Friday, November 8, 2013

உனக்கு

காதலித்த காலங்களில்
கணக்கின்றி பேசுவாய் நீ
இப்போது
நிமிடங்களில் உன்
மொத்த உரையாடலும்!
ஒன்றாய்ப் போவோம் என்று சொல்லி
பேருந்து பயணத்தின் போது
வேறு வேறு இருக்கைகளில் அமர்ந்தாலும்’
இதயத்தின் அருகிருந்தாய்!
கைபிடித்த காலத்திலும்கூட
மனம் கொள்ளா மகிழ்வுடன்
காணப்பட்டாய்!
ஏழைப்போர்வை எட்டி மிதித்து
பணக்காரப்போர்வை உன்னை
வணங்கி ஏற்றவுடன்
மகிழுந்தில் தான்
அழைத்துச் செல்கிறாய் என்னை!
எந்த ம்கிழ்வும் இல்லாமல்!
கேட்டதெல்லாம் வாங்கித்தருகிறாய்
பெரிய கடன்காரனைப்போல்!
எனக்குச் சொல்வதற்கென்றே
நகைச்சுவை படிப்பாய் அந்நாளில்!
இன்றோ
வெற்று நகையின்
சுவை மட்டுமே அறிகிறேன்!
பணம் எல்லாம் செய்யும்!
பணமே வாழ்க்கை என்கிறார்கள்!
அந்தப் பணம்
வாங்கித்தருமா
நான் வேண்டும்
நான் விரும்பும்
நான் நேசிக்கும்
நான் இழந்த
உன் மனம்
*****************************************************************

3 comments:

  1. இதுக்கு நான் எதுவும் பதில் தரமாட்டேன் பா

    ReplyDelete
  2. விழுமுன் சிந்திக்காத மனம்
    வீழ்ந்த பின்னே சிந்திக்கிறது.

    ReplyDelete
  3. மலர்மகன்June 17, 2014 at 9:21 PM

    அவரும் இதைச் சொல்லலாம் இல்லை. இப்ப நான் செல்வக்குமார் கட்சி தான்

    ReplyDelete