பட்ட அவமானங்கள் இப்போது தவிடு பொடியாகி விட்டன. நம் பிறப்புக்குக் காரணமான அந்த அன்னையை சந்திக்கவும் போகிறோம் என்கிற நினைப்பு மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து புத்துணர்ச்சியானது.<br />
<br />
ஆனால், கனவின் பிற பகுதிகள், தொடையைக் குடைந்த வண்டு போல் மனத்தைக் குடைந்து கொண்டே இருந்தன. நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொன்றாய் புரிய ஆரம்பித்தன.<br />
<br />
அவன் நாட்டை ஒளி பாய்ந்து கருப்பாக்கியதன் பொருள் என்ன? சூது அவனுடைய வெளிச்சத்தை ஆற்றலை கவர்ந்து செல்லப் போகிறது என்பதற்கான குறியீடு என்பது அவனுக்குப் புரிந்தது. “அம்மா” எனப்பட்ட “மகாராணி” இன்னார்தான் என்று புரிந்த போது, ஆனந்தமும் துக்கமும் ஒரு சேர சங்கமித்தன அவனுக்குள்.<br />
<br />
எந்த அர்ஜுனன் மேல் வெறுப்படைந்திருந்தானோ, அவன் தன்னுடைய தம்பி என்பதால் ஆனந்தம். ஆனால், அவன் அல்லது தான் இருவரில் ஒருவர் தான் எஞ்சியிருக்க முடியும் என்பதை அறிந்து தான் சற்றே கலக்கம். வேறு வழியில்லை. துரியோததனுக்கு பீஷ்மரைவிட, துரோணரை விட நம்பிக்கைக்குரியன் கர்ணன் தான். “ தன்னுடைய சந்தோஷத்தைக் கண்டு ஆனந்தப்படுகின்ற அற்புதமான நண்பன் என்று கர்ணனை உளம் நிறைய கொண்டாடிக் கொண்டிருக்கிறான் துரியோதனன்.<br />
<br />
அது மட்டும் தானா? தேரோட்டியின் மகன்” என்று எல்லோரும் ஏளனம் பேசிய தருணத்தில், அங்க நாட்டின் மன்னனாக அறிவித்து, அலங்காரம் செய்தவன் அவன் அல்லவா? “பொன்னும் கொடுப்பான்,: பொருளும் கொடுப்பான், என்றெல்லாம் புலவர்கள் பாடியதற்குக் காரணமான செல்வம் அவனால் அல்லவா கிடைத்தது. கொடுத்தவன் கர்ணன், ஆனால், அவனுக்குக் கொடுக்கப்பட்டது துரியோதனனால் அல்லவா?<br />
<br />
கர்ணனின் ஈர நெஞ்சம் உணர்ச்சிகளால் குழைந்தது: இறுகியது: நெகிழ்ந்தது.... ஈரமான உள்ளங்களுக்கு எப்போதுமே போராட்டம் தான். எல்லாவற்றையும் வாங்கி, விதைத்து, விளைந்து, காயப்பட்டு, ரத்தம் சிந்தி...கர்ணனுக்கும் அதே நிலைதான். ஆனாலும், எந்த நிலையிலும் எதை முன்னிட்டும் துரியோதனனை விட்டுக் கொடுப்பதில்லை என்று உறுதி கொண்டது அவன் உயர் நெஞ்சம்.<br />
<br />
ஆனால், அவனை துரியோதனனிடம் இருக்க விட்டு, அவனுடைய ஆற்றலை பலவீனப்படுத்தியது தெய்வசக்தி> தெய்வ சதி, வேறென்ன சொல்வது? விதி வகுத்த பாதையில் ஓடியது அந்தப் பேராறு. அவ்வளவுதான்.<br />
<br />
தன் மகன் அர்ஜுனனுக்காக இந்திரன் வந்து வரம் கேட்டான். எப்போது? மிகச் சரியாக கர்ணன் சூர்ய வழிபாடு செய்யும் போது, ஏன்? அப்போது யார் வந்து என்ன தானம் கேட்டாலும் அதைக் கொடுக்கும் ஒரு உயரிய கொள்கை வைத்திருந்தான் கர்ணன். அதனால் தான், இந்திரன் வந்து கேட்டதும் தனது கவச குண்டலங்களையும், இழக்க வேண்டியதாயிற்று.<br />
<br />
சூரியன் எச்சரித்து என்ன பலன்? தானே ஏற்படுத்திக் கொண்ட விரதம், கர்ணனையும் கட்டியது. மாற்றிச் சொன்னால், அவன் விரதன் என்கிற கயிரால் அவனையே கட்டிப் போட்டார்கள்” பவீனமாக்கினார்கள்.<br />
<br />
ஜயத்ரதன் என்னும் சிந்து அரசன், அபிமன்யூ சக்ர வியூகத்தில் நுழையும் போது துரோணரின் கட்டளைப் படி உதவி செய்தான். அதன் படி, அபிமன்யூ இறக்க, அந்தப் பழியும் கர்ணன் மீது விழுந்தது. கர்ணனுக்குப் பல மகன்கள் இருந்தனர். அவர்களின் ஒன்பது பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களில் விருஷ கேது மட்டுமே போருக்குப் பின் அர்ஜுனனின் அரவனைப்பில் இருந்தான்.<br />
<br />
திரௌபதியுன் சுயம்வரத்தைத் தொடர்ந்த கை கலப்பில் சுதமா இறந்தான். ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் குருஷேத்ர போரில் துரோணர் தலைமை தாங்கிய போது அர்ஜுனன் ககளில் மடிந்தனர். சத்யசேனா, சித்ர சேனா மற்றும் சுஷர்மா நகுலனின் கைகளால் இறந்தனர். கர்ணனின் மூத்த மகன் வீரசேனா போரின் கடைசி நாளில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். ஆக, கர்ணன் தான்மட்டும் நன்றி உடையவனாக இருக்க வில்லை: தன் மகன்களையும் அப்படியே துரியோதனனுக்கு வழங்கியிருந்தான்.<br />
<br />
கர்ணன் பாண்டவர்கள் தனது சகோதரர்கள் என்ற உண்மை தெரியும். ஆனால், பாண்டவர்களுக்கு அது தெரியாது.<br />
<br />
போரிடும் வேளையில், அர்ஜுனனின் தேரை தன்னுடைய கணை வீச்சால் கர்ணன் பின்னுக்கு நகர்த்திய போது, கிருஷ்ணனே “ மாவீரன்” என்று கர்ணனைப் பாராட்டினான். அர்ஜுனனுக்கு கோபம் வந்தது. “ நான் கர்ணனின் தேரை பல மைல் பின்னுக்குத் தளிளியும் என்னைப் பாராட்டாமல் அவனை எப்படிப் பாராட்டலாம்” என்றூ கிருஷ்ணன் சொன்னான். கடவுளின் துணையோடு உள்ள இந்தத் தேரை பின்னுக்குத் தள்ளுபவன் மகாவீரன்” என்று.<br />
<br />
தன் மகன் இழிவடைவதைப் பார்க்கப் பொறுக்க முடியவில்லை. சூரியனால், ஒவ்வொரு முறையும் எச்சரிக்கிறான். “ தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” தான். ஆனால், தந்தை தராத நாட்டை நண்பன் தந்தான். தந்தை அமைத்துக் கொடுக்காத அந்தஸ்தை நண்பன் அமைத்துக் கொடுத்தான். எனவே, நட்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் கர்ணன்.<br />
<br />
ஒரு மகாவீரனை யாரும் வீரனாய்ப் பார்க்கவில்லை. அவன் குலம் என்ன? என்ன பிறப்பு? என்பதிலேயே தான் அவர்களின் கண்ணோட்டம் இருந்தது. இந்த பழிச்சொல்தான் அவனை எல்லாவற்றையும் கற்க வைத்தது. என்னால் முடியும் என்று ஒவ்வொரு முறிஅயும் சொல்லிக் கொண்டான். போர்க் கலைகளும், ராஜதந்திரங்களும், வித்தைகள் அனைத்தும் தனக்குக் கைவரப் பெறும் என்று உறுதியாக நம்பினான்.<br />
<br />
திரௌபதையின் சுயம்வரத்தில் திரௌபதையின் மீது முதலில் ஆசைப்பட்டவன் கர்ணன் தான். ஆனால், திரௌபதை கர்ணனை நிமிர்ந்து பார்க்கும் தருணத்தில், “தேரோட்டியின் மகனே” என்று கண்ணன் அவனை அழைத்ததால், பார்வையை அவன் மீது வீசவேயில்லை திரௌபதி. பார்த்திருந்தால் அவன் அழகு. வீரம் மிகுந்த தோற்றம், ஷத்திருயனுக்குரிய தீர்க்கமான கண்கள், திடமான வலிய தோள்களைக் கண்டிருப்பாள். ஆனால், பார்க்காததற்குக் காரணமான கண்ணனை விட, பார்க்காமலேயே போன திரௌபதையின் மேல் அதிகக் கோபமும் பகைமையும் கொண்டான் அவன்.<br />
<br />
பின் நாளில் மறந்தான் தான் என்றாலும், அந்தத் தோல்வி , தன் பிறப்பைப் பற்றிய எள்ளி நகையாடல் என்று நினைத்ததாலேயே அவையில் அவளை துகில் உரியும் போது அவன் அதர்மமாக நடந்து கொள்ள நேர்ந்தது.<br />
<br />
கர்ணனின் வாழ்வு முழுவதும் நிராகரிப்புகள், வேதனைகள், துயரங்கள் தான். ஒருவனுக்கு தன் முயற்சியால் வரும் துன்பங்களையும் விட தன்னை அவமானப் படுத்துதலால் வரும் துன்பமே கொடூரமானது. அதனைத்தான் தன் வாழ்நாளெல்லாம் சந்தித்தான் கர்ணன்.<br />
<br />
தன் பேச்சு வன்மையாலும் போர்த்திறனாலும், நிஷாதர்கள், கலிங்கர்கள்...என்று தன் அருகில் இருக்கும் அனைத்து நாட்டவர்களையும் துரியோதனனுக்காக போர் புரியவருமாறு கேட்டுக் கொண்டான். கண்ணன் வரமாட்டான் என்பதும், கண்ணனின் படை உதவி கிடைக்கும் என்பதும், அவனுக்குத் தெரிந்தே இருந்தது. 10 நாட்கள் வரை குருஷேத்திரப் போரில் கலந்து கொள்ள இயலாததும் பெரிய வலிதான், ஆனாலும், அதனையும் மறைத்து 11ம் நாள் போரில் ஈடுபட்டான். பாண்டவப் படையை கலங்க வைத்தான்.சல்லியனுக்கும் தனக்கும் பிணக்கு இருப்பதாய் கர்ணன் உணரவே இல்லை. ஆனால், சல்லியன் கர்ணனை பகைவனாய் நினைத்தான். தான் சார்ந்த நாடு தோல்வியுறுவது பற்றி கவலை கொள்ளாமல், கர்ணன் கொலையாக வேண்டும் என்றே அவன் கருதினான்.<br />
<br />
மீண்டும் கனவைப் பாருங்கள்.<br />
<br />
துரியோதனனின் தோட்டப் பூக்கள் கருகி பொலிவிழந்து....துரியோதனன் போரில் உறவுகளை இழந்து, அரசிழந்து, குந்தி கேட்ட வரம், இந்திரன் யாசகம், கிருஷ்ணனின் வரம் நாகாஸ்திரம், கடோத்கஜன் வதம், ...போரில் நடந்த கிருஷ்ண சாமார்த்தியம். கர்ணனின் மகன்கள் இறந்தது. ..<br />
<br />
அவன் கனவு பலித்து விட்டது. மீதம் இருப்பது ஒன்றுதான். அவன் ஷத்திரியன் என்பது உலகுக்குத் தெரிய வேண்டும். அது தெரிய வேண்டுமென்றால், அதற்கு தன் இறப்பு துணை செய்யும் என்று ஆழ்மனதில் எழுந்த காரணத்தால் தான், அவன் இறப்பும் ஏற்பட்டது. எளிதில் இறக்கும் உடம்போ மனசோ இல்லை அது. அவன் மனதால் இறப்புக்குத் தயாரானதால் இறப்பு அவனை எட்டியது,<br />
<br />
சரி, தவறு என்பதெல்லாம், அவரவர்களின் சூழலைப் பொறுத்து மாறுபவை. ஆனால் அறம் என்பது சார்பில்லாதது. அது மாற்றம் இல்லாதது. சரியானதை அது அங்கீகரிக்கும். சரியற்றதை தூக்கி வீசி விடும். கர்ணனின் கனவு பலித்தது. காலம், துரியோதனுடனான நட்பை ஒதுக்கியது. கொடையில் கர்ணனை குன்றிலேற்றியது.<br />
<br />
******************************************************************************</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-38177366186168852692015-11-04T06:59:00.001-08:002015-11-17T02:08:06.895-08:00கனவுக்காட்சிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சகுனி பற்றி எழுதப்பட்ட தொடர்...அடுத்த பதிவில்...ஏழுக்குப்பின் ஒன்பது என்று நினைக்க வேண்டாம். நன்றி<br />
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-78509640719360918452015-11-04T06:36:00.001-08:002015-11-04T06:36:20.389-08:00கலை நகர்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கல்கியின் தீபம்,,,கனவுக்காட்சிகள்...09...கவிஞர் சுவாதி<br />
***********************************************************<br />
<br />
ஆழ்ந்த உறக்கத்தில் வந்த கனவு, நரசிம்மவர்மன் வியந்து போனான். “மாமல்லபுரத்தில் கடற்கரையில் எழுப்பப்பட்ட குடை வரைக்கான வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், தற்போது உருவாகியுள்ள வடிவம் இப்படியில்லையே...இந்த வடிவத்தைத்தான் சிற்பிகளிடம் சொன்னோம். அவர்களுக்குப் புரியவில்லை...இல்லையில்லை...அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் நாம் சொல்லவில்லை. அதனால் நேர்ந்த குரைபாடு இது. இப்போது என்ன செய்வது? இடித்து விட்டு மறுபடி வேறு அமைக்க வேண்டியதுதான்.<br />
<br />
மன்னனின் உத்தரவைக் கேட்ட சிற்பிகள் திகைத்துப் போனார்கள். கஷ்டப்பட்டு மாதக்கணக்கில் செய்த பணியை இடித்துத் தூளாக்குவதா? இடிக்கவே மாதக்கணக்காகுமே...எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டு..எவ்வளவு பேரின் உழைப்பு இது? இதைத் தகர்ப்பதா? மன்னர் ஏனிப்படி உத்தரவிடுகிறார்? சித்தம் கலங்கி விட்டதா அவருக்கு?<br />
<br />
சிற்பிகளின் எண்ணங்கள் இப்படி தாறுமாறாக ஓடின. பல்லவ மன்னரான நரசிம்மவர்மரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா என்ன? தந்தைக்கு விசித்திரசித்தர் என்ற பெயர் பொருத்தம் என்பது போல், இவருக்கும் அது பொருந்துகிறது. எப்படி எதை எப்போது நினைப்பார்”: செய்வார்: என்று அனுமானிக்கவே முடியவில்லை.<br />
<br />
அவர்களின் சிந்தனை இப்படியெல்லாம் ஓடுகிறது என்பது, மாமல்லரான் நரசிம்மவர்மருக்கும் புரிந்து தான் இருந்தது. என்ன செய்ய? அவருடைய கனவுகள் அவ்வளவு பளிச்சென்று தெளிவாக இருக்கின்றனவே. கட்டியதை இடித்துத் தள்ளக்கூட 60 நாட்கள் ஆனது. பலருக்கு கண்ணீர் அல்ல...செந்நீரே வந்தது.<br />
<br />
மன்னனும் சாதாரணமானவன் இல்லை. வணிகம், மருத்துவம், வேளாண்மை என்று எந்தத்துறையின் நிபுணர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் தன் அருகில் வைத்திருந்தான். அவசியம் ஏற்பட்டால் அவர்களிடம் எந்த இரவிலும் தமது ஐயங்களைக் கூறி, கண்டு தெளிவுபடுத்திக் கொண்டான். பணியாளர்களைப் போற்றுவதில், பேணுவதில் நரசிம்மவர்மனுக்கு நிகர் அவனே தான். ஒரு மன்னன் இப்படி கீழ் நிலை பணியாளர்கள் வரை எல்லாமும் செய்வானா என்று வியக்கும் அளவுக்கு செய்யும் மன்னன். அதிகாரத்தினால் அவன் இவற்றை இடிக்கக் கூறவில்லை. ஆனால், அவன் நெஞ்சில் இருந்தது அன்பு...அன்பு...அன்பு...அன்பன்றி வேறொன்றுமில்லை.<br />
<br />
தான் சரியாக விளக்கவில்லை என்பதை உணர்ந்ததும், ஓவியங்கள் வழியாக தன் கனவு நகரை அவர்களுக்குச் சொல்ல முடியும் என்று நம்பினான் அவன். அவசர அவசரமாக ஓவியக்கலை பயின்றான். அவன் பயின்றானா அல்லது அவனுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு கலையை மேம்படுத்தி விட்டார்களா எனும் அளவுக்கு வேகமாகப் பயின்றான்: அவர்களுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்தினான்.<br />
<br />
இம்முறை சிற்பிகள் மிகவும் கவனம் கொண்டனர். ஏனெனில், அவர்களுக்கே இது ஒரு சவால். மீண்டும் சரியில்லை எனில் மீண்டும் உழைப்பு இடிபடும். தம் உழைப்பு தம் கண் முன்னால் அழிவதை எந்த உழைப்பாளனும் பொறுப்பதில்லை. எனவே, ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடந்தது. சிவ பெருமானை நோக்கி ஒரு நீண்ட தவம் செய்த பின்னரே வேலையை ஆரம்பித்தனர். இப்போது வேலை செய்யும் இடம் ஒரு தவச்சாலை ஆனது, ஆக்கியது மன்னனின் பிடிவாதம், இல்லை,,, தன் கனவின் மீதான நன்நம்பிக்கை..<br />
<br />
தொடக்கத்தைல், சில நாட்கள் கனவுகள் பற்றி ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படவில்லை நரசிம்மனுக்கு. இவை எல்லோருக்கும் ஏற்படுவது போல் மிக மிகச் சாதாரணமாகத் தோன்றி மறைகின்றன என்றே நினைத்தான். வெளியே சொல்லக்கூடத தயக்கமாக இருந்தது. இவற்றைப் பிறர் என்ன நினைப்பார்கள்? என்ற தயக்கம், தன் படை தளபதி, பட்டத்தரசி, தோழர்கள் என்று யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், செயல்படுத்த எண்ணினான். ஒரு மிகப் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால், பகலில் தூக்கம் வரவில்லை, இரவில், அதுவும், ஆழ்ந்த தூக்கத்தில், தான் செய்ய வேண்டிய செயல்களைச் சொன்னது போலத்தான் இருந்தது. முதலில் கவலை வந்தது. கனவுகள் வருகிறதென, பயந்தான். பின்நாட்களில் கனவுகள் எப்போது வரும் என்று ஏங்கினான்.<br />
<br />
கனவுகளின் வாயிலாக, எத்தனை தொழிலாளர்கள் எந்த திசையிலிருந்து வருவார்கள். யார் யார் நல்ல பணியாளர்கள் என்பதெல்லாம் கூடத் தெரிந்தது. இறை பக்தியில் ஆழ்ந்த தன் முன்னோர்களால் தனக்கு ஏற்பட்ட நன்மை இது என்றே நினைத்தான்: பெருமிதம் கொண்டான். ஆனால், கனவுகள் வருவதை எவரிடமும் சொல்லவில்லை.<br />
<br />
