Thursday, October 31, 2013

ஹைக்கூ க்கள்

இவ்வளவு தவறுகள் நடந்தும்
யார் கண்ணையும் குத்தவில்லை
சாமி.....


ஒப்பனையோடு திரையில் நடிகர்கள்
வாழ்க்கையில் மக்கள்
எந்த ஒப்பனையுமின்றி


சாதி பார்க்காத தண்டவாளங்கள்
குவிந்தன
காதல் பிணங்கள்



குழந்தைகளின்றி
வெறிச்சோடிப்போனது மைதானம்
இல்லங்களில் தொலைக்காட்சி


எல்லாப்பொருத்தங்களும்
ஜாதகத்தில் இருந்தன
பிரிந்தனர்....விவாகரத்து


யாதும் ஊரே...யாவரும் கேளிர்
வெளிநாட்டில் சம்பாதிக்கும்
கணவர்


விருப்ப ஓய்வு கிடைக்குமா
வீட்டிலும்
ஏங்கும் வேலைக்குப்போகும் பெண்
***************************************************


5 comments:

  1. ஹைக்கூ க்கள் அருமை...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete

  2. தமிழ்மணம் நிர்வாகத்திடமிருந்து தகவல் வந்ததும் தெரிவிக்கவும்... அதே போல் பதிவு இட்டவுடன் கீழ் உள்ள திரட்டிகளில் சென்று பதிவு செய்யவும்... நன்றி...

    http://ta.indli.com/

    http://www.tamil10.com/

    ReplyDelete
  3. அருமையான ஹைக்கூ தொகுப்பு .... வாழ்த்துக்கள்

    (அப்பாட சாமி கண்ணா குத்தாது)

    ReplyDelete
  4. அருமை சுவாதி

    ReplyDelete
  5. சொல்லும் செயலும் மாறுபட்டிருப்பது முரண் எனக்கொள்வோம் .
    உங்கள் நினைவில் நின்ற முரண்கள் நிசமானவை .முரணான மனிதர்கள் நம்முன்னால் என்பதை அருமையாகச்சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் .

    ReplyDelete