Tuesday, September 29, 2015

வேரென நின்றிடுவாய்


வேரென நின்றிடுவாய் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(காவடி சிந்து)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை



கால முருக்கலில் தோன்றிக் கருத்தெழில்

     கற்றுக் கொடுத்தவளே-அருங்
      கன்னித் த்மிழ்க் கொடியே-அடர்

ஞாலம் தனில் பெரும் ஞானம் உரைத்திடுக்

     நாதம் இசைப்பவளே-பசும்
     நாற்று வளர்ப்பவளே-வரும்

காலக் கதிரதில் ஊனில் உயிரினில்

    காட்சி தருபவளே-மூச்சுக்
     காற்றில் சிரிப்பவளே-வெற்றிச்

சீலமனைத்திலும் செம்மை விளங்கிட

     சிந்தனை தந்தவளே-என்னுள்
     சீறிப்பிறப்பவளே-என்

மோகக் கருவிழி முங்கி எழுந்திட

     முத்தும் அளித்தவளே-அதை
     முன்னமாய்த் தந்தவளே-பெரும்

தாகமெடுத்துனை தேடிய டைந்திட

    தத்தும் நறும்புனலே-நலம்
    தங்கும் அருட்கடலே-வானின்

மேகக் குடமதன் மேனமை அலர்ந்திட

     மாரியும் ஆனவளே-சுடர்
    மங்கலப் பெண்மயிலே-உன்றன்

போக மேவாழ்வெனக் கூடும் புரட்சியின்

     பாவலர் கைப்பொருளே-என்னுள்
     பூக்கும் சுகநிலையே-வளர்

நேசமுடன் உனை நெஞ்சில் துதித்திட

     நன்னிலை தந்தவளே-எந்த
     நாட்டையும் வென்றவளே-திரு

வாச கமாய்தினம் தோன்றி மலர்ந்துமே

     வாகையைக் கொண்டவளே-அதில்
      வன்மையும் தந்தவளே-மிகு

பாச முடன்உனைத் தாங்கியே நின்றிட

     பாதையைத் தந்திடுவாய்-என்றன்
     பண்பையும் கூட்டிடுவாய்- இந்த

தேச மனைத்திலும் வெற்றி ஒளிர்ந்திட

     வேகமாய் வந்திடுவாய்-நின்றன்
     வேரென நின்றிடுவாய்
**********************************************************************************

No comments:

Post a Comment