இரண்டாம் புலிகேசியை யாராவது வெல்ல முடியுமா? பெயரைக் கேட்டாலே புலியைப் பார்த்தது போல் பயந்து ஒதுங்கினார்கள் பல மன்னர்கள். வெளியிலோ தனக்கு அப்படி ஒரு ஆசை இல்லை என்றே பேசிக்கொண்டனர். ஒரு நாள் திடீரென்று வாதாபி கொண்டான் என்று ஒரு குரல் கனவில் கேட்டது. துள்ளி எழுந்து தூக்கம் தவிர்த்தான்,. “ இது இறைவனின் ஆணை....இறைவனின் ஆணை....என மனதுள் திடம் கொண்டான். படைவீரர்களை தயார் செய்தான். நம்பிக்கை வார்த்தைகளைக் கொடுப்பதிலும் அன்பை கொடுப்பதிலும் அவனுக்கு நிகர் அவனே தான். கடைசிப் பணியாளர் வரை தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவனே மன்னன்.<br />
<br />
தான் எடுத்துக் கொண்ட எந்தச் செயலிலும் கடைசிவரை உறுதி கொண்டான். ஏனெனில், கனவில் அவனுக்கு அது நடக்கும் என்று அழுத்தமாகக் கூறப்பட்டு விட்டது. எனவே, யார் மாற்றிச் சொல்ல வந்தாலும் அவர்களை ஒரு நிமிடத்தில் தன் கொள்கைகளுக்குள் நுழைத்து விடும் நுட்பமும் திட்பமும் பெற்றிருந்தான்.<br />
<br />
இந்த விடாப்பிடியான அன்பாலும் ஓயாத உழைப்பாலும் கிடைத்தவர்தான் நிருபகேசரியின் மகன் பரமதுர்க்கன் ( வாதாபி போரில் துணை செய்த கொடும்பாளூர் வேளிர் குலத்தவர். வாதாபிஜித் என்றொரு அடைமொழியும் அவருக்குச் சொல்லப் படுகிறது.) அது நாள் வரை உதயணனை தலைமை சிற்பி என்றே எல்லோரும் கருதினார்கள். முதல் முறையாக சிற்பி நரசிம்மவர்மனை, அவன் வார்த்தைகளைக் கவனமாகவும் காதலாகவும் கேட்க ஆரம்பித்தான் உதயணன். தன் தொழிலை நேசித்து தன் தொழிலில் ஆர்வம் கொண்டு, அதன் அடி ஆழம் வரை பேசும், சிந்திக்கும் மன்னனை யாருக்குத்தான் பிடிக்காது? அப்படித்தான் நம்பிக்கை கொண்டான் உதயணன். ஆனால், அதுவரை இல்லாமல் மன்னன் சொன்ன புது யோசனை வியப்பாகவும், புதுமையாகவும், மாறுபட்டதாகவும் இருந்தது.<br />
<br />
மன்னனின் அந்தக் கோரிக்கை சிற்பிகளுக்குப் புரியாத புதிர், அது நாள் வரை செங்கற்களால் கட்டுமானப் பணி நடப்பதுதான் நடைமுறை. ஆனால், மன்னன் விரும்பியதோ கருங்கற்களால்: அதுவும் மலையைக் குடைந்து விமானங்கள், விதானங்கள் அமைக்க வேண்டும் என்பது, அன்பும் , பணிவும் கொண்ட தலைமைச் சிற்பி உதயணனுக்கே இது ஆச்சரியம்...அதிசயம். இயலாதோ என்றும் ஒரு அயற்சி. ஆனால், மன்னர்தான் எதற்கும் சமாதானம் ஆகமாட்டாரே, சரி, தோல்வியை ஒத்துக் கொள்வோம் என்று தோன்றியது. அனைவருமே உடன்பட்டனர். தீவிரமான, பக்தியான நம்பிக்கையான முயற்சி, தோற்பதற்கு வாய்ப்பே இல்லை.<br />
<br />
எப்போதும் ஒரு யோசனையுடன் அமர்ந்திருப்பது போல தோற்றம் அளிக்கும் அவனை, சிலர் மனதிற்குள் ஏசினர். என்றாலும், அனைவரும் தன்னோடு ஒத்துப்போகும் வரை கூட்டங்கள் நடத்தினான். அவர்களை இசைய வைத்தான். தன்னுடைய எண்ணங்களை அவர்களுக்குள் மடைமாற்றம் செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக சிற்பிகளுக்குள்ளும் அவன் கருக்கொண்டான்: உருக்கொண்டான்: விளைவு...கடற்கரையில் கலைநகரம் அரும்பியது.<br />
<br />
அதுவரை மணல்வெளியையும் பாறைகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கடல் மகள், அழகான ரதங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்: அலைக்கரங்களைக் கொட்டி ஆரவாரித்தாள். இன்று வரை ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது அவளது ஆராவாரம். அந்த ஆராவாரத்தில், நரசிம்மவர்மனின் பெருமையல்லவா பாடப்படுகிறது. கனவுகள் எல்லோருக்குமே சில நாள் தொடரும். ஆனால், வாழ்நாளெல்லாம் வழிகாட்டியாக இருந்தது நரசிம்மவர்மனுக்கு மட்டும் தான்.<br />
<br />
எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிதாகத் தீர்வு கிடைத்தது. ஒரு செயலை யார் செய்தாலும் சாதாரணமாகச் செய்வார்கள். அதே செயலை அசாதாரணமாக செய்வோர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். நரசிம்மவர்மன் இதற்கான உதாரணம்...<br />
<br />
<br />
(காண்போம்)<br />
<br />
********************************************************************************</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-56381570567705392262015-11-01T07:21:00.001-08:002015-11-01T07:21:21.907-08:00நேசிப்பே சுவாசிப்பாய்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கனவுக்காட்சிகள்...கல்கியின்....தீபம்....07...கவிஞர் சுவாதி<br />
*********************************************************<br />
<br />
<br />
<br />
பிரியத்தின் தன்மையே, பிரியமானவர்களை, பிரியமான வடிவங்களில் மட்டுமின்றி, பிரியமற்ற உருவங்களிலும் கோர்த்துப் பார்ப்பது. அன்புக்கு மட்டும் எல்லையே இல்லை. அன்பு செய்யாமல் வாழ்க்கையே இல்லை. பிறப்பால் மருணீக்கியாராக இருந்து சமண சமயத்தைத் தழுவி தருமசேனராகி, திருநாவுக்கரசராய் சைவத்துக்குத் திரும்பியவர். சிவன் மேல் இருந்த பக்தியோ, தன் தந்தை சிவனடியார்களைத் தொழுததன் பயனோ தெரியவில்லை: அப்பூதியடிகள், சிவனடியார்கள் என்றால் உயிரையும் கொடுப்பார்: உயிராய் இருப்பார்:<br />
<br />
திருநாவுக்கரசரின் வாழ்க்கை தெரிந்தபின் அவரின் பக்தர் ஆனார். தொண்டர் ஆனார்: அவராகவே ஆனார்; அந்த அன்பை இதற்கு மேல் விளக்க முடியாது. அன்பின் ஆற்றலை, அன்பு கொண்டவரின் முகத்தை, காணும் முகமெல்லாம் தேடுவது; செய்யும் தொழில், பேசும் பேச்சு எல்லாவற்றையும் அவரைப் போலவே ஆக்கிக் கொள்வது, அன்பு கொண்டோரை அன்பால் தடவுவது போலவே அவர் பெயர் கொண்ட எவரையும், எதனையும் நேசிப்பது.<br />
<br />
அப்படித்தான் ஆக்கிக் கொண்டார் அப்பூதியடிகள். தன் மகன் பெயர் திருநாவுக்கரசு. தோட்டம் திருநாவுக்கரசு, வீட்டின் பெயர் திருநாவுக்கரசு, தான் வைத்திருந்த மாடுகளின் பெயர் திருநாவுக்கரசு, தான் நிர்வகித்த பால் விற்பனை நிலையம், மண்டபங்கள், என்று அவர் தொடர்புடைய எதுவும், எவரும் திருநாவுக்கரசு தான். மாடுகளைக் குளிப்பாட்டும் போது கூட திருநாவுக்கரசரின் நினைவு வந்து தலை சீவி, அன்பு சுரந்து அதனோடும் பேசிக் கொண்டே நீராட்டி விடுவார்.<br />
<br />
இப்படி ஒரு அன்பு உலகில் இருக்குமா? இருந்தது. அது அப்பூதியடிகளின் அன்பாய் இருக்கும். பார்க்காமல், பேசாமல், அவரோடு எந்தவிதத் தொடர்புமின்றி இதெப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை. ஆனால், இதயத்தின் ஈர்ப்பால் தன் வாழ்நாளுக்குள் என்றேனும் ஒரு நாள் சந்தித்து விடுவது என்றும் முடிவெடுத்திருந்தார்.<br />
<br />
அன்றாடம் அவருக்குள் எழுந்ததும் இதே சிந்தனைதான். “இன்றேனும் நான் திருநாவுக்கரசரைக் காண்பேனா?<br />
<br />
ஏனெனில் , யாரிடம் அன்பு கொண்டுள்ளோமோ அவர்களிடம் தன் அன்பைத் தெரிவிக்கும் போது அவர்களிடமும் ஒரு அன்பு ஊற்றாகுமே....அந்த அன்பின் ஊற்றுக்கு இணை, அந்த இன்பத்துக்க இணை இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதுமில்லை.<br />
<br />
அந்த அன்பை உரியவர்களிடம் சேர்பித்து விடுவது தான், அன்பு கொண்டதற்குக் கிடைக்கும் அங்கீகாரம். எனவேதான், அப்பூதி தனக்குள் எப்போதும் இதையே நினைத்தார்; இல்லை துதித்தார். ஒரு செயல் நமது நடைமுறையாய் மாறிவிடும் போது, அதனைப் பற்றிய செயல்பாடுகள் அதிகம் இருக்கும் என்பது தானே கடவுளின் கட்டளை.<br />
<br />
அப்படித்தான், எந்தக் கதவுகளையும் தட்டாமல் அவர் ஒரு கனவு கண்டார். திருநாவுக்கரசரை அவர் சந்திக்கிறார். அவர் வீட்டில் திருநாவுக்கரசர் உணவு உட்கொள்கிறார். ஆனால், வாழை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது, கண்ணீரோடு அவரும் அவர் மனைவியும் சிவனைத் தொழுகின்ற்னர். சிவனைத் தொழுததும் எல்லா வருத்தமும் மறைந்தது. பழையபடி கிழக்கில் சூரியன் தோன்றுகிறான். இது தான் அவருடைய கனவு.<br />
<br />
அந்த வாரம் முழுவதும் அவருக்கு அதே கவலை எழுந்தது.”ஏன் வாழை மரம் அடியோடு சாய வேண்டும். ஆனால், சிவபெருமானும் கிழக்கில் சூரியனும் தோன்றியது நல்ல சகுனம் தான். ஆனால்....ஆனால்...? என்று தவித்தவர் கடைசியில் துள்ளிக் குதித்தார்.<br />
<br />
யாருக்கு எல்லாப் பெயரும் சூட்டி, யாரை இவ்வளவு காலம் நேசித்தோமோ அவரைக் காணப்போகிறோம், அவரைக் கண்டுவிட்டால், இந்த உலகத்தில் அனைத்து துன்பங்களும் தூசிக்குச் சமானம் அல்லவா? வரும் நன்மையைப் பற்றி நினைக்காமல் தீமையை நினைத்த மனம், புழுங்கிய தன் மடமையை தானே கடிந்து கொண்டார். நொந்து கொண்டார். இப்படித் தோன்றியதும் மனம் துள்ளியது.<br />
<br />
கனவில் அவர் முகத்தைச் சரியாகக் காண முடியவில்லை. நேரில் பார்க்க ஆவலும், ஆசையும் அதிகமாகியது. மனைவியிடமும் கனவைச் சொல்ல வில்லை. சொன்னால் வருந்துவாள். தான் செய்யும் செயல்களில் ஏதும் குறை ஏற்பட்டதோ, அதனால் தான் தனக்குக் கனவிலும் கூட தரிசனம் இல்லையோ என்று மயங்குவாள், எனவே, அவளிடம் சொல்லத் தயக்கமாய் இருந்தது.<br />
<br />
எப்போது பார்ப்போமோ என்று ஏங்கிய மனதுக்கு எப்போதேனும் பார்ப்போம் என்று ஒரு விடை கிடைக்கிறது. ஆனாலும், கேள்வி எழுகிறது. எப்போது காண்போம் என்று. அது இன்ராய் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் துடிக்கிறது.<br />
<br />
அப்படித்தான் அன்று காலையில் இருந்தே ஏதோ ஒரு பரபரப்பு அப்பூதிக்குக் காணப்பட்டது. என்னவென்றே சொல்ல இயலாத உற்சாகம் தென்பட்டது. மனசுக்குள் சிறகு முளைப்பது போலவே இருந்தது. என்ன உணர்வென்று புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினார். தன்னை நினைத்து தனக்கே ஆச்சரியமாய் இருக்கிரது. ஒருவரின் மேல் கொண்ட அன்பு வற்றாமல் பெருகுமா? அதுவும் பார்க்காமல், பேசாமல், ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பிக் கொள்கிறார்.<br />
<br />
மறைமுகமாக வேறொன்றும் நடந்திருக்கிறது. அவருக்கு மன ஈடுபாடு இல்லாமல் செய்த சில வேலைகள் திருநாவுக்கரசு என்ற பெயரால் காப்பாற்றப் பட்டன. மேலும் ஓங்கின. அந்தந்த இடத்தில் பணி புரிந்த ஊழியர்கள் தங்கள் விசுவாசத்தைக் காட்ட தாங்களும் திருநாவுக்கரசு என்று பெயர் மாற்றிக் கொண்டு மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தனர்- தம் எஜமானரின் கவனைத்தைக் கவர.<br />
<br />
இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் சிவனடியார் ஒருவர் வருகிறார். அன்பு கொண்ட முகத்துரன். வந்தவரை வரவேற்று, “இன்று இங்கே சாப்பிட வேண்டும் “ என்று வேண்டுகோள் வைத்து விட்டு முகம் பார்க்கிறார். வந்த சிவனரியாரின் முகத்தில் கேள்விகள். அது வார்த்தைக்யிலும் வெளிப்பட்டது.<br />
<br />
“உமது தொழில் நிறுவனங்களில் உம் தந்தை பெயரோ, உம் பெயரோ அன்றி வேறு ஒருவர் பெயர் ஏன் வைத்தீர்?” என்று மறு நிமிடம் கோபம் வந்தது அப்பூதிக்கு. தன் உயிரினும் மேலான திருநாவுக்கரசரை யாரோ ஒருவர் என்பதா? தன் உயிரை வேறு ஒருவர் என்று சொல்ல முடியுமா? அதை நினைத்தால், கேட்டால் தாங்குமா?<br />
<br />
“தரும சேனராயிருந்து சிவனின் அன்பால் மாறிய திருநாவுக்கரசரை அப்படிச் சொல்லாதீர்கள். சிவனடியார் என்பதால் தப்பித்தீர்” என்றார் சினத்துடன் அப்பூதி. “ சூலை நோய் வந்து திருநாவுக்கரசரான சிறியவன் அடியேன் தான்.” அன்று உரைத்தார் வந்தவர்.<br />
<br />
நாவுக்கரசரைத் தரிசிக்கப் போகிறோம் என்கிற கனவு பலிதமானதில் ஆனந்தம் அப்பூதி அடிகளுக்கு.(வம்சத்தை தழைக்க வைக்க வந்த வாழை மரமான மைந்தன் பாம்பு தீண்டி இறந்து பட, நாவுக்கரசர் பாட சிவனருளாலே அவன் மீண்டெழுந்ததும் நான் ஏற்கெனவே அறிந்ததுதானே!) நடக்கக்கூடிய கனவுகள் முன்னாலேயே தோன்றும் என்பதற்கு, அப்பூதியடிகளின் கனவு ஆனந்தமான ஆதாரம்.<br />
<br />
(காண்போம்)<br />
<br />
****************************************************************************888<br />
<br />
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-69637524492814374512015-10-30T07:15:00.002-07:002015-10-30T07:15:50.744-07:00யாதுமாகி நின்றாள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கல்கியின் தீபத்தில்....கனவுக்காட்சிகள் தொடர்...06...கவிஞர் சுவாதி<br />
*********************************************************************<br />
<br />
அரண்மனை முற்றத்தில் அமர்ந்திருக்கிறாள் ஜீஜாபாய். அவள் முகத்தில் அசாதாரண கம்பீரமும், நிறைவும் ததும்பியிருந்தன. ராஜமாதா என்ற எல்லோரும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.மைந்தனோ, அன்னையின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல், அவள் கருத்தை நிறைவேற்றுகிறான். இப்படியொரு மகனை பெற்ற மணி வயிறு எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எல்லோரும் போற்றுகிறார்கள்.<br />
<br />
மலை எலி என்று கேலி செய்தவர்கள் எல்லாம் திக்குத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்சல்கான், செயிஷ்டகான் என்று எதிரிகளால் அனுப்பப்பட்ட வஞ்சகர்கள் மடிந்த பிறகுதான், எதிரிகளின் ஆர்ப்பாட்டம் அடங்கியிருக்கிறது. ம், என் மகன் இப்போது சத்ரபதி. ஆனாலும், அதே பண்பு, அதே பாசம், அதே அடக்கம், நான் கொடுத்து வைத்தவள் தான்.” தன்க்குள்ளாகவே முணுமுணுத்தாள் ஜீஜாபாய்.<br />
<br />
எந்தத் தாய்க்கும் இல்லாத அல்லது ஒரு சில தாய்களுக்கே அமைகிற , கிடைக்கிற பெரும் பேறு ஜீஜாவுக்குக் கிடைத்தது. தன் மகன் சிவாஜியை மகனாய் மட்டுமல்ல, தோழனாகவும் பார்த்தாள். யாருமற்ற பெருவெளியில் அவளோடு பேசுவதும், அளவளாவுவதும் சிவாஜியும் அன்னை பவானியும்தான்.<br />
<br />
மராட்டிய மாநிலத்தில்,லோகோஜிராவ் ஜாதவின் மகளாகப் பிறந்த ஜீஜாபாயின் கணவன் ஷாஹாஜி போஸ்லே,பீஜப்பூர் சுல்தானான அடில்ஷாவின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னன், ராணுவத் தளபதி, நம்முடைய மக்களன்னிய ஆட்சிக்கு ஆட்பட்டிருப்பதா? அதற்கு தன் கணவவே துணை செல்வதா?”என்றெல்லாம் ஏராளக் கேள்விகள் ஜீஜாவுக்கு, என்ன செய்ய? ஆனால், தன்னுடைய குழந்தைகள் அப்படி இருக்ககூடாது என்று தீர்மானித்தாள். ஆனால் விதி அவளுக்கு எதிராக பலசோதனைகளைச் செய்தது. ஆறு பெண் குழந்தைகள், இரண்டு மகன்கள் என்று பிறந்தும், பிழைத்தது இரு மகன்கள் மட்டுமே.<br />
<br />
(காலப்போக்கில்,மூத்தவன் தந்தையாருடனும், இளையவன் சிவாஜி அம்மாஜீஜாவுடனும் வள்ர்ந்தார்கள்.ஷாஹாஜி இன்னொரு பெண்ணை மணந்தார். அவள் மூலம் பிறந்த குழந்தைகள் தான் தஞ்சையில் மராட்டியர் ஆட்சிக்குக் காரணம் என்கிறது வரலாறு)<br />
<br />
சிவாஜிக்கு ஒரு பழக்கம். தனக்கான வெற்றியையும் தனக்கான சோகத்தையும் முதலில் தன் அன்னையிடம் தான் சொல்வான். அப்படிப் பழக்கினாள் என்பதைவிட,அன்னையே தோழியானால், சொல்வதில் என்ன தடை? அப்படித்தான் ஒரு நாள்...<br />
