Wednesday, September 30, 2015

எங்கள் ஊர்

எங்கள் ஊர் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(காவடி சிந்து)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை


வயல் களிலோ ஏர்பூட்டி
   வார்ப்புடனே வளம்கொழிக்க
கயங்களிலோ தமிழென்றே
   குவளை மலிந் தாடிடுமே


வாழையுந்தான் விளையுதங்கே
   வசந்தத்தைப் புதுப்பித்து
தாழையுந்தான் தளிர்க்கிறது
   திசைமணக்கச் செய்கிறது

குளமும் நிறைந்திருக்கும்
   குணமும் நிறைந்திருக்கும்
வளமும் நிறைந்ஹிருக்கும்
   வாய்க்காலும் நிறைந்திருக்கும்

நித்தம் நெல்விளையும்
   நெத்திலி மீன் விளையும்
சித்தம் ஓர் கணக்காய்
   செவ்வாழ தான் மிதக்கும்

தேனும் கிடைக்குதம்மா
   தெள்ளுதமிழ்ப் பாட்டாக
வானும் சிலிர்க்குதம்மா
   வசந்தத்தின் தோப்பாக

வயலின் வரப்பெல்லாம்
   வண்ணமுடன் சிரிக்கிறதே
கயலும் வந்தாங்கே
   கண்மூடி விழிக்கிறதே

எங்கும் சோலையம்மா
   எதுவ்ய்ம் இனிக்குதம்மா
தங்கும் மனங்களிலே
   திருவே நிறையுதம்மா

மைனாவும் மயிலனமும்
   காக்கையுடன் விளையாடும்
தேனாளும் மலர்மடியில்
   துறுவண்டு இசைபயிலும்

காவியமும் சிறந்திருக்கும்
   கட்டுரையும் விரிந்திருக்கும்
ஓவியமும் உயிர்த்தது போல்
   ஒய்யார வயல்வெளிகள்

ஆகா வந்திடுக.
   ஆசையுடன் அழைக்கின்றோம்
அத்தனையும் உமக்கேதான்
   அன்பாலே வரவேற்றோம்

திரும்பும் திசையெல்லாம்
   திங்கள் போல் முகம்காண்பீர்
திக்கட்டும் புகழ்பரப்பும்
   பதிவர்விழா வரவேற்கும்

எழுத்துக் கொண்டாடிகள்
ஏற்றமுடன் நிறைந்திருக்க
நடிப்புக் கொண்டாடிகளை
நா ட்டை விட்டுத் துரத்திடுவோம்

வாருங்கய்யா வாருங்க
   வண்ணத் தமிழ் பருக வாருங்க
சேருங்கம்மா சேருங்க
   செந்தமிழ் கூட்டமிதுசீக்கிரமே சேருங்க

****************************************


பின் குறிப்பு: இவ்ளோ அழகா புதுக்கோட்டை என்று வியந்து அதைக் பார்க்க வாவது வர வேண்டும் நினைத்து வந்து விட்டு இதில் பாதியைக் காணும் என்று சண்டைக்கு வராதீர்கள்..( கிணற்றைக் காணோம் )

1 comment: