Monday, September 28, 2015

சிந்து தரும் தூது

சிந்து தரும் தூது