<br />
”அம்மா நான் வெற்றி பெற்றேன்” என்று நிலங்களின் பெயர்களை அடுக்குகிறான் அன்பு மகன். அன்னை திரும்பாமல் வேறெங்கோ பார்ப்பதைக் கண்டு அவன் மனம் பதைக்கிறது. “தவறாகச் சொல்கிறேனா?” சிவாஜிக்குக் குழப்பம். “என்ன ஆயிற்று அம்மாவுக்கு? ஏதும் கோபமா? பல்வேறு கேள்விகள் மனத்தில் புரள, மீண்டும் கேட்கிறாள்.<br />
<br />
“அம்மா நான் ச்ல்கிறேன்: நீங்கள் வேறெங்கோ பார்க்கிறீர்கள்.என் தோழி, என் தாய் என்பதைவிடஎன் தெய்வம் இல்லையா நீங்கள்? என் தெய்வம் என்னைப்புறகணிக்கலாமா” கேட்கும் போதே அந்த மாவீரனின் கண்கள் கலங்குகின்றன. வீரர்கள் உடலால் திடமானவர்கள். ஆனால், அவர்களையும் இதயத்தோடு தானே இறைவன் படைத்தான்?<br />
<br />
ஜீஜாபாய்க்கு மகனின் தழுதழுத்த குரல்கேட்டது. சாளரத்தருகே மகனை அழைத்தாள். தொலைவில் கையைக் காட்டி,”எனக்கு அது வேண்டும்” என்றாள். அவள் காட்டிய திசையில், மிகப்பலமானதும் பாதுகாப்புமான சதாரா கோட்டைகள் தென்பட்டன. அதைப் பார்த்த மறுகணம், சிவாஞி சொன்னான்.<br />
<br />
“ அம்மா விரைவில் அவை உங்களுடையதாயிருக்கும்.” ஆம், சொன்னபடியே செய்யவும் செய்தான். அடுத்த சில நாட்களில் அவற்றையும் வெற்றி கொண்டான். அன்னைக்கு முகமெல்லாம் புன்னகை, பெருமிதம்.” என் வளர்ப்பு...என்று மனம் துள்ளியது.<br />
<br />
இப்படியெல்லாம் சிவாஜியைப் பக்குவப்படுத்த அமைந்தது ஒரு கனவு தான். எல்லோரும் கனவாய் போகும் வாழ்வை வாழ்வார்கள். அவள் தான், முதன் முதலாக, கனவில் இருந்து வாழ்வை பக்குவமாகப் பிரித்தெடுத்தாள். அந்தக் கனவை திடப்படுத்தினாள்.நிறம் கூட்டினாள்.உரம் ஊட்டினாள்.<br />
<br />
அவள் கண்ட கனவு இது தான்.” அவளுக்குச் சொந்தமான ஆடையை வேறு யாரோ அணிகிறார்கள். மிகச் சிறியதாகக் காணப்பட்ட விளை நிலத்தில் புதிய புதிய பயிர்கள் பற்பல முளைத்து கண்களுக்கு எட்டும் வரையில் வயல்வெளிகள் விர்கின்றன. மாடுகள் ஒரு பக்கம் பயிரை மேய்ந்தாலும், மீண்டும், மீண்டும் அசுர வளர்ச்சியாய் பயிர்கள் வளர்கின்றன.<br />
<br />
இவ்வளவுதான் அவள் கண்ட கனவு, என்ன பொருள் இதற்கு? யாரிடம் விளக்கம் கேட்பது?கேட்டுக் கேட்டுகுழம்பிப் போனது மனம்: குலைந்து போனது அறிவு.<br />
<br />
தங்கள் மத குருவிடம்சொல்ல நினைத்து, வேண்டாம் என்று முடிவு செய்கிறாள். பிறகு தோழியரிடம் சொல்லலாமா என யோசனை .பிறகு தன் கணவனிமே சொல்லலாமாஎன்றும் எண்ணம். கடைசியில் யாரிடமும் சொல்லவில்லை: கேட்கவும் இல்லை தானே மீண்டும் தன் கனவை ஆய்வு செய்து பலன்கள் உணர வேண்டுமென நினைக்கிறாள்.கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.<br />
<br />
தன்னுடைய ஆடையை இன்னொருத்தி அணிகிறாலென்றால், தன் உரிமை பங்கு போடப்படும் சூழல் வருகிறது என்று புரிந்தது. அவள்கணவன் இன்னொரு பெண்ணை மணக்கப் போகிறான். தனக்கு சமதையாக இன்னொருத்தி வரப்போகிறாள் என்று உணர்த்தியது அறிவு.<br />
<br />
அது மட்டுமல்ல: மிகச் சிறியதான தான் வாழும் பகுதி, அன்னியர் பிட்யிலிருந்து விடுபட்டு, மேலும் விரிவடையும்: அத்தகைய வளர்ச்சியை எதிர்ப்புகளை மீறிய வெற்றியை என் மகள் அடைவான் என்றெல்லாம் அர்த்தப்படுத்திக் கொண்டாள். அதற்கேற்ப தன் மகனை உருவெடுக்கச் செய்ய வேண்டுமென்றும் தீர்மானித்தாள்.<br />
<br />
“ என் மகன் எனக்குக்கிடைத்த பொக்கிஷம், அவன் விளையாட்டுப் பொருள் அல்ல> விளையாடப் பிறந்தவனும் அல்ல. வினையாற்றப் பிறந்தவன். நிச்சயம் அவன் வெற்றி பெறுவான்.தோல்விகளில் கற்றுக்கொள்வான். ஒவ்வொரு முறையும் மீண்டெழுவான், என்று உறுதியாக நம்பினாள். அவனை பண்புள்ளவனாக, பாரம்பரியத்தை மதிப்பவனாக, கலாசாரத்தை மீட்டெடுப்பவனாக வளர்த்தாள்.<br />
<br />
சிவாஜி தன் வெற்றிகளாலவள் மனதை நிறைக்கும் போதெல்லாம், அந்தக் கனவின் துளிகள் அவளை கொஞ்சமேனும் சலனப்படுத்தாமலில்லை. அன்பு என்பது திடமானது தான். ஆனால், அவை தரும் உணர்வுகள் அதற்கு மாறானதல்லவா? அதனால் தான் மாவீரன் என்றுபோற்றப்பட்ட சிவாஜி அன்னையிடம் குழைந்தான். எவ்வளவு வளர்ந்தாலும், அன்னைக்கு முன் குழந்தைதானே?<br />
<br />
அந்த மாதா, பிதாவாகி நின்றாள். குருவாகத் தோன்றினாள்.எனவே, தெய்வமாகவும் மாறினாள். உலகின் அன்புகளை ஒரு பக்கமாய் வைத்தாலும் ஜீஜாவுக்கு இணையில்லை.இந்தப் பிணைப்பும் பிரியமும் இயல்பானதா?தோற்றுவிக்கப்பட்டதா? ஏற்படுத்தி வைத்ததா? யாருக்கும் தெரியாத அற்புதம்.<br />
<br />
கனவின் நெடி அடிக்கடி வந்து ஜீஜாவை கலைக்கும். அவளேகூட மயங்கியிருக்கிறாள். “என்னால் முடியுமா? நான் அப்படி வாழ்வேனா” என்று .அவள் கண்ட கனவு அந்த இரவு தந்தது. அந்தக் கனவை பிற கனவோடு ஒப்பிட்டு துச்சமாக ஒதுக்கியிருந்தல்..?<br />
<br />
வரலாறு வாடிப்போயிருக்கும், ராஜ்கர், சிந்துதுர்க், சதாரா கோட்டைகளின் பெருமை என்று சொல்லிக் கொள்ள ஏதுமிருக்காது. சத்ரபதி, என்ற சொல் வார்த்தையாகவே வலுவிழந்து நின்றிருக்கும். ஆனால், காலம் காத்திருந்தது. அவளை வரவேற்று பூத்தூவி புளகிப்பதற்காக,அதுதான் ஜீஜாவுக்கு கனவாக வந்து காட்சி பட்டது.கணவன் இறந்ததும் தானும் உடன் கட்டை ஏறியிருந்தால், மகன், “சத்ரபதி” ஆன வைபவத்தை பார்த்திருக்கத்தான் முடியுமா?<br />
<br />
அந்திம காலத்தின் அந்திப் பொழுதில், தான் கண்ட கனவை, அது என்னவென்று அறிய தான் பட்ட இன்னல்களையும் நினைத்து உணர்ச்சிமயமாய் நின்று கொண்டிருந்தாள் ராஜமாதான்வான ஜீஜாபாய்.<br />
<br />
“தங்கள் தனைமையை கலைத்து விட்டேனா?” எப்போதும் மனததை நிறைக்கும் சங்கீதம் போன்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் கனவே உயிர் பெற்றதாக, எதிரே நின்று கொண்டிருந்தான்,அவளின் அன்பு மகன் - மராட்டிய மண்டலத்தின் மன்னன் , மாவீரன் சிவாஜி.<br />
<br />
காண்போம்...<br />
<br />
****************************************************************************<br />
<br />
<br />
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-29304663762754057492015-10-28T02:23:00.001-07:002015-10-28T02:23:12.581-07:00அன்பின் விருட்சம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கனவுக்காட்சிகள்...கவிஞர் சுவாதி...05...<br />
********************************************<br />
<br />
திருத்தக்க தேவர் இயற்றிய காப்பியம் சீவக சிந்தாமணி காப்பிய நாயகனான சீவகனின் அன்னை விசயை காணும் கனவு இது..<br />
********************************************************************************<br />
<br />
விசயை மனமெல்லாம் தடுமாற்றம். சச்சந்தனுக்கும் ஒருவன் கொடுமை இழைக்க முடியும் என்று அவள் நம்பவேயில்லை. கனவை மறக்க நினைக்கிறாள். ஆனாலும், விடாமல் துரத்தும் கனவை எப்படித் துரத்த?<br />
<br />
யார் இந்த விசயை? அன்பை மட்டுமே விதைத்து, அன்போடு கலந்த ஏமாங்கத நாட்டின் இராசமாபுரத்தின் மன்னன் சச்சந்தன் மனைவி.<br />
<br />
இத்தனைக்கும் அவனுடைய மாமம் மகள் தான். பார்த்துப் பார்த்துப் பழகின முகம், பழகிப் பார்த்தே கிடந்த காலம்., என்றாலும் சச்சந்தனுக்கு விசயை அருகில்...அகிலம் சுழலுமா? உணவு வேண்டுமா? எந்தக்கேள்வியும் தெரிவதில்லை. அன்பினால் மட்டுமின்றி, அழகிய தோற்றத்தாலும் அவனைக் கவர்ந்தவள் விசயை. மாமன் மகளேதான் மனைவி என்றாலும், காதல் மனதில் அப்பிக்கொண்டால் அண்டம் முழுவதும் காதல் துணை மட்டுமே கண்ணில் தெரியும். அப்படித்தான் அவன் பார்வை படும் இடமெல்லாம் தோற்றப்பிழை போல அவளே தெரிந்தாள்.<br />
<br />
அதோடு தன் மகவை கருவில் தாங்கியிருக்கும் மனைவி அருகிலேயே இருந்ததால் மனமெல்லாம் பூத்துப் பூத்துக் குலுங்குகிறது சச்சந்தனுக்கு.<br />
<br />
நல்ல மனிதர்களை, பல வல்லமனிதர்கள் வென்று விடுகிறார்கள். அப்படித்தான் ஆனது சச்சந்தனின் வாழ்வும்.<br />
<br />
எதிரி நாடு என்று எவரும் இல்லாமல் போனார்கள். போர் புரிய வந்தவர்கள் புன்னகையோடு போனார்கள். புரியாமல் திணறினான் அமைச்சன். மனதுக்குள் அந்த சூட்சுமம் தெரிய வேண்டி அலறினான். மந்திர சக்தியின் மகிமையோ என்று கூட எண்ணினான். எனவே. அழுக்காறு அவனுக்குள் அழுக்காய் முளைத்தது. அது நட்பைக்களைத்தது.<br />
<br />
சிம்மாசனம் கிடைத்தால் சிந்தை மகிழுமென நினைத்தான். மந்தை ஆடுகள் போல் மனிதர்களைக் கவர்ந்தான்.ஊதியம் மட்டுமே வேண்டுவோர் உள்ளங்களை மதிப்பதில்லை. அப்படியே அமைச்சனுக்கும் கை கொடுக்க இருந்தனர் ஆயிரம் பேர் பிடித்தும் பிடிக்காமலும். அவனுக்குள் திட்டங்கள் பலவகுத்தான். மனதால் சிறுத்தான்.<br />
<br />
நல்லவர்களுக்கு அவமானமும் அசம்பாவிதங்களும் அநீதியும் நடக்கும் தான். ஆனால் அதனைத் தவிர்க்கவும், தகர்க்கவும் சந்தர்ப்பமும் கிடைக்கும்.இறை சக்தி - அன்பு கொண்டவர் எவருக்கேனும் எச்சரிக்கும்.கொக்கரிக்கும் பகையை சொல்லி வைக்கும். கள்ளம் முளைக்கும் மனதை சொல்லி வைக்கும்.<br />
<br />
விசயை கனவு கண்டாள். பதற்றம் தாளவில்லை. ஆட்சி முடியப் போவதும், காட்சி கலையப் போவதும் சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மறுப்பார்கள்.<br />
<br />
இதைக் கணவனிடம் தெரிவிக்க வேண்டுமா? கனவின் கனத்தை அவன் தாங்குவானா? அதன் பின் தூங்குவானா? வாரிசை வயிற்றில் சுமக்கும் இந்த நிலையில் ஒருவேளை அது பொய்மையாக இருந்தால் அது குழந்தைக்கல்லவா பாவம் சேர்க்கும்?<br />
<br />
இப்படி பல்வேறு எண்ணங்கள் எந்த வேலையும் இல்லாமல் இவளை மட்டுமே குறி வைத்து தாக்குகின்றன. வெறும் கனவுதானே என்று ஒதுக்க முடியவில்லை. சொல்லாமலும் பதுக்க முடியவில்லை.<br />
<br />
முடிவாய் தன் கணவனிடம் கனவை விவரிக்கிறாள் தலை குனிந்தவாறே> ஏன்?<br />
<br />
கனவை விவரிக்கும் போது, தன் கலக்கம் கண்களிலோ,முகத்திலோ தெரிந்தால் காதல் கணவன் நைந்து போகக்கூடும். அவன் முகம் வாடினால் அவள் உயிரே கலங்கவும் கூடும். இரண்டுமே நடக்கக்கூடாது. அதனால், குனிந்த படியே பேசினாள்.<br />
<br />
“பரந்து விரிந்த ஏமாங்கத நாட்டின் இராசபுரம் வீதிகள் கருப்பாய்த் தெரிகின்றன. சரயு நதியில் ரத்தம் உறைய வைக்கும் முதலைகள் கூட்டம். நரிகளின் ஊளைகள்.,” கனவில் அவள் காண்பது இவ்வளவுதான். அவை ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருந்தாலும் தனக்கும் கனவுக்கும் தொடர்பென்றே நம்பினாள். அதைத்தான் சொன்னாள்.<br />
<br />
குரல்கள் தளர்ந்து, நாக்கு வறண்டு, இதயம் நொறுங்கும் ஓசை, இவளேகேட்டது போல் ஒரு சோக உணர்வு அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறது.<br />
<br />
விசயை மீதான மையலுக்குள் மயங்கிக் கிடப்பவன் தான் சச்சந்தன்,என்றாலும் மதி நுட்பம் வாய்ந்தவன்.<br />
<br />
மனைவியின் கனவு தீமையின் வரவைக் குறிக்கும் சூசகமாக இருக்கட்டும்: இல்லாமல் போகட்டும். அதல்ல முக்கியம். இப்போது தேவை எச்சரிக்கை.<br />
<br />
தன்னுடைய வம்சம் விளங்க வேண்டும். அது காக்கப்பட வேண்டும். அதற்கு வழி, மனைவியை பாதுகாப்பாக வெளியேற்றுவது தான். தன்னை விட்டுச் செல்ல அவள் ஒப்புவாளா என்றொரு கேள்வியும் எழுந்தது மனதில். வேறு வழியில்லை. அவள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு எங்கள்காதலின் விளைவாய் துளிர்த்த மகவும் முக்கியம். அந்த ராஜமுத்து எப்படி இருக்கப் போகிறது என்று, தான் பார்க்காவிட்டாலும் சரி, ஊரே பார்க்க வேண்டும். உலகம் போற்ற வாழ வேண்டும். இது, ஒவ்வொரு தந்தைக்குமான உணர்வல்லவா?<br />
<br />
அன்பின் விருட்சங்கள் சச்சந்தனின் மனதை முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்தன. ஆம், ஒப்பித்தான் ஆக வேண்டும் என்று தீர்மானித்தான்.<br />
<br />
சேர்ந்து இருப்பது காதல் தான் என்றால், இப்போது பிரிக்க நினைப்பதும் காதலால் தான், அவளை பாதுகாப்பாக அனுப்பி விட்டு, எதிர்ப்புகளை என்னவென்று விசாரிக்கலாம்” என்றும் முடிவு செய்தான்.<br />
<br />
மறுகணம், அதற்கான வேலையில் ஈடுபட்டான். அவனுக்குள் இருந்த தொழில் நுட்ப அறிவு மயில் பொறியை சிருஷ்டித்தது. விசயை வியந்தாள். தன்னோடு தன் கணவனும் வரப்போகிறான் என்றே ஒரு கணம்சிலிர்த்துப் போனாள். ஆனால், தான் மட்டுமே போகப்போவதை அறிந்ததுமே தடுமாறிப்போனாள்.<br />
<br />
உலகின் மிகப் பெரிய வலி, தன் கண் முன் தன் காதலை துணை கலங்கித் தவிப்பதைப் பார்ப்பது, என்ன செய்ய? கீழிருந்து மேல் நோக்கிப் பாயும் அருவியும், பின் நோக்கிச் செல்லும் காலமும் இயற்கையில் இல்லையே! தடுமாறத்தான் முடிந்தது அவளால்.<br />
<br />
நடக்கவே வேண்டாம் என்றாலும், நடக்கக் கூடாதென்றாலும் நடப்பவற்றை மாற்றி நடக்க வைக்கவா முடியும்? அவள் பயந்தபடியே கனவின் காட்சிகள் கண் முன் நடக்கின்றன.<br />
<br />
சச்சந்தனுக்குப் புரிந்தது.கட்டியங்காரன், நட்பு முகம் போர்த்திய நரியாய் இருந்துள்ளான் என்பதை தெளிவாய் அறிந்தது அறிவு. அதனால், உடனே செயல்பட்டது.மயிற்பொறி ஏறிப் போய் மறைந்தே வாழ்” என்றான்.<br />
<br />
விசையின் பொறியை தட்டுத் தடுமாறித் தட்டி இயக்குகிறாள் விசயை.உயிர் கீழே இருப்பது போலவும், உடல் மேலே செல்வது போலவுமான பிரமை அவளுக்குள். சிறிது கடப்பதற்குள் சச்சந்தன் கூட வருவது போலவே ஒரு காட்சிப்பிழை.<br />
<br />
அதெப்படி எந்தப் பொறியும் இல்லாமல்....? மதி நுட்பம் வாய்ந்த மாவீரன் தான். ஆனால், மந்திரவாதி இல்லையே என்ற எச்சரிக்கை மனதுக்குள் தோன்ற,கீழே பார்த்தாள். சச்சந்தன் உடல் ரத்த வெள்ளத்தில். ஏதும் செய்வதறியாது பொறி விசையையும் இயக்க இயலாமல் மயக்க நிலைக்குச் சென்றாள் விசயை.<br />
<br />
சூழ்ச்சி, சச்சந்தனிடம் இருந்து நாட்டைப்பிரித்தது: கனவு அவன் வம்சத்தைக் காப்பாற்றியது...<br />
<br />
காண்போம்<br />
********************************************************** </div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-51565147851221372732015-10-25T09:54:00.003-07:002015-10-25T09:54:22.373-07:00அழகின் விழுது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கனவுக்காட்சிகள்.......கவிஞர் சுவாதி...04<br />
*********************************************<br />
<br />
<br />
வணிகன் மகள் தான்....ஆனால், வாழ்க்கையை விற்கவோ வாங்கவோ தெரியாத வணிகன் மகள். நலமாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென எண்ணி கோவலனுடன் ஊர் போற்ற திருமணம்நடக்கிறது. காலச் சூழலால் மாதவியின் கலையில் மயங்கி, மாதவியிடமே தஞ்சம் புகுகிறான் கோவலன்.<br />
<div>
<br /></div>
<div>
கண்ணகி, கவலைகள் துரத்தக் காத்திருக்கிறாள். கனவு கண்ட வாழ்க்கை கிடைக்காமல், கனவாய் நடக்கும் கனவு வாழ்வு, பிரிவு, சோக வளையங்களை மட்டுமே சுற்றிச் சுற்றித் தருகிறது.</div>
<div>
<br /></div>
<div>
நினைவு அடுக்குகளில் இருக்கும் இன்பப் பொழுதுகளை அசை போட்டுக் கொண்டே இருக்கிறது மனம்.ஆனாலும், அவ்வப்போது அடம் பிடிக்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
சோர்ந்துபோன நிலையில் கண்ணகியைப் பார்க்க தோழி தேவந்தி வருகிறாள். “கணவனைப் பிரிந்தே தான் தானும் வாழ்கிறோம்’ என்ற நினைவின்றி, கண்ணகியின் கவலை குறித்தே கவலை கொள்ளும் நட்பு கோபுரம் அவள்.</div>
<div>
<br /></div>
<div>
கண்ணகியின் தனிமையைத் தகர்க்க வந்த மருந்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாயின் வார்த்தைகளை தெருப்பாய்க் கக்குவோம். மத்தியில், பன்னீராய் அபிஷேகித்த பனிமலர் அவள். துள்ளலோடு வந்த தேவந்திக்கு, துவண்டு போன கண்ணகியின் முகக்கவலை, அகக்கவலையை அதிகப்படுத்துகிறது.</div>
<div>
<br /></div>
<div>
உண்மையான அன்பில் தான் அடுத்தவர் வலியின் முகவரியை அப்படியே படிக்க முடியும். கண்ணகியின் முகமாற்றத்தை முற்றிலும் அறிந்தவள். பேசுகிறாள்: “வாயேன்...சாத்தன் கோயிலுக்குச் செல்வோம். சோமகுண்டம், சுரகுண்டம்முங்கி எழுந்தால் கணவனைப் பிரியவே மாட்டோம். ஒருவேளை விதியால் பிரிந்திருந்தாலும் மீண்டும் விரைவில் இணைவோம்”.</div>
<div>
<br /></div>
<div>
பன்மையில் விழுகின்றன வாக்கியங்கள். சொல்லாமல் சொல்கிறாள்," நானும் பிரிந்திருக்கிறேன்,” என்று. அப்போதும் கவலை படர்ந்த முகத்துடனா இருப்பது? என்ற அன்பின் நெடி, அன்யோன்யத்தின் வாசம் வீசுகிறது.<br />
<br />
கேட்டவுடன் கண்ணகிக்கு மனதுக்குள் மறு ஒளிபரப்பானது தான் கண்ட கனவு. குழப்ப ரேகைகளைக் கொட்டியபடியே விவரிக்கிறாள்: “தீய கனவொன்று கண்டேன் தோழி. என் கணவன், என் இரு கைகளையும் பற்றி என்னை அழைத்துப் போகிறான், அழைத்துப்போகும் அந்தக் கைகளில் நிகழ்காலப் பிரியமும்,எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும், கடந்தகாலத் தவறின் கூச்சமும் தெரிகிறது. பெரிய நகரத்துள் நுழைந்தோம். நானும் பழைய வாழ்வைக் கனவாக்கி, புதிய வாழ்வைத்தொடங்கலாம் என நினைத்தேன். அந்நியர்கள் என்று எண்ணியோ, அவமானம் என்று வெறுத்தோ, அம்மக்கள் பொய் தேள் காட்டி,வீண்பழி சுமத்தி பயங்காட்டினர்.கோவலனுக்குத் தீமை விளைந்தது. ஆனாலும், நாங்கள் நற்பேற்றை அடைந்தோம்”. என்றாள். சொல்லி முடிக்குமுன் முகத்தின் நிலவரம், நெஞ்சத்தின் கலவரம் சொன்னது.<br />
<br />
பேசுவதற்குப் பிடி கிடைத்துப் போனது தேவந்திக்கு.” பார்த்தாயா? சாத்தன் கோயில் என்று சொன்னவுடன் உன் கணவன் வந்துவிட்டான். அவன் திருந்துவான். உனக்காக வருந்துவான். வா, உடனே போகலாம்” என்கிறாள்.<br />
<br />
தேவந்தியின் நட்பு மனதுக்குத் தெரிந்ததெல்லாம் கண்ணகியை ஆற்றுப்படுத்துவதுதான். என்ன வித்தைகள் செய்தும் அவள் இயல்பை மாற்ற தவியாய்த் தவித்தது நெஞ்சம். அவசரமாக உதிரும் வார்த்தைகளில் தெரிகிறது ஆற்றுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.<br />
<br />
கண்ணகியின் மனம் கலங்கியது. இவர்கள் கோவலன் என்னை விட்டுப் பிரிந்ததாகவே நினைக்கிறார்கள். உடல்கள் பிரிந்தால் பிரிதல் என்று நினைக்கும் இவர்களுக்கு எப்படி உணர்த்துவது?<br />
<br />
எனக்குள் ரீங்கரிக்கும் “மாசறு பொன்னே, வலம்புரி முத்தே” என்கிற சொல்லிசை அனுபவத்தை, இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? வெறும் காமமா அவனை மாதவியிடம் கடத்தியிருக்கும்? கலையின் ஈர்ப்பு அல்லவா? யாழை மீட்டுவதும் இனிய பாடல்களைப் பாடுவதும் கோவலனுக்குப் பிடித்தமான விஷயம். அவனுக்கும் மேம்பட்டு நடனத்திலும் சிறந்தவள் மாதவி...கோவலனை ஈர்த்ததும் அதுதான்.<br />
<br />
அவன் பெண் பித்தனாய் இருந்திருந்தால், எத்தனையோ பெண்கள் அவன் வாழ்வில் இடைப்பட்டிருக்க வேண்டுமே,...அப்படி ஏதும் இல்லையே...<br />
<br />
என்னை நெருங்கிய போது அவர் வெளிப்படுத்திய அன்பு நிஜம்...அவர் காட்டிய பிரியம் நிஜம்...காதலும் அப்படித்தான். அமுத நிலவின் கிரண்ங்களில் சூடியிருக்கும் என்று, பொய்யாகக் கூட சொல்ல முடியாது. ஆனால், அவர் அருகே இல்லாத நேரங்களில் மனதுக்குத் தெரியத்தான் செய்கிறது அந்த வெம்மை.<br />
<br />
இருந்தாலென்ன? கோவலன் நலமாயிருக்க வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்.<br />
<br />
காமத்தையும் காதலையும் பிணைத்தே பார்ப்பவர்களுக்கு எப்படித் தெரியும் என் இதயத்தின் ஓசைகள்? ஆடலும் பாடலும் ரசித்த கோவலன் அங்கிருப்பதைத் தப்பென்று பிறர் பேசுவதை, தப்பென்று இவள் நினைத்தாள்.<br />
<br />
கோவலன் விஷயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை ஒத்தி வைத்தாள். அவன் அன்பை மட்டுமே தனக்குள்ளே பொத்தி வைத்தாள். அன்பின் நோக்கமே அனைத்தையும் கொடுப்பது. ஆதிக்கம் செலுத்துவதில்லை. இது தேவந்திக்குமா தெரியாமல் போகும்?வெறும் வார்த்தைகளா வந்து வாழ்க்கையின் வலியை வாங்கும்?<br />
<br />
தேவந்திக்கும் தெரிந்து போனது; கண்ணகியின் உள்ளுணர்வின் ஓசைகளும் பாஷைகளும், மதுராபதி தெய்வத்தையே மயங்க வைத்த கண்ணகி அல்லவா?<br />
<br />
நெற்றியின் சுருக்கங்கள் அவர்கள் காதல் வாழ்க்கையின் நெருக்கங்களைச் சொன்னது.<br />
<br />
கோவலன் வருவான் என்ற தேவந்தியின் கூற்று ஒரு நொடிதான் இனித்தது. மறு வினாடியே வலித்தது. அவன் எங்கிருந்தாலும் நலமாக இருக்க வேண்டும். காதலின் விதியே காதல் துணை எங்கிருந்தாலும் வாழ நினைப்பது. ஒருவேளை இங்கு வந்து ஏதேனும் நடப்பதற்கு மாதவியிடமே இருக்கட்டுமென்று ஏங்குகிறது மனம்.<br />
<br />
எனக்கு வருத்தம் தெரிவிப்பதாக நினைத்து அவனைப் பழிக்கவும் வேண்டாம். இங்கே வந்து வார்த்தைத் தேள்களோ, வாழ்க்கையின் தேள்களோ, எதுவுமே கொட்ட வேண்டாம் என்றே தோன்றுகிறது. வரவேண்டும் என்று இருக்கும் இயற்கைகளிடமெல்லாம் தன் உணர்வைப் பதித்தவள்,, வரவே வேண்டாம்”என்று தனக்குள் தவம் கொள்கிறாள்.<br />
<br />
என் இனியவன் தனக்கான இடத்தில் இருக்கட்டுமே, இது எனக்கு மட்டும் புரிந்தால் போதும்.இடையில் இவர்கள்யார்? மாதவியை அடைந்தான் என்று பேசுபவர்கள் பொறாமைக்காரர்கள். அழகின் விழுதான அவளை அவர்களே விழுங்க நினைத்தவர்கள். தண்ணீருக்கு எப்படித் தெரியும் தான் எங்கே இருக்கிறோம் என்று?இருக்குமிடத்தில் தன்னை அதாகவே ஆக்கிக் கொள்வது போலவே தான்,கோவலனும் பாத்திரத்தின் வடிவம் கொண்டான். அவனுக்குப் பொய்மைகள் பழக்கமில்லை. முகமூடி அவனிடம் இல்லை.முகம்மட்டுமே இருக்கிறது. நான் என் பிரியத்தைத் தொலைக்க விலை. எனவே, என் காதல் நிஜம்: அதுபோல், என் மீதான அவன் காதலும்நிஜமே.<br />
<br />
அவன் அண்மையை விட ஆருயிர் எனக்கு முக்கியம். இங்கு வந்தால் ஏதோ நடக்குமென்றால் எப்படிப் பொறுப்பேன்? என்று நினைவலைகளுக்குள் மூழ்கித் திடமாய் முடிவெடுக்கிறாள்; இனி , கோவலன் அங்கேயே இருக்கட்டுமென்று. மனதுக்குள் நடந்த போராட்டங்களுக்கு விடையாய் கேட்கிறது வாசலில், கண்ணகி” என்றொரு குரல்.<br />
<br />
திரும்பிப் பார்க்கிறாள், கோவலம் நிற்கிறான்: அன்பைக் குழைத்துக்கொண்டு.<br />
<br />
(காண்போம்) </div>
</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-40283846120907081012015-10-22T03:07:00.002-07:002015-10-22T03:07:38.332-07:00கடவுளின் கடவுள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கனவுக் காட்சிகள்....03.....கவிஞர் சுவாதி<br />
******************************************<br />
<br />
<br />
வாசல் புறத்தில் மங்கலப் பேரொலி கேட்கிறது. அந்த வாத்திய கோஷத்தையும் கடந்து மனிதர்களின் ஆராவாரம். ஆம்; அவனே தான் வந்து கொண்டிருக்கிறான். பச்சைப் பசுங்கொண்டல் போன்ற திருமேனி, பவளத்தை வெட்கச் செய்யும் அதரங்கள்; தாமரைகளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துகின்ற திருவடிகள்.<br />
<br />
மனமெல்லாம் ஆர்ப்பரிக்கிறது.வெட்கத்தில் கன்னம் சிவக்குமென்பார்கள். ஆனால் உள்ளமும் சிவந்ததை யார் அறிவார்? ஆயிரம் யானைகள் சூழ வருகிறான் என் நாராயணன். தன் தோழர்களின் துணை கொண்டு திருவில்லிப்புத்தூர் வீதிகளை வலம் வருகிறான்<br />
<br />
பொதுவாக, திருமணம் நடப்பது போல் கனவு கண்டால், துக்கத்தின் அறிகுறி என்று சொல்வார்கள். ஆனால், திருமணம் யாரோடு நடக்க வேண்டும் என்பதையும், அது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கனவு கண்ட ஆண்டாள், தன் கனவை தன் தோழியரோடு இப்படிப் பகிர்ந்து கொள்கிறாள்.<br />
<br />
உனக்குத் தெரியுமா? என் இதயத்தின் துடிப்புகளை எப்படி கண்ணனை நோக்கியும் கண்ணனாகவும் மாறியது என்று?<br />
<br />
கற்பூரம் நாறுமோ?கமலப்பூ நாறுமோ? என்று, அவன் அண்மைகளிடம் மட்டுமல்ல, வெண்சங்கையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவன் வாயமுதை உச்சமாய்த் தொட்ட அவற்றுக்குத் தெரியும்...என் காதலின் வேகம் அறிந்தாயா? என் காதலின் மொத்தமும் அறிந்தாயா?<br />
<br />
கண்ணனுக்குச் சூட்ட வேண்டிய மாலைகளை எனக்குச் சூட்டிப் பார்த்ததும், மனத்தின் அதே ஆர்ப்பரிப்பு தான். காதல்..வேர் பிடிப்பு ஒன்று தான்.ஒன்றுதல் ஒன்று இல்லாமல், ஒன்றுதல் எவ்வாறு நடக்கும்?<br />
<br />
அழகாய் இருக்கிறேன் என்பதாலேயே பணம் படைத்த பலரும் மணம் முடிக்க வருவர். ஆனால்,கண்ணனுக்குரியதை எப்படி பிறருக்கு அளிக்க முடியும்? அப்படி ஒருவர் விரும்புவதைத்தான் எப்படி அனுமதிக்க முடியும்?<br />
<br />
எல்லோரும் பூஜைகள் செய்வது தனக்கு ஏதேனும் வேண்டுமென்றூ, நான் பூஜை செய்வதோ கண்ணனே வேண்டுமென்று. ஆலயத்தின் வாசங்கள் எல்லாம் என்னை அவன் வாசலுக்கே கொண்டு செல்கின்றன.<br />
<br />
உள்ளத்தில் உள்ளவற்றை உன்னிடம் சொல்லி விட்டேன். நீ ஊருக்கு சொல், எங்கும் சொல், எப்போதும் சொல், யாவரிடமும் சொல்....எனக்கு கண்ணனே மணமகன், கண்ணனே மனமகன்”.<br />
<br />
பரிபூரணமான காதல் என்பது பக்தி மார்க்கத்தில் ஆத்ம சமர்ப்பணம். அதைத்தான் தொடர்கிறாள். ஆண்டாள்.<br />
<br />
“நீ மற்றும் நம் தோழிகள் அனைவரும் சூழ்ந்து மகிழ்வாக மங்கல ஒலியெழுப்பு, தங்கப் பூர்ண கும்ப மரியாதையுடன் என் நாதனை வரவேற்கிறீர்கள். நாளை திருமணம் என்று நாள் குறித்தாயிற்று. பாக்கு மரங்களால் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலின் கீழ், இனிமை ததும்ப நரசிம்மனைப் போல் மிடுக்குடன் நுழைகிறான் என் மாதவன்.<br />
<br />
அப்பா, அவனை விஷ்ணுவாகவே பாவித்து கால் அலம்பி பூஜிக்கிறார். தயிர், தேன், நெய், கலந்த மது வர்க்கத்தை வேத மந்திரம் சொல்லி வழங்கி அருந்தச் செய்கிறார்.<br />
<br />
அப்போது கண்ணனைப் பார்க்க இயலாமல் வெட்கம் என் ரத்த திசுக்கள் வரை ஊடுருவிச் செல்கிறது. இந்திரன் தலைமையில் தேவர்கள் பலர்வந்திருக்கின்றனர். நன்கு வேதம் ஓதத் தெரிந்த அந்தணர்கள் பல திசைகளிலிருந்தும் வந்திருக்கின்றனர். அவர்கள் தான் என்னை கோவிந்தனுக்கு மணம் செய்விக்க முடிவு செய்கிறார்கள்<br />
<br />
வானத்தில் பூ பூத்தது. வானவில் தோன்றி தன் மகிழ்வைக் காட்டியது. பறவைகள் கிறீச்சிட்டு வாழ்த்துச் சொல்லின.பசுமையான புல் கூட்டம் தலையசைத்து தன் மகிழ்வைத்தெரிவித்தது.<br />
<br />
இந்திரன், வருணன், சூரியன் ஆகியோரை மந்திரம் சொல்லி வணங்கி பத்து புத்திரர்கள் கேட்கிறேன். பதினொன்றாவதாக நாராயணனையே கேட்கிறேன். எப்போதும் எனக்கு அவன் முதல்வன் தான். ஆனால், புதல்வனாகவும் அவனே வேண்டும்.<br />
<br />
இப்போது கண்ணன் என் தோஷங்களை நீக்க மந்திரங்கள் சொல்லி தர்ப்பைப் புல்லால் என் புருவங்கள் தடவினான. தோஷங்கள் மட்டுமா விலகின? எனக்குள் அரூபங்கள் எல்லாமும் மறைந்தன. என்னைச் சுற்றிலும் உள்ள ரூபங்கள் எல்லாமும் மறைந்தன. இவன் மாயக்கண்ணன் அல்லவா? அவனை நினைப்பதைத் தவிர வேறொன்றும் இல்லாத வாழ்வை .நேரத்தை , எனக்கே தந்து விட்டான்.<br />
<br />
புதிய ஆடைகளை என் நாத்தி அந்தடி என்ற துர்க்கை மூலம் அணிவிக்கப் படிகிறேன்.ம்...புடைவையா? புடைவையாய் என்னுடலைச் சுற்றியதும் கண்ணன்...கண்ணன்...கண்ணனே,<br />
<br />
மணமாலை அணிவிக்கப்பட்டு, நிச்சயதார்த்தம் முடித்து, வலது கை பிடித்து அக்னி குண்டத்தின் மேற்குபுறம் மனையில் அமரச் செய்தனர். மங்கல மேளங்கள் முழங்க, மாங்கல்யம் தருகிறான் கண்ணன். இந்த வினாடியில்தான்....நான் கடவுளின் கடவுள் ஆனேன். நான் வண்ங்கியோர், இனி என்னை வணங்குவர்.<br />
<br />
இந்த பூமி எங்கும் எனக்குக் கண்ணன் வடிவம் தான் இந்த மனிதரெல்லாம் கண்ணன் இல்லை. ஆனால் கண்ணனுக்குள் அனைத்தும் அடக்கம், இந்தப் பூலோகத்தையே என் அன்பாகச் சுருட்டி நான் கண்ணனுக்குத் தருவேன். நீங்கள் அவனை கர்ப்பத்துள் பார்க்கிறீர்கள் தெய்வமாய், நான் என் இதயத்துள் கர்ப்பம் த்ரிக்கிறேன் கணவனாக, காதலனாக...<br />
<br />
உங்களுக்கு, கண்ணன் உயிரைக் காப்பவன், எனக்கு கண்ணனே உயிராய் இருப்பவன்.சடலமாய் மாறப்போகும் இந்த உடலும் உயிர்க்கும். கண்ணன் கை பட்டால், மற்றோர் தொட்டால், தொட நினைத்தால்...உள்ளமே சடலமாகும்.<br />
<br />
எனவே தான் தோழிம் என் நினைவில்முங்கி, என் கருத்தில் நிறைந்து எனக்குள் நிறைந்த கண்ணனே என்னை மணக்கிறான். மணப்பான், மணக்க வைப்பேன் என்பது சூளுரையாக வெடித்தது: துடித்தது.<br />
<br />
இவை கனவாக இருக்குமென்று தோன்றவில்லை. ஆனால் வெறும் கனவாகி விடக்கூடாது என்ற ஆண்டாளின் வேண்டுதல் ,...பிரார்த்தனை,..<br />
<br />
தன்னுடைய சித்தத்தைக் கவ்ர்ந்த கண்ணன் வெறும் மானுடன் அல்ல,மானுட்டத்துக்கெல்லாம் உயிரூட்டவல்ல மகாபுருஷன். அவனுக்குரியவள் நான் என்று உணர்த்தத் தான் இத்தனை பிரயத்தனங்கள்.<br />
<br />
பிற மானிடர்க்கு என் அவயங்களைப் பார்க்கும் உரிமை கூட கிடையாது என்று சொல்லும் போது கண்ணனின் மீதான் தீராக்காதல், மணம் முழுவதும் மட்டுமல்ல; தேகமெல்லாமும் கூட பரவி, பரவசமாக்குவதால் தான் கனவு சொல்வது போல் காட்சியாகப் படைக்கிறாள்.<br />
<br />
எழுவதை, எழுதுவதை, பேசுவதை என்று பிற செயல்பாடுகளை பழக்கமாக்குவார்கள் மனிதர்கள். ஆனால், ஆண்டாளோ காதலையே, காதலிப்பதையே பழக்கமாக்குகிறாள்.<br />
<br />
நான் கண்ணனின் பூந்தோட்டம். பூக்களாய்ப் பூத்துக் கிடக்கிறேன், கண்ணனுக்கு மட்டுமே பறிக்கவும், பராமரிக்கவும் உரிமை, இந்தப் பாடல்களைப் பாடி நான் கண்ணனை அடைந்தேன். நீங்களும் பாடுங்கள். உங்கள் வழித்துணையை, வாழ்க்கைத் துணையை அடைவீர்கள்”என்று சொற்களுக்குள்ளே சூட்சுமம்வைத்தாள்: சொற்களின் மேலே ஆட்சி செய்தாள்.<br />
<br />
ஒரு கனவுக் காட்சியை இயக்கியதும் அவளே; இயங்கியதும் அவளே: இயக்க வைப்பதுவும் அவளே,. ஆண்டாள், நம் மனதை ஆள்வாள்.<br />
<br />
காண்போம்....<br />
*********************************************************************************</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-33175724221287408292015-10-17T08:33:00.001-07:002015-10-17T08:33:24.917-07:00அன்பின் தென்றல்...கனவுக்காட்சிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கல்கியின் தீபம் இதழில் நான் எழுதிய கனவுக் காட்சிகள் பகுதி...2<br />
<br />
பிப்ரவரி 05...2015 இதழில்.......கவிஞர் சுவாதி<br />
<br />
*******************************************************************************<br />
<br />
<br />
ஒருவர் காணும் கனவு இன்னொருவருக்கு நன்மையை உரைப்பதாக அமைவது வியப்பு தான். ஆனால், உண்மையில் அந்தக் கனவு, அதைக் கண்டவருக்கு ஒருதீய செய்தியைத்தான் உணர்த்தியது. அதே சமயம், அவரருகே இருந்தவருக்கு அது மிக மிக நல்லசெய்தி. இப்படி ஒரு சுவாராஸ்யமான முரண் தான் வாழ்க்கை என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திய கனவு இது.<br />
<br />
கனவைக் காண்பவள்,விபீஷணனின் மகளான திரிசடைதான். அவள் தான் அசோகவனத்தில் சீதைக்குக் காவலாக இருக்கிறாள். சீதைக்குக் காவலாக இருக்கிறாள். சீதையோ எப்போதும் விழுதல், விம்முதல்,மெய்யுற வெதும்புதல், எழுதல், ஏங்குதல்,இரங்குதல்,இராமனை எண்ணித் தொழுதல்,சோருதல், துலங்குதல், துயர் உழந்து உயிர்த்தல், அழுதல்..என்று உணர்ச்சி பிழம்பாகவே தடுமாறிக் கொண்டிருக்கிறாள்.<br />
<br />
சிந்தனையில் எப்போதும் ,”இராமன் வருவானா? எப்போது வருவான்? எப்படி வருவான்? யார் சொல்வார்கள்? இந்த இடம் எப்படித் தெரியும்? இளவல் தன் மேல் உள்ள கோபத்தால் சொல்லாமல்விட்டிருப்பானோ? “ என்று பற்பல சந்தேகங்களோடு உளைகிறது அவள் மனம்<br />
<br />
தோழியருடனும், சகோதரிகளுடனும் கூடிக் களித்து சந்தோழித்தவளுக்கு,இந்தத் தனிமைச்சிறை மேலும் தவிப்பைத் தருகிறது. கணவனைப் பிரிந்த துன்பம் ஒருபுறம்: தன்னுடைய நிலையை எண்ணிஏற்பட்ட தன்னிரக்கம் இன்னொருபுறம்: பகிர்ந்து கொள்ளவும் துணையற்றுப்போன துயரம் மறுபுறம்”... இப்படித் துவண்டவளுக்கு திரிசட ஆறுதலாகிறாள்.<br />
<br />
அப்போது, சீதைக்கு இடப்பக்கத் தோள்கள்,புருவம், கண்கள் துடிக்கின்றன. அதனால்திரிசடையிடம் கேட்கிறாள். “ நாங்கள் வனம் புகுந்த நாளிலும் இராவணன் என்னைக் கவர்ந்து வந்த நாளிலும் வலது பக்கம்துடித்தன. ப்போதோ இடதுபக்கம் துடிக்கிறது. ஆனால், இந்தக் காட்டுக்குள் எனக்கென்ன நன்மை வந்து சேரப்போகிறது?” என்று கேட்கிறாள்.<br />
<br />
கேள்வியில் நப்பாசை இருக்கிறது.பயம் இருக்கிறது.எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆவல் இர்க்கிறது.திரிசடை நல்லவை மட்டுமே சொல்லவேண்டும் என்கிற வேண்டுதல் இருக்கிறது. அதற்கு ஏற்பவே திரிசடை பேசுகிறாள். “ தேவி, உனக்கு மங்களங்கள்வந்து சேரப்போகின்றன.நீ நிச்சயம் உன் தலைவனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து உன்னை சந்திக்கப் போகிறான். உனக்குக் கொடுமை செய்த தீயவர்களுக்குத் தீமையே சேரும்”<br />
<br />
அவள் சொல்லும் தீயவர்கள் யார்? அவளுடைய பெரியப்பாவான ராவணன். அவனுடைய தவறுக்குத் துணை செல்பவர்கள். அவர்களுக்குத் தீமையே சேரும் என்று சொல்லும் போது, அவர்கள் அனைவரும் தன் உறவுஎன்று தெரியாமாலா அவள் சொல்கிறாள்? இல்லை....கண்ணெதிரே, கணவனைப் பிரிந்து, தன்னுள் குமைந்து கழிவிரக்கத்தால் நலிந்து துடிக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறாள். “வனவாசம்” என்ற கொடுமையே கூட ஆனந்தம் என்று கணவனோடு வந்தவளுக்கு இப்படியொரு துக்கம் வரலாமா? அதை ஏற்படுத்தியது யாராய் இருந்தால் தான் என்ன? என்கிற சத்தியாவேசம் அவளுக்குள், அதனால்தான், அவளே தொடர்ந்து சொல்கிறாள்.<br />
<br />
“இராவணன் தலையில் எண்ணை தேய்த்துக் கொண்டு பேய்களும் கழுதைகளும் பூட்டிய தேரில்தெந்திசை போகக் கண்டேன். அவன் மட்டுமல்ல, அவன்மக்களும் சுற்றமும் கூடப் போனார்கள்,நகரிலிருந்த தோரணக் கம்பங்கள் ஒடிந்தன.யானைகளின் தந்தங்கள் முறிந்தன. பூரணக் கும்பத்திலிருந்த புனித நீர்க் கள்ளைப் போல் பொங்கிவழிந்தது. மங்கையர்களின் தாலியெல்லாம் தாமே இற்றுவீழ்ந்தன. மண்டோதரியின் கூந்தலும் அவிழ்த்து துர்நாற்றம் வீசியது,<br />
<br />
இன்னும் கேள், இரண்டு சிங்கங்கள் புலிக்கூட்டத்தோடு இங்கு வந்து மத யானைகள்வாழும் வனத்தை வளைத்து அவற்றோடு போர்செய்தன. யானைகள் கூட்டம் கூட்டமாக வீழ்ந்து பட்டன. அந்த வனத்திலிருந்து மயிலும் பறந்து போனது. அதே நேரம் அழகான தீபம் ஏந்தியபடி வீடணன் அரண்மனைக்குச் சென்றாள். இந்தச் சமயம் என்னை நீஎழுப்பி விட்டாய்” என்கிறாள்.<br />
<br />
இதைக் கேட்டதும் சீதை கண் மலர்கிறது. முகம் மலர்கிறது. கவலை மடிந்த பொழுதாகவும்,துயரம் ஒடிந்த பொழுதாகவும், தெரிகிறது. எனவே, ஆவல் படிந்த குரலில் சொல்கிறாள். ” இன்னும் தூங்கி மீதம் உள்ள கனவையும் எனக்குச் சொல் அன்னையே” என்கிறாள்.<br />
<br />
சீதை பூமியிலிருந்து பிறந்தவள். அயோனிஜை.அதனால், அவளுக்கு அன்னை இல்லை.தன் மாமியார்களையும் அவள் அன்னை என்று அழைப்பதில்லை. உண்மையில் திரிசடைக்கு அவள் வயதும் இருக்கலாம்: அல்லது அவளைவிட வயதில் குறைந்தவளாகவும் இருக்கலாம். ஆனால்,அன்னையே என்று அவளைக் கூப்பிட வைத்தது கனவு தான்.<br />
<br />
இதற்கு முன்னரே சீதையை அடிக்கடி ஆற்றுப்படுத்தும் பணியை திரிசடை செய்கிறாள், எனவே தான் அவளை எதிரியின் உருவமாகக் காணாமல், நட்பின் உருவமாகக் காண்பதோடு அன்னையின் உருவமாகவே காண்கிறாள் சீதை.<br />
<br />
இராவணன் பற்றிய ரகசியம் சொன்னதால் சீதை தைரியம் அடைந்ததும் இந்த அன்பு அரக்கியால் தான்.<br />
<br />
இன்னொன்றும் திரிசடை கனவில் கவனிக்கத் தக்கது. தென்புலம் என்று திசை சொல்கிறாள். நேரம் சொல்கிறாள். ஆக, அவளூக்குள் சீதையின் துன்பம் மனதின் ஆழத்தில் படிந்ததோடு, அவள் கவலைகள்மறந்து களிப்பாக மாற வேண்டும்.என்ற பிரார்த்தனையோடு இருந்ததாலேயே சீதையைப் பற்றிய கனவு காண முடிந்தது என்றே தோன்றுகிறது.<br />
<br />
தன் குலமே அழிந்து, தன்நாடு, தன் மக்கள், தன் சுற்றம், அனைத்தும் அழியும் என்றாலும் சீதை என்ற அழகின் மாது, அன்பின் தென்றல் வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். அதற்கு விலையென எதுவும் மாய்ந்து போனாலும் அது நன்மை என்றே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட ராட்சஸியாக இருக்கிறாள்.<br />
<br />
ஆச்சரியமான ஒரு முரணும் இங்கு இருக்கிறது. அனுமன் முதன் முதலில் இலங்கை வரும் போது, இலங்கையின் காவல் தெய்வம் தடுக்கிறது. அதை வீழ்த்தி நுழைகிறான் அனுமன். “ இன்றிலிருந்து இலங்கையின் அழிவு ஆரம்பமாகிறது” எனச் சொல்லி அந்த தெய்வம் ஒதுங்குகிறது. அநீதி ஆட்சி செய்த போது , அதற்கு துணைபோன தெய்வமும் ஒதுக்கப்பட்டு விட்டது.<br />
<br />
அப்படியென்றால், த்ர்மத்தில் பிறழாத விபீஷணன் பொறுப்பேற்றால், யார் காவலிருக்க முடியும். அவனைப் போன்றே தர்மமும், கருணையும், வீரமும் மிக்கவர்கள் தானே இருக்க முடியும். அதற்கு திரிசடையே தக்கவள் என்றும் முடிவு கட்டினாள் பிராட்டி என்றால், மிகையல்ல.அதனால் தான், சீதை கடைசியாக அங்கிருந்து கிளம்பும் போது,”நீயே இந்த இடத்தில் காவல் தெய்வமாக இரு” என்று வாழ்த்தி விட்டுச் செல்கிறாள்.<br />
<br />
அதே சமயம், அரக்கர் என்பது உருவத்திலா? உள்ளத்திலா? என்ற கேள்வியோடு நம்மை வியக்க வைக்கிறது திரிசடையின் கனவு<br />
<br />
(காண்போம்)<br />
*********************************************************************</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-61982698548617817162015-10-16T00:57:00.001-07:002015-10-16T00:57:23.286-07:00கனவுக் காட்சிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கல்கியின் தீபம் இதழில் வெளியான “ கனவுக்காட்சிகள்” என்னும் இக்கட்டுரைத் தொடரை இங்கே பகிர்வதில் பெருமையும் மகிழ்ச்சியும்<div>
பகுதி 1</div>
<div>
***********</div>
<div>
கனவுகள்... இதைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைத் தங்களுக்குத் தோன்றியவிதத்தில் கூறியிருக்கின்றனர். ஆனால்.அதற்கென்று ஒரு விதி, வரைமுறை, வரையறை போன்றவை அறவே இல்லை. வரலாற்றில் பார்த்தோமானால், பாபிலோனியர்கள் தெய்வத்திடமிருந்து வரும் செய்திகளே கனவுகள் என்றனர். எகிப்தியர்கள் கடவுளின் செய்தியாகக் கருதினர். ஆசியர்கள் எதிர்காலத்தை எடுத்துரைக்கும் வழி என்றார்கள். கிரேக்கர்கள் நோய் போன்ற வற்றுக்குத் தீர்வு தரும் ஆய்வு எனப் பார்த்தார்கள். ஜப்பானியர்களோ தெய்வத்தின் ஆசிகள் என்றே கூறினர்.</div>
<div>
<br /></div>
<div>
கனவுகளைப் பற்றிய கருத்துக்கள் இவை என்றால் கனவுகள் எப்போது ஏற்படுகின்றன என்பது பற்றியும் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. தூங்கியபின் 30 முதல் 90 நிமிடங்களுக்குப் பிறகே கனவுகள் வரும் என்றும் அப்போதுஅட்ரீனலின் ஹார்மோன் அளவு அதிகமாகும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.</div>
<div>
<br /></div>
<div>
சிக்மெண்ட்ஃபிராய்டு எழுதிய இண்டெர்ப்ரெஷன் ஆஃப் டிரீம்ஸ் (interpretation of dreams) ஆல்பிரட் ஆட்லர் மற்றும் கார்ல் ஜங்க் எழுதிய நூல்களும், கனவுகள் எவ்வளவு தூரம் மனிதனுடன் ஒன்றியிருக்கின்றன என்பதற்கான அடையாளங்கள்.</div>
<div>
<br /></div>
<div>
1321ல் காலமான பிரபல எழுத்தாளர் தாந்தோ என்பவர், “டிவைன் காமெடி” என்ற நூலை எழுதி விட்டு இறந்து போனார். அவர் மகன் ஜாகபோ வறுமையால் வாடியபோது, மகனின் கனவில் தோன்றி அந்த நூல் உள்ள இடத்தைக் கூறி, இன்னாரிடம் கொடுத்து பணம் பெற்று வாழ் என்று கூறியதாகவும் அதன் பின் “ஜாகபோ” நினைத்துப் பார்க்க இயலாத அளவு உயர்ந்ததாகவும் உண்மைக்கதை இருக்கிறது</div>
<div>
<br /></div>
<div>
கம்பர் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கூர்மையான ஆயுதத்தால் நிலத்தைப் பண்படுத்திக் கொண்டிருக்கும் உழவனைப் பார்த்தார். வரும் வழியெல்லாம் இதென்ன கருவி என்று குழம்பிப் போய் வீடு வந்தாராம். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் அம்பிகாபதி எழுந்து, அந்தக் கருவியின் பெயர் கோடாரி’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினார். என்றும் செய்தி உண்டு</div>
<div>
<br /></div>
<div>
நமது இந்தியாவில் அமானுஷ்யம் கலந்து பல கனவுக்கதைகள் உலவினாலும், கனவுகளின் பலன்கள் பற்றி அறிவிப்பதும் தெரிவிப்பதும் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்படுகிறது. ஆலயம், அரண்மனை,கிளி, வாழை இலை, பிறரை அலங்கரித்தல், நிலவு, விவசாயி உழுதல், வானவில், சிறு குழந்தை, பாம்பு கடித்து ரத்தம் வருவது போன்றவை நல்ல கனவுகள், உடனடியாக நமக்கு நன்மை வருகிறது என்று அறிவிக்கக் கூடிய கனவுகள், பூனை, தேனி, எறும்பு, எலி, குடி, பசு விரட்டுதல், புயல், குதிரை விழுதல் போன்றவை தீக்கனவுகள் என்றும் கூறப்படுகிறது.</div>
<div>
<br /></div>
<div>
பொதுவாக, மாலை 6 முதல் இரவு 8 மணி வரை கனவு வந்தால் ஒரு வருடத்திலும் இரவு 8 முதல் 10 மணி வரை வந்தால் மூன்று மாதத்திலும், 10 முதல் 1 மணிக்குள் காணும் கனவுகள் ஒரு மாதத்திலும், 1 முதல் 3 என்றால் பத்து தினங்களிலும், 3 முதல் 6 மணிக்குள் கண்ட கனவுகள் உடனேயும் பலிதமாகும் என்கிறார்கள். அதே சமயம், பகலிலே கனவு வந்தால் பலிக்கவே பலிக்காது என்று சத்தியம் செய்கிறார்கள்</div>
<div>
<br /></div>
<div>
காசி நகர் புலவர் பேசும் உரையை காங்சியில் கேட்க வேண்டும் என்று பாரதி கூறியது ஒரு அழகிய எதிர்காலக்கனவு . அது பலித்து விட்டது. பேசுவது மட்டுமல்ல. பார்க்கவே ஆரம்பித்து விட்டோம். பட்டனைத் தட்டி விட்டா தட்டுல இட்லியும் பக்கத்துல காப்பியும் வந்துடணும் என்ற கலைவாணரின் கனவும் வெகு சீக்கிரம் பலிக்கக் கூடிய ஒன்றாகவே தெரிகிறது. பட்டனைத் தட்டினால், இப்போது காபி வருவதைப் பார்க்கிறோம். அடுத்து இட்லியும் வரக்கூடும்</div>
<div>
<br /></div>
<div>
அணுவைத்துளைத்து எழுகடலைப் புகட்டி....என்ற ஔவையின் கனவு பிரமிப்பூட்டக்கூடியது. அணுவைத் கண்டே பிடித்திராத நாளில், அதை துளைக்க நினைத்தது மட்டுமல்ல, அதற்குள் எழு கடலை நிரப்பப் பார்த்தாளே...அது ராட்சஸக் கனவு. அந்த அணுவை நூறு துண்டுகளாக்கி, அந்தப் பரமாணுவுக்கு “கோண்” என்று நாமகரணம் செய்வித்தானே கம்பன், அவனையும் இங்கே நினைவு கூற வேண்டியிருக்கிறது. வாழும் முறையைப் பற்றி பல்வேறு அதிகாரங்களை அடுக்கிய வள்ளுவனையும் கனவு விட்டு விடவில்லை. தன் பங்குக்கு அவனும் கனவு நிலையுரைத்தல் என்றொரு அதிகாரத்தை வழங்கியிருக்கிறான். பென்சீனின் வடிவம் கூட கனவில் உணரப்பட்டது தான் என்பதையும் அறிவியல் வழியாகவே அறிகிறோம்</div>
<div>
<br /></div>
<div>
கனவு சார்ந்தே ஜோதிடவியல், உளவியல்,அறிவியல், புவியியல், வானவியல்,குவாண்டம் இயற்பியல், ...என்ற பல இயல்கள். தூங்கும் போது வருவதல்ல கனவு: நம்மைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு என்றார். மேதகு ஏ.பி.ஜே.அப்துல்கலாம். </div>
<div>
<br /></div>
<div>
சரி கனவுகள் எப்படி வரும்?வண்ணமயமாக வருமா?கருப்புவெள்ளையா? என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது. ஆனால் கனவுகள் வாழ்வை வண்ணமயமாக்கும் என்பது மட்டும் உண்மை. கனவுகள், அவரவர்களுக்கான நன்மை அல்லது தீமையான விளைவுகளைப் பற்றித் தான் முன்னறிப்பு செய்கின்றன என்பது தான் பொதுவான நம்பிக்கை. ஆனால் இன்னொருவருக்கான பலனை அறிவிக்கும் கனவை, நாம் காண்பது என்பது சாத்தியமாகுமா? நாமறிந்தவரை இல்லை.</div>
<div>
<br /></div>
<div>
ஆனால் ஒருவர் காணும் கனவு அவருக்குத் தீய செய்திகளைத் தான் உணர்த்துகிறது. ஆனால் அந்த எதிர்மறைக்கனவு, இன்னொருவருக்கு நேர்மறைக்கனவு ஆகிவிடுகிறது. அது எப்படி சாத்தியம்? அதை அடுத்த இதழில்....(காண்போம்) </div>
</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-29393358910838527152015-10-10T02:56:00.001-07:002015-10-10T03:05:35.254-07:00சான்றோன் எனக் கேட்டதாய்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்று சின்னவள் பள்ளியில் பெற்றோர் சங்கக் கூட்டம். ( வேறென்ன? நம் குழந்தைகளின் படிப்பைப் பற்றி நமக்கே சொல்வார்கள்) புதுகையில் அவள் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் எல்லோருமே என் தோழிகளாக தோழர்களாக இருந்ததால் எப்போதும் சின்னவளுக்கு கவனிப்பு அதிகம். யாரையும் தன் அன்பால், நேசத்தால், மனிதநேயத்தால் ஈர்த்து விடும் பாங்கை தனக்குள் இருக்கும் காந்த சக்தியாய்க்கொண்டவள் என்பதால் இது வரை எனக்கு முறையீடு (கம்ப்பிளைண்ட்) வந்ததில்லை. பகைவர்களையும் நேசிக்க வைக்கும் பாங்கு ஒரு சிலருக்கே அமையப் பெறும். அது அவளுக்குள் இயல்பாய்.....<br />
<br />
சில சமயம் நம்மையும் மிரள வைப்பாள். கோபத்தைக் கோபமாக க்காட்டி பழக்கப் பட்ட எனக்கு கோபத்தையும் அன்பாகவே பிரதிபலிக்க முடியும் என்று எனக்குக் கற்றுத்தந்தவள் அவள் தான்.<br />
<br />
சரிதான். உள்ளூரில் என் நிழலும் அவளுடன் கூடவே வரும்.ஆனால் இந்தச் சென்னையில் என்ன செய்வாள்? அதிகம் யாருடனும் பேசுவதுமில்லை. என்று அவள் மீது எப்போதும் ஒரு குறை இருக்கும். பேசினால் தான் நம் திறமை வெளிப்படும் என்றில்லை. எங்கே பேச வேண்டுமோ அங்கே பேசுவேன் என்பாள் அப்போதும் அமைதியாக.<br />
<br />
இன்று காலை 8 முதல் 12 மணி வரை மட்டுமே பெற்றோர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தோம். எனவே நான் ஒரு 9 மணிக்குப் போய் முதலிலும் அல்லாமல் கடைசியிலும் அல்லாமல் எலோரையும் பார்த்து வருவது என்று திட்டமிட்டிருந்தேன். ( அவளும் புதுகையின் பதிவர் திருவிழாவிற்குப் போய் விட்டதால் எனக்கு எல்லா ஆசிரியர்களையும் பார்த்து விட வேண்டுமே என்ற அச்சமும் தவிப்பும் கவலையும் கூடிக் கொண்டே போனது . இது முதல் கூட்டம் வேறு<br />
<br />
முதலில் அவளுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்த்து விட்டு பின் அடுத்த ஆசிரியர்களைப் பார்க்கலாம் என்று நினைத்துச் சென்றேன்.<br />
முதலில் தயக்கத்தோடு பெருத்த கூட்டத்தில் ஒரு நீண்ட வரிசையில் நின்றேன்.<br />
<br />
உங்கள் பிள்ளை இதில் கவனமில்லை அதில் நன்றாகச் செய்யவில்லை என்று ஆசிரியர்களும் என்பிள்ளை எப்போதும் டி.வி தான் பார்க்கிறான் என்று பெற்றோர்களும் சொல்லிக் கொண்டே இருந்தனர்.மறைமுகமாக ஆசிரியர்கள் பெற்றோர்கள்தான் பிள்ளைகள் படிக்காமைக்குக் காரணம் என்றும் ,பெற்றோர்களோ ஆசிரியர்கள் தான் அவர்களைப் படிக்க வைக்க வேண்டுமென்றும் மறைமுகத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.<br />
<br />
நானும் தலைமை ஆசிரியர் என்பதால் பெற்றோர்களின் உளப்பாங்கை எண்ணி வியந்தவாறே நின்றேன். நான் எப்போதும் என் மகள்களைப் பற்றிக் குறைகளை கூறுவதில்லை. ஏனெனில் என் வளர்ப்பு முறையில் தான் குறை இருக்குமே தவிர அவர்களின் அணுகுமுறையில் அல்ல என்பதை நான் உணர்ந்தேன் என்பதை விட அவளைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை அதனால் நான் அதைச் சொல்லவும்வாய்ப்பு இல்லை. அநாவசியமாக போன்செய்ய மாட்டாள். பின் நான் எதைத்தான் சொல்ல முடியும்?<br />
<br />
ஆனால் எந்நேரமும் புத்தக வாசிப்பு அவளிடம் அதிகம் உண்டு.. தேர்வுக்குத் தயார் ஆகும் போதும் கூட பொதுப் புத்தகங்களை அவள் வாசிப்பதை விட வில்லை. நல்ல மதிப்பெண்கள்பெறுவதால் நானும் எதிலும் கட்டாயப்படுத்துவதில்லை.<br />
<br />
எரியும் பனிக்காடு, அகம் புறம் அந்தப்புரம், காவல் கோட்டம்,சிறிதுவெளிச்சம், தேசாந்திரி, இந்திய வரலாறு, ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, முகில், பா.ராகவன், பூமணி, ராஜுமுருகன், மதன்,மாரிசெல்வராஜ் , என்று பனிரெண்டு வயதில் அவள் வாசிப்பின் ஆழ அகலங்கள் என்னை பெரிதும் கவர்ந்ததும், நேசித்ததும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.<br />
<br />
எதையும் தீர்க்கமாய் சிந்திப்பதும், அழுத்தமாய் வெளியிடுவதும் அவள் பாங்கு என்பதை அவளிடம் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் பேசினால் புரியும். ( இந்தக் கோபக்காரிக்குஇப்படி ஒரு குணசுந்தரியா? என்று நானே பல சமயங்களில் வியந்திருக்கிறேன்)<br />
<br />
சரி விஷயத்திற்கு வருகிறேன். இன்று பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மூன்றாவது மாடியின் நான்காவது அறையிலும், வேதியியல் ஆசிரியர் வேறு ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலும், உயிரியல் ஆசிரியர் வேறு கட்டத்தின் ஐந்தாவது மாடியில் நான்காவது அறையிலும், கணித ஆசிரியர் மூன்றாவது தளத்திலும் ஆங்கில ஆசிரியர் தரை தளத்திலும், தமிழ் ஆசிரியர் ஆசிரியரின் அறையிலுமாக அமர்ந்து அவர்கள் கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள். மன்னிக்க.பெற்றோர்களுடன் வாத விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர்.( நல்ல வேளை அவள் பள்ளியில் ஐந்தாவது மாடியோடு நிப்பாட்டிக் கொண்டார்கள்...இல்லையேல் என் பாடு...?)<br />
<br />
அவள் வகுப்பாசிரியரும் உயிரியல் ஆசிரியருமான தனலட்சுமியை போன மாதம் வந்த போது என் தோழியாக்கிக் கொண்டிருந்தேன். எனவே என்னைப் பார்த்ததும் ஒரு மென் புன்னகையும், அழகிய சிறு தலையாட்டுதலையும் தந்து என்னை சைகையால் அமரச் சொன்னார். பயந்து போய் அமர்ந்தேன். இரண்டொருவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, என்னை அழைத்தார்.<br />
<br />
எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமாங்க ராகசூர்யா, அவளாக சமைத்து, அவளாக கிளம்பி, அவளாக பாடங்களைத் தயாரிக்கிறாள். அவளிடம் தான் ஒரு பேச்சாளர் என்ற கர்வம் இல்லை. ( அய்யோ அவள் பேச்சாளரா????!!!!)<br />
இப்படி ஒரு அமைதியான பிள்ளையை நான் பார்க்கவில்லை. நிறைய புத்தகங்கள் வாசிக்கிறாள். அநேகமாக இந்தப் பள்ளியில் உள்ள நூலகத்தை அவள்தான் திறந்து கண்ணுற்று தூசி தட்டிப் படிக்கிறாள். எல்லோருடனும் நட்பாகவும் அன்பாகவும் இருக்கிறாள். நான் அவளுடன் தான் சேர்ந்து சாப்பிடுவேன். அவள் வைத்த குழம்பு, கூட்டு என்று எனக்கும் கொடுப்பாள்.( மறுபடியும் ஒரு அய்யோ! உங்களுக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லை.நீங்கள் இன்சூரன்ஸ் போட்டுருக்கீங்களா??) என்று ஏதேதோ சொன்னார். கடைசியாய் ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க. இப்படி லட்சத்தில் ஒருத்தி தான் இருப்பாள். அந்த ஒருத்தியும் உங்கள் மகளாய் இருக்கிறாள். எனக்கும் அவள் மகள் தான் என்றார். கேட்டுக் கொண்டிருந்த 2 அம்மாக்கள் கேட்டாயா? அவங்க பிள்ளைய பெத்தாங்க. நான் பெரண்டையப் பெத்தேன் என்றது சிறியதாய் என் காதுகளில் கேட்டது.<br />
அங்கிருந்து மகிழ்ந்த வண்ணம் கணித ஆசிரியரைப் பார்க்கப் போனேன். ராகசூர்யா அம்மா அவள் புதுகை சென்றுள்ளாள் என்று சொல்ல ஆரம்பித்ததும் அவரே சொன்னார். பதிவர் திருவிழாக்குப் போயிருக்கிறாள். நாளை விமானத்தில் வந்துவிடுவாள். அப்படித்தானே அன்றாள். இவரும் சற்று புகழ்ந்தார்.<br />
இயற்பியல் ஆசிரியர் என்கைகளைப் பிடித்துக் கொண்டார். அம்மா வாங்க. நல்லா இருக்கீங்களா? அவள் நேற்று பதிவர் திருவிழாக்கு புதுகை போய் விட்டாளா? என்று கேட்டுக் கொண்டே சில வருடங்களில் இது போன்ற மாணவிகளை நாங்கள் சந்திப்போம். அப்படி இந்த வருடம் நான் ராகசூர்யாவை சந்தித்திருக்கிறேன். என்றார்.<br />
இதற்குள் பள்ளியின் முதல்வர் அம்மா ராகசூர்யா அம்மா போகும் போது என்னை சந்தித்து விட்டுச் செல்லுங்கள் என்றார். இப்போது எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.<br />
ஒரு வழியாக அந்த மாடி, இந்த மாடி என்று ஓடி, ஓடோடி, முதல்வர் அறைக்குவந்தேன். உட்காருங்கள் என்றவர்.என்னை நட்போடுதான் பார்த்தது போல் இருந்தது. அதனால் கொஞ்சம் ஆசுவாசப் பட்டேன். நீங்கள்பெரிய பேச்சாளராமே, கல்கியில் தொடர் எழுதுகிறீர்களாமே? கலைஞர் டீவியில் கவிதைத் தொடர் வாசிக்கிறீங்களாமே. எங்கள் பள்ளிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுக்க வேண்டும். உங்கள் மகள் என் நல்ல மாணவி என்று கை பிடித்துக்குலுக்கினார். ஒரு வழியாக ஒரு மாபெரும் இறுக்கத்திலிருந்து தப்பித்தது போல் இருந்தது. அவள் மதிப்பெண்கள் வெறும் 1000 தான் எடுத்திருக்கிறாள். அதனால் விடிய விடிய எல்லோரும் என்னைத் திட்டப்போகிறார்கள். என்றுநினைத்து நினைத்து பயந்தேன். ஆனால் ஏனோ ஒருவர் கூட அவளுடைய மதிப்பெண் பற்றிச் சொல்லவும் இல்லை கேட்கவும் இல்லை. எல்லாவற்றிலும் என் கையெழுத்து மட்டும் பெற்றுக் கொண்டார்கள்.<br />
<br />
எங்கள் ஊர்க் கவிஞர் ஒருவர் முதல் மதிப்பெண் வாங்க வேண்டாம் மகளே என்று சொல்வார். அதனை புத்தகமாகவும் போட்டுள்ளார். ஆனால் என்னால் அப்படி சொல்ல இயலாது.ஏனெனில் இந்த சமூகமும், அரசும் வெறுத்து ஒதுக்கும் , புறக்கணிக்கும்,ஓ.சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது அவளுடைய சான்றிதழில் இருப்பதால் உள்ள பயம் தான் அதற்குக் காரணம். சமூகத்தில் அங்கீகாரம் என்பது மதிப்பெண்கள் தான் என்ற என் எண்ணத்தை தவிடு பொடி ஆக்கிவிட்டாள்.<br />
<br />
நானாக மெதுவாக அவள் ஆயிரம் தான் மதிப்பெண்கள் பெற்றுள்ளாள் என்பதைத் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.ஒருவேளை அவர்கள் மறந்து போய் விட்டார்களோ என்று நான் நினைத்தேன்.<br />
<br />
அவள் பெரும் முயற்சிக்காரி. நல்ல பெண். அடுத்த முறை பாருங்கள் அவள் 1100 எடுப்பாள் என்றார் அவளின் வகுப்பு ஆசிரியர். எனக்கு முந்திக்கொண்டு. எனக்கே வெட்கமாய் போய் விட்டது. அவர்களெல்லாம் வைத்த நம்பிக்கையை நான் வைக்க வில்லையோ என்று.<br />
<br />
மேல் வகுப்பிற்கெல்லாம் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளார்கள். எல்லோருமே நன்றாகப் பேசினார்கள். இந்த மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தந்ததற்காக நான் தான் அவளுக்குக் கடன் பட்டது போல் தோன்றுகிறது.<br />
இருந்தாலும் இனி அதிகாலையில் எழுந்து படிக்க வைக்க வேண்டும். இரவும் சற்று நேரத்தைக் கூட்டி படிக்க வைக்க வேண்டும்.<br />
அவளுக்காக நீங்களும் பிரார்த்தியுங்களேன்.<br />
<br />
( அவளைப் பற்றி எழுதித் தான் அவள் அப்பா முதல் பரிசு பெற்றிருக்கிறார்)<br />
<br />
( இரண்டு விஷயம் நான் ராகசூர்யாவிடம் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் உன்னை நல்ல பிள்ளைனு சொல்றாங்களே, எல்லோருக்கும் என்ன கொடுத்தாய்???இரண்டு அடுத்த முறை உன் ஆசிரியர் விருப்பப்பட்ட படி 1100 வாங்கி விடுவாயா??)</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-19762271498949713712015-10-02T03:13:00.000-07:002015-10-02T03:13:17.854-07:00மூட நம்பிக்கைகளும், பெண்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="background-color: #f4cccc; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;">போராடுங்கள் வெற்றி பெறுங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்</span><br style="background-color: #cbbcee; clear: left; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;" /><br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" /><br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" /><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"> “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது</span><br style="background-color: #cbbcee; clear: left; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;" /><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"><br style="clear: left;" /></span><span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"></span><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;">வகை 3</span><br />
<br />
கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தங்கள் கணவர்களின் பெயர்களைச் சொல்வதில்லை. ஏனெனில் அவர்கள் கணவன் பெயர் சொல்லும் போது அவர்களின் ஆயுள் குறையும் என்று நம்புகிறார்கள். ( திரைப்படங்களில் தான் அடா, புடா, என்று கூப்பிடுவதும், வா, போ வென விளிப்பதும் சாத்தியம்) சில இல்லங்களில் வேண்டுமானால் அது சாதாரண்மான விஷயமாக இருக்கலாமே தவிர பெரும் பான்மை என்று கணக்குப் பார்க்கும் பொது கணவன் பெயர் சொல்வது மட்டுமில்லை, வாங்க, போங்க, என்று பன்னையில் தான் அழைக்க வேண்டும். இதெல்லாம் எழுதப்படாத விதி. ஆனால அந்தக் கணவர்கள் தங்கள் மனைவிகளை ஆயிரம் முறை பெயர் சொல்லலாம்.அடி வாடி என்று கூப்பிடலாம் . இவள் ஆயுள் தான் குறைந்தால் தான் என்ன?<br />
<br />
ஒரு பெண் இன்னும் எங்கள் ஊரில் உப்பு என்று சொல்வதற்குப் பதில் வெள்ளை மணல் என்பாள். அவள் கணவன் பெயர் இத்தனைக்கும் சுப்பு, உப்புக்கும் சுப்புக்கும் என்ன சம்மந்தம்? ஆனால் அவள் அப்படித்தான்<br />
<br />
மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொது அவர்கள் பெயர்கள் சொல்ல பல விஷயங்களைச் சொல்வார்கள். இதனால் ஒரே வீட்டில் எங்கள் நேரங்கள் வீணான கதையும் நடந்தது.<br />
<br />
இவர்களில் தான் திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காவிட்டாலும், அல்லது ஆண் குழந்தைகள் பிறக்காவிட்டாலும் மறுமணம் செய்து வைக்கும் தாழ்ந்த நிலையும் ஏற்பட்டது. ஆண் குழந்தைகள் பிறந்தால் தான் வாரிசு என்று போற்றுவது எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த ஆண்மகன், அம்மா, அப்பாவை கவனிக்க மாட்டான், அல்லது அவர்களிடம் பணம் பெறுபவனாக, தானே உழைக்காதவன்னாக இப்படி பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் ஏன் ஆண்கள் தான் வாரிசு என்று கொண்டாட வேண்டும் என்று தான் தெரியவில்லை.<br />
<br />
அதே போல் ஒரு தந்தை அல்லது தாய் இறந்து போனால் அந்த வீட்டில் ஆண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் கொள்ளி வைப்பார்கள். அல்லது அந்த தாய் அல்லது தந்தையின் ஆண் வழியாக வந்த உரவினர்களில் வந்த ஆண்மகன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்பதும் சொல்லப்படாத எழுதப்படாத விதி. பெண் பிள்ளைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் கொள்ளிக்கு ஒரு பிள்ளை இல்லையா என்றே இன்றும் கேட்பார்கள்.<br />
ஆண்கள் கொள்ளி வைத்தால் தான் தாங்கள் ஜென்ம பலன் கிடைக்கும் என்றும் பெண்கள் கொள்ளி வைக்க வந்தால் வைகுந்தம் போகும் வழி தெரியாது என்றும் சொல்கிறார்கள்.<br />
<br />
மூல நட்சத்திரத்தில் பெண்பிரந்தால் அந்த பெண்ணை மணம் முடிக்க மாப்பிள்ளையின் பெற்றோர்கள் . ஏனெனில் மூலத்தின் மாமியார் பாடையில் என்பதால் மாமியார் அதாவது மாப்பிள்ளையின் அம்மா இல்லாத வீட்டிலிருந்து தான் பெண் கேட்டு வருவார்கள் இதுவும் ஏன் எனத் தெரியாமலெயே பின்பற்றப்பட்டு வருகிறது.<br />
<br />
கல்யாணப் பேச்சு முடிந்து ஒரு பெண்ணை நிச்சயம் செய்த பிரகு அந்த மாப்பிள்ளைக்கு ஏதாவது விபத்து அல்லது தொழிலில் நஷ்டம் ஏதும் ஏற்பட்டாலும் உடனே திருமணத்தை தடை செய்து விட்டு மூதேவி வரப்போறானு நிச்சயம் பண்ணியவுடன் இது போல ஆகுது என்று பேசுவார்கள்.இதே பெண்ணுக்கு ஆனாலும் அப்போதும் பெண் தான் அந்த வலியான பேச்சுக்களையும் தாங்க வேண்டும் அப்போதும் இவளுக்கு திருமண தோஷம் இருக்கு போல அதனால தான் திருமணத்திற்கு இவ்வளோ தடை வருது திருமணத்தை நிப்பாட்டு என்று சொல்லி தடைபட்ட திருமணங்களும் நிறைய .நிறைய.<br />
<br />
கணவனை இழந்த பெண்கள் விதவை என்று அழைக்கப்பட்டதோடு அவர்களுக்கான உணவு மறுக்கப்பட்டது. ஒரு நேரம் தான் சாப்பிட வேண்டும். மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளை ஆடை உடுத்த வேண்டும். அல்லாது உடன்கட்டை ஏற வேண்டும். இதெல்லாம் நம் முன்னோர் பெண்கள் அனுபவித்து வந்தார்கள். இப்போது அப்படி இல்லை என்று வாதிடலாம். ஆனால் விவாகரத்து ஆன பெண்கள் எந்த சுப காரியங்களுக்கும் அழைக்கப் படுவதில்லை. ஒரு சில இடங்களில் இன்னும் இது போன்ர சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன<br />
<br />
ஜாதகன் ஜோதிடம் என்று அன்றைய நாளில் தான் அப்படி சங்கடப்பட்டாள். இப்போது அப்படியில்லை. ஆனால் அதற்கும் அதிகமான வேறு வேறு சமூகக் காரணங்கள் அவளை பின்னுக்கு இழுத்த வண்ணமாய் இருக்கிறது. எது எப்படி நடந்தாலும் பெண் தனக்கான பாதையை தானெ தேர்ந்து எடுத்துக் கொள்கிராள். இயற்கையாகவே வலி தாங்கும் ஆற்றல் அவள் உடம்பில் மட்டும் அல்ல. அவள் மனதிலும் இருப்பதால் தான் இன்றும் அவள் வழி உயர்வாள். வழி நடத்துவாள்.</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-18161127389393515232015-10-01T10:35:00.002-07:002015-10-01T10:35:45.826-07:00போராடுங்கள் வெற்றி பெறுங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="background-color: #f4cccc; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;">போராடுங்கள் வெற்றி பெறுங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்</span><br style="background-color: #cbbcee; clear: left; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;" /><br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" /><br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" /><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"> “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது</span><br style="background-color: #cbbcee; clear: left; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;" /><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"><br style="clear: left;" /></span><span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"></span><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;">வகை 3</span><br />
<br />
<br />
<br />
<br />
பெண்கல்வி பெரும் கேள்விக்குறியதாகவும் கேலிக்குறியதாகவும் உள்ளது என்று சொன்னால், இந்த நூற்றாண்டிலா? அல்லது சென்ற நூற்றாண்டிலா? என்று கேள்வி கேட்பார்கள். ஆனால் மிகவும் மறைமுகமாக அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.<br />
<br />
நான் வேலைக்குவந்த புதிதில் பல பெண் குழந்தைகள் திடீரென்று பள்ளியை விட்டு நின்று விடுவார்கள். ஏன் என்று கேட்டால் பல காரணங்கள் பெண் பிள்ளையை படிக்க வைக்க விரும்பவில்லை. அல்லது அடுத்து பிறந்த பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று காரணங்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆதவனை அடைக்க முடியாது என்பார்களே அது போல் தான் பெண் கல்வியும் இன்றைய கால கட்டங்களில் மாறியிருக்கிறது என்றாலும் அது முறைப் படுத்தப்பட்டுள்ளதா? அதில் ஒரு தெளிவு இருக்கிரதா? அது உண்மையானதாக இருக்கிரதா என்ற கேள்விகள் எழுந்தால் ஒரு குழப்பமான பதில்களைத்தான் சொல்ல முடியும்.<br />
<br />
பெண் படிக்கச் சென்றால், முதலில் தொடரும் பாலியல் தொல்லைகள். பேருந்தில், அலுவலகத்தில், சமூகக் கூடங்களில் என்று தொடர்ந்தவை பள்ளியில் படிக்கும் போது சொல்லிக் கொடுக்குமாசிரியர்களாலேயே நிகழ்ந்திருக்கிறது என்பது நாம் வெட்கித் தலை கவிழ்ந்து ஒத்துக் கொள்ளக்கூடிய நிகழ்வாகவே இருக்கிறது.<br />
<br />
பேருந்தில் தன் நண்பனுடன் சென்ற பெண் மானபங்கப்படுத்தும் போதும் அவள் அதன் பாதிப்பில் இறந்த போதும் அவள் ஆடை சரியில்லை, அவள் ஏன் அந்த நேரத்தில் தன் ஆண் நண்பருடன் சென்றாள் என்று பல கேள்விகள் கேட்டார்களேயன்றி அத்தகைய சிக்கலில் உள்ளாக்கியவனின் மன வக்கிரங்களை இந்த அளவுக்கு யாரும் அலசவில்லை.<br />
<br />
காதலிக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆசிட் வீசுவோம். எங்களுக்குக் கிடைக்காத இந்த உடம்பு இனி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று இன்ன்னமும் உடல் ரீதியாக பெண்னைப்பார்க்கும் இழி நிலை தான் தொடர்ந்து கொண்டே இருக்கிறது<br />
<br />
இந்த மனப்பாங்கு திரைப்படங்களால் பல நிலைகளில் இவர்களுக்கு ஊட்டப்படுகிரது. ஒரு சாதாரண மான ஏழ்மை நிலையில் உள்ளவன் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிப்பான்( காதலிக்க வேண்டும்) அல்லது ஒரு படிக்காத முட்டாள் , படித்தவளைக் காதலிப்பான். அவளும் காதலித்தாக வேண்டும். அதற்கு முன் அவளை இடித்துக் கொண்டு பாடுவது, ஆடுவது, என்று பற்பல உடல் ரீதியான தொந்தரவுகள் தருவான். ( இதைத் தான் ஈவ் டீஸ் என்று சொல்கிறோம்) அதைக் கதாநாயகர்கள் செய்தால் சரி. அப்படியானால் நாட்டில் எல்லோரும் கதாநாயகர்கள் தானே அதனால் எல்லோருக்கும் பெண்களுக்கு எதிரான் வீர தீர செயலகள் எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றி விடுகிறது<br />
<br />
ஒரு வேளை அவள் மறுத்தால், அவள் அப்படிப்பட்டவள், இப்படிப்பட்டவள்..இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் தெரிஞ்சு போச்சுடானு எத்தனை பாடல்கள்? ஆனால் ஆண்கள் இவ்வளவு கொடுமைகள் செய்தும் அதை தன் பாட்டில் வடிக்க எந்தத் திராணியும் இல்லை. ஏனெனில் அவளுக்கு அப்படி ஒரு வாய்பு கொடுக்கப் படுவதே இல்லை. அப்பாடி அவள் எழுதினால் பேசினால் கட்டாயம் ஆண்கள் சூழ் உலகால் புறக்கணிக்கப் படுவாள். அவள் நடத்தை பற்றி தாறு மாறாகப் பேசுவார்கள்<br />
<br />
இதையெல்லாம் பார்த்து பெண் தன்க்குள்ளேயே சரி தான் இது படித்தால் போதும். நமக்க்கு இன்ன இன்ன நடந்தால் போதும் என்று விட்டுக் கொடுக்கிறாள், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.<br />
இன்று இவ்வளவு வலிந்த சமூகம் தகவல் தொடர்பு எல்லைகள் விரிந்து பரந்து மேம்பட்ட போதும் அவள் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் ஏதாவது சிக்கல்கள் வந்து ஆக்கிரமிக்கத் தான் செய்கிரது. சிக்கல்கள் வருவதற்கு 5 வயது, 15 வயது 54 வயது என்று வயது வரம்பெல்லாம் கிடையவே மிடையாது. ஒன்று உடலால் துன்புறுத்தப் படுகிராள் அல்லது வார்த்தைகளால் துன்புறுத்தப்படுகிராள்.<br />
<br />
நாம் வேண்டுவதெல்லாம் எல்லாவற்றையும் மீறி, எழுந்து எழுந்து வர வேண்டும் என்பதே அன்றைய கால கட்டத்தில் நக்கண்ணை, ஆண்டாள், என்று எல்லோருக்கும் பிரச்சனைகள் இருக்கத் தான் இருந்தது. அதனை மிறி வடிவம் கொண்டாஅர்கள். வளர்ந்து நின்றார்கள்<br />
எனவே பெண்கள் தன் திறன் என்ன என்று அறிந்து கொண்டு அதனை வளர்த்துக் கொள்ள போராடியே ஆகவேண்டும் நிச்சயம் அந்தப் போராட்டத்தில் நீங்கள் இன்று தோற்றாலும் நாளை யாரேனும் ஒரு பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்து வெற்றி பெற வைப்பீர்கள் எனவே போராடுங்கள், வெற்றி பெறுங்கள் </div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-32742171425980822982015-10-01T08:55:00.000-07:002015-10-01T10:50:20.332-07:00பெண்களைப் புரிந்து கொள்வோம் வாரீர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: #f4cccc; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;">பெண்களைப் புரிந்து கொள்வோம் வாரீர் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்</span><br />
<br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" />
<br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" />
<span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"> “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது</span><br />
<span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"><br style="clear: left;" /></span><span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"></span><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;">வகை 3</span><br />
<br />
<br />
குழந்தை, பிறப்பு, கிராமம், அன்பு, ஆசிர்வாதம், பண்பு, மரியாதை, திருமணம், பாராம்பரியம், கலாச்சாரம், இப்படி பல சொற்களால் நிரம்பியதுதான் நம் வாழ்க்கை. ஆனால் இவை அனைத்தும் வெறும் சொற்கள் தானா?<br />
<br />
வாழ்வில் நல்லவைகளும் அல்லவைகளும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன். நல்லவைகளில் கொண்டாடுவதும் அல்லவைகளில் திண்டாடுவதும் நம் வாழ்க்கையின் நிகழ்வுகளாகப் போனது<br />
<br />
சற்று கூர்ந்து நோக்கினோம் என்றால் நாம் எவற்றை இழந்தோம்? எவற்றை எல்லாம் பெற்றோம் என்பதெல்லாம் தெரியும்<br />
<br />
இப்போது எல்லாப் பெண்களும் கட்டாயம் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குழந்தை, வீடு, வாகனம்,வசதி, சமுதாய அந்தஸ்து, என்று இன்ன பிற காரண்ங்களுக்காக மட்டுமே தான் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் இல்லை என்று சொல்லிவிட முடியுமா?<br />
<br />
பெண்கள் கல்வி கற்று முன்னேறி தங்களை உயர்த்தி தங்கள் நாட்டை உயர்த்தி மேன்மைப் படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக ஆண்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை.( ஆண்களில் சிலர்)<br />
<br />
அதே சமயம் பெண்கள் வேலைக்குப் போனாலும் அவள் கோயிலுக்குப் போனாஅலும் வேறு வகைக் கூட்டங்களுக்குப் போனாலும் எங்கே சென்றாலும் அவள் தன்னோடு தன் குடும்பத்தையும் எடுத்துச் செல்கிறாள். அவள் தான் தன் குழந்தைகள் சாப்பிட்டார்களா? வீடு சுத்தம் செய்ய வேண்டுமா என்பதோடு தற்போது நவநாகரிக காலங்களிலும் பல வீடுகளில் பாத்ரூம் கழுவமும் அவளே தான் மெனக்கெட வேண்டி இருக்கிறது.<br />
எந்த வேலையையும் நான் சத்தியமாய் குரை சொல்ல வில்லை ஆனால் அந்த வேலையை எந்த ஆண் செய்கிறான். 100 க்கு 10 ஆண்கள் என்பது கூட மிகை தான் என்கிறது ஒரு பெண்ணின் ஆய்வு.<br />
<br />
திருமணம் ஆன புதிதில் பலவாறாக கவனிக்கப் படும் அந்தப் பெண் இரண்டு குழந்தைகள் பிறந்த உடன் கணவனால் முதலில் புறக்கணிக்கப் படுகிறாள். தன் குடும்பத்தாரால் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் உள்ளிட்ட அனைவராலும் தள்ளி வைக்கப் பட்டு விடுகிறாள். இந்த கால கட்டங்களில் தான் பெண்ணுக்கு பல்வேறு சுமைகள் ஏற்படுகின்றன, மன ரீதியாக உடல் ரீதியாக பல மாற்றங்களுக்குள் உள்ளாகும் பெண் தன்னால் என்ன ஆகும்? தான் எதற்குத் தான் பிறந்தோம் என்று நினைத்து நினைத்து ஏங்கி பல நாட்கள் அவள் காலம் கடத்த வேண்டியதாய் இருக்கிறது.<br />
<br />
வாழ்க்கையை அதன் பின் ஆண்கள் மட்டும் ரசிக்கிரார்கள் பெண்கள் வீட்டில் இருக்கும் மேசை, நாற்காலி, குளிர்பதனப்பெட்டி, துவைக்கும் இயந்திரம் என்ற அளவில் அவளும் ஒரு பொருளாய் தான் மதிக்கப் படுகிறால். ஒரு வேளை அவள் வேலைக்குப் போனால் அவள் ஒரு சம்பாதித்துத் தரும் இயந்திரம் என்ற அளவில் மாறி , மாறி கடைசியில் தன் மனம் வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.<br />
<br />
வேலை பார்க்கும் பெண்மணிகள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. எல்லா நாட்களிலும் பெண்கள் வேலைக்குப் போய் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு தேவைப்படும் அந்த நாட்களிலு கூட மன்ம் இருகி, போகிறாள். அந்த நேரத்தில் எரிச்சல், கோபம், வேதனை எல்லாம் சேர்ந்து கொள்ள கணவனிடம் காண்பிக்க முடியாமல் தன் பிள்ளைகளிடம் காண்பிக்கிராள். அந்தக் கணவர்களும் இதை ச் சாக்காக பிள்ளைகளை சமாதானப் படுத்துவது போல் அவர்கள் பால் கோபத்தைத் திருப்பி விடுவதும் ப்ல வீடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.<br />
<br />
பெண்ணின் மிக மிக முக்கியமான பிரச்சனை மெனோபாஸ் தான். அந்த காலங்களில் அவளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளோடு , விரக்தி, கோபம், போன்ற பல்வேறு உணர்வுகளுக்கும் ஆட்பட்டு விடுகிறால். இதனை பல ஆண்கள் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்.<br />
<br />
இதன் காரணமாக தங்களைத் தாங்களே தனிமைப் ப்டுத்திக் கொண்டும் கோயில், ஆசிரமம் என்றும் போய் அங்கும் வேறு மாதிருயான பிரச்சனைகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.<br />
<br />
பல வீடுகளில் அவளூக்குப் பிடித்த மெல்லிசை கேட்பது, சினிமா செல்வது, புத்தகம் படிப்பது, சுற்றுலா தலங்கள் செல்வது என்று எதுவும் அவளுக்கு வழங்கப்படுவதே இல்லை<br />
<br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">பெண்கள் விடுதலை பெற்றிருக்கிறார்கள்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">ஆட்டுக்கல்லிருந்து கிரைண்டருக்கும்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">அம்மியிலிருந்து மிக்ஸிக்கும்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">எல்லாம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">அடுப்படி ...கிச்சனாகி</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">சிமிண்ட் தரை மார்பிள்ஸாகி</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">முத்தக்கட்டு சிங்காகி</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">எல்லாம் நவீனமாகிவிட்டதுதான்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">ஆனாலும்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">அடுக்களை என்ற கிச்சனுக்குள்ளும்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">பெண்தான்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">சமைக்கிறாள்!</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;">*************************</span>.<br />
<br />
இப்படி ஒரு கவிதை எழுதினே. சில ஆண்டுகளுக்கு முன்..ஆனால் இன்னமும் இதன் நிலை மாறவில்லை.<br />
<br />
<span style="background-color: white; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> பலகாரம் செய்தல்</span><br />
<span style="background-color: white; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> மாவு அரைத்தல்</span><br />
<span style="background-color: white; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> விருந்தினருக்கும்</span><br />
<span style="background-color: white; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> வீட்டினருக்கும் உபசரித்தல் என்று</span><br />
<span style="background-color: white; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> பண்டிகை விடுப்பு எடுத்துக் கொண்ட</span><br />
<span style="background-color: white; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> வேலைக்காரி வேலையுடன் சேர்த்து</span><br />
<span style="background-color: white; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> தொடர்ந்து, நீண்டு............................</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> பல வேலைகளுடனும், களைப்புடனும்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> முடிகிறது தீபாவளி</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> பெண்களுக்கு...........</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> தொலைக்காட்சி பார்த்தல்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> புது ஆடை உடுத்துதல்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> இன்னும்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> இரண்டு மூன்று தேநீர் பருகுதல் என்று</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> வெற்று அரட்டைகளுடனும்</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> ஆடம்பரமாக</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> நகர்கிறது தீபாவளி</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"> ஆண்களுக்கு........</span><br />
<span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"><br /></span>
இந்தக் கவிதையும் நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது தான். இன்னும் சில ஆண்டுகள் கழித்தேனும் பெண்ணின் நிலை மாற வேண்டும். புரிந்து கொண்டோர் அதிகமானால் , அவள் வழக்கம் போல் தன் மகத்துவம் பெறலாம். இல்லையேல் மனநோய் கண்டு அதுதான என்றே தெரியாமல் மட்கிப்பொகும் அந்தப் பெண் மட்டும் அல்ல. அந்த சமுதாயமும்<br />
*************************************************************************</div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-39726857072981123772015-09-30T07:53:00.003-07:002015-09-30T07:53:42.128-07:00வேண்டும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: #f4cccc; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;">வேண்டும்.. எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்</span><br style="background-color: #cbbcee; clear: left; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;" /><br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" /><br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" /><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"> “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது</span><br style="background-color: #cbbcee; clear: left; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;" /><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"><br style="clear: left;" /></span><span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"></span><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;">வகை 5 </span><br />
<br />
<br />
அஞ்சாத வாழ்க்கையை<br />
அவனியிலே ஏற்றுமே<br />
அன்பையே கோர்க்க வேண்டும்<br />
<br />
விஞ்சிடும் புகழதும்<br />
விண்ணிலே ஏறிட<br />
வீண்ர்கள் மடிய வேண்டும்<br />
<br />
மஞ்சமே கொண்டுமே<br />
மகிழ்வுகள் ஏற்கவே<br />
மாண்புகள் வாழ வேண்டும்<br />
<br />
பஞ்சமே இல்லாத<br />
பாதையில் வாழவே<br />
பைந்தமிழ் வாழ்த்த வேண்டும்<br />
<br />
நிதியார்ந்த உலகிலே<br />
நெஞ்சத்தில் சத்தியம்<br />
நினைவிலே கொள்கை வேண்டும்<br />
<br />
கதியற்று நின்றவர்<br />
கவலையைத் தீர்க்கவே<br />
கட்டளை ஒன்று வேண்டும்<br />
<br />
மதியார்ந்து வாழ்பவர்<br />
மண்டலம் போற்றவே<br />
மண்ணிலே உயர்வு வேண்டும்<br />
<br />
சதியினை முறித்துமே<br />
சாதனை செய்திட<br />
சகலமும் முயல வேண்டும்<br />
<br />
***************************************************************<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-63497722777687045142015-09-30T07:17:00.000-07:002015-09-30T07:17:02.783-07:00தாவர உணவும்...ஒரு கனவும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="background-color: #f4cccc; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;">தாவர உணவும் ஒரு கனவும்... எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்</span><br style="background-color: #cbbcee; clear: left; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;" /><br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" /><br style="background-color: #f4cccc; clear: left; color: #2e2e8a; font-family: 'Cherry Cream Soda'; font-size: 14.85px; font-style: italic; font-weight: bold; line-height: 20.79px;" /><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"> “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது</span><br style="background-color: #cbbcee; clear: left; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;" /><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;"><br style="clear: left;" /></span><span style="background-color: #cbbcee; color: #2e2e8a; font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 14.85px; line-height: 20.79px;"></span><span style="background-color: #61a8fb; color: #2e2e8a; font-family: 'Comic Sans MS', Arial, Helvetica, sans-serif; font-size: 13pt; font-style: italic; font-weight: bold;">வகை 2 </span><br />
<br />
<br />
நாங்கள் புதுகையில் இருந்த போது நடந்தது இது. எங்கள் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி இருந்த வீட்டில் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். அதனைக் கவனமாக கண்ணுற்ற ஒரு மிகப் பெரும் நல்லவர் ஒருவர் உங்கள் வீட்டு வாசலில் வேப்பமரம் இருக்கு. அதனால் தான் அடிக்கடி சண்டை வருது. பெண்கள் ஒதுங்கும் நாளிலும் நீங்கள் அங்கே இருக்கீங்க.அது அது மாரியம்மனின் அடையாளம். நீங்கள் பாவம் பண்ணிக் கொண்டு இருக்கீறீர்கள் என்று சொல்ல மறுநாள் அந்த மாரியம்மன் எனப்பட்ட வேப்ப மரம் வெட்டப் பட்டது. யாரும் மாரியம்மனை எப்படி வெட்டலாம் இது அதை விட பாவம் என்று சொல்லித் தரவில்லை பாவம்.<br />
<br />
<br />
((அவர்கள் வீட்டில் அதன் பின்னும் சண்டை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது))<br />
<br />
அவர்கள் வெட்டிய உடன் அதற்கும் பக்கத்துக்கும் பக்கத்தில் இருந்த அம்மா, மரம் வெட்டும் காரணம் கேட்க, மீண்டும் ”பாவம்” செய்த கதைகள் சொல்லப்பட அவர்கள் வீட்டு வாசலில் இருந்த மரமும் வெட்டப்பட்டது.<br />
<br />
இப்படியாக பாவக் கதைகள் பெரியார் நகர் எங்கிலும் சுற்ற ஆங்காங்கே மரம் வெட்டு படலம் அழகாகவும் நிதானமாகவும் நடந்து முடிந்தது.<br />
<br />
பெரும் பாலும் எல்லோர் வீடுகளிலும் சுற்று சுவர் வைத்து சிறிய பகுதிக்கு வீடு கட்டி விட்டு மீதிப் பகுதிக்கு செடிகள் வைத்திருப்பர். இவர்கள் தாவர விரும்பிகள் போல் தங்களைக் காண்பித்துக் கொண்டாலும் உண்மையில் அவ்வளவுக்குத் தான் லோன் கிடைத்திருக்கும் என்பதே மறைக்கப்பட்ட வரலாறு. (((( இவர்கள் செடி வளர்க வேண்டும் என்பதற்காகவே கடன்கள் கட்டுக்குள் இருக்கும் படியான சாபத்தை கடவுள் அருள்வாராக..(இருந்தால்))))<br />
<br />
எங்கள் சொந்த வீடு இருக்கும் மருது பாண்டியர் நகரில் முழுக்க முழுக்க வீட்டின் முன் அழகிய பூஞ்செடிகளும் வீட்டின் பின்னே காய்கறித் தோட்டங்களும் அமைக்கப்பட்டிருக்கும். நகரை விட்டு மிகவும் ( நகர் நீங்கு படலம்) தொலைவில் இருக்கும் எங்களின் அந்தப் பகுதிக்கு காய்கறிகாரர் வரவே மாட்டார் என்பதால் பொதுவாக அனைத்து வீடுகளும் இதனைக் கடைபிடித்திருந்தோம்.<br />
<br />
அங்கேயும் ஒரு தாவர வில்லன் வந்து இந்தக் காய்கறிகள் 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் சீச்சீனு கிடைக்குது. அதுக்கு பதிலா கடனோ உடனோ வாங்கி ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டு விட்டால் அந்தப் பணத்தில் கொள்ளைக் காய்கறி வாங்கலாம் என்று ஒருவர் திருவாய் மலர்ந்தருளா அங்கும் அரங்கெற்றப்பட்டது. இல்லை அழிக்கப் பட்டது காய்கறித் தோட்டங்கள்.<br />
<br />
மாடி மேலே மாடி கட்டிக்கொண்டே போய் மாடிகள் இருக்கிறது . ஆனால் தோட்டங்களும் இல்லை. ஆரோக்கியமான சூழலும் இல்லை. முன்பெல்லாம் ஜன்னலை த்திறந்தால் பக்கத்து வீட்டின் முல்லைப் பூவும் எங்கள் வீட்டின் மல்லிகையும் போட்டிப் போட்டுக் கொண்டு வாசத்தைக் கொண்டு வரும். கோடைகாலங்களில் கூட மின்விசிறி பயன்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதில்லை<br />
<br />
ஆனால் இப்போது கதவைத் திறந்தால் காற்று வரவில்லை. கொசு தான் வருகிறது. பூக்களின் வாசம் போய் செப்டிக் டேங்க் வாடை தான் வருகிறது<br />
<br />
வடக்குப் பக்கம் உள்ள வீட்டில் மோட்டார் போட்டால், தெற்கே உள்ளவர்கள் அவர்கள் அணைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.<br />
<br />
இப்போது ஏதோ ஒரு ஜோதிகா படத்தைப் பார்த்து விட்டு மாடியில் தோட்டம் போட்டிருக்கிறார்களாம். ( நல்ல வேளை அவ்வப்போது இப்படியான நற்பணிகளையும் திரைப்படங்கள் செய்கின்றன போலும்)<br />
<br />
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். மரங்களை நட்டவர்கள் அதன் கீழ் ஒரு தெய்வங்களையும் சொன்னதின் காரணம் அவர்கள் மரங்களை வெட்டாமல் இருக்க வேண்டும் என்று தான் என்று..<br />
<br />
மற்றொரு வீட்டில் தென்மேற்கில் மல்லிகை இருக்கக் கூடாது அங்கே பணம் வைக்கும் அரை இருக்க வேண்டும். என்று சொல்ல அது வெட்டப்பட்டு அறையானது. அப்புறமும் பணம் வரவில்லை. ( உழைக்காமல் பணம் வராது என்று அவர்கள் நினைக்கவே இல்லை.) <br />
<br />
<br />
அங்கேயே நொந்து போன நான் இங்கே மாடியின் கீழ்ப்பகுதியில் கூட ஒரு கடை கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது.<br />
<br />
மிக மிக ஆசையாய் ஒரே ஒரு ரோஜாச் செடி வாங்கி இப்பொது இருக்கும் அப்பார்ட்மெண்டில் வைக்க ,போக வர இடைஞ்சலாக இருக்கு என்றும் செடிகள் வைப்பது பட்டிக்காட்டுத்தனம் என்றும் மிக மிகக் கொடூரமாக எள்ளி நகையாடிவிட்டுப் போனாள் கீழ் வீட்டில் இருக்கும் பெண்.<br />
<br />
ஏதாவது கோயிலில் பூசாரிகள் சாமியாடி எனக்கு நிறைய செடி நடுங்க என்று சொன்னால் தேவலாம் போல் இருக்கிறது. ( அந்தக் காலத்தில் முளைப்பாரி என்று ஒரு நடைமுரை உண்டு..அது செழித்து வளர அவ்வளவு பாடுபடுவோம்) இங்கே சாமி எல்லாம் நல்லாத் தான் கும்புடுறாங்க. ஆனால் ஏனோ எல்லோரும் செடி வெறுப்பாளர்களாய் இருக்கிறார்கள்.<br />
<br />
கோழியிலும் ஆட்டு இறைச்சியிலும் தான் அதிகமான சத்து இருக்கிறது என்பது அவர்களின் வாதம். ( அக்காலத்தில் நாட்டுக் கோழிகள் சரி. இக்காலத்தில் ஊசி போட்டு வளர்க்கும் கோழிகளிலுமா என்று என்னால் ஏனோ கேட்கவே முடியவில்லை)<br />
<br />
பக்கத்தில் உள்ள கடையில் ஞாயிறு அன்று காய்கறிகளே கிடைப்பதில்லை. எல்லோரும் அசைவம் தான் சாப்பிடுவார்களாம். எனக்கு மட்டும் ஏதோ காய்ந்த கத்திரி, மங்கிய கேரட்டுகள் தருவார். உங்களுக்காகத் தான் வைத்திருந்தேன் என்ற அங்கலாய்ப்பு வேறு.<br />
<br />
மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு நிறைய அசைவம் சாப்பிட்டு விட்டு இதனைச் சாப்பிடுங்கள் என்றா சொல்வார்? இட்லி அல்லது கஞ்சி சாப்பிட்டு விட்டு மருந்துகள் உட்கொள்ளுங்கள் என்று தானே சொல்வார்.என்று சொல்லிவிட்டு வந்தேன்.<br />
<br />
எங்கோ ஒரு இடத்தில் ஆடுகள் கோழிகள் வெட்டப்படும் போது அவை பய உணர்வால் தவிக்கின்றன. அப்போது டாக்ஸின் என்ற நோய் பரவவும் வாய்ப்பு இருக்கிறதாம் என்றேன். போங்கம்மா...நீங்கள் பிறப்பிலேயே சைவம் அதனால் தான் இப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லி சிரிக்கிறார்கள்..( தாவர உணவைப் பற்றி யாரும் பெரிய நடிகர்கள் சொன்னால் ஏற்பார்களோ)<br />
<br />
நினைத்த நேரத்தில் மருதாணி பறித்து அரைத்து வைத்ததும்,அடுப்பில் கடுகைப் போட்டு விட்டு கொல்லையில் கறிவேப்பிலை பறித்துத் தாளித்ததும்,எலுமிச்சைகளையும், முருங்கைக்காய்களையும் ,மாங்காய்களையும்,நண்பர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்ததும், ஏதோ முன் ஜென்மத்தில் நடந்தது போலவே இருக்கிறது.<br />
<br /></div>
Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.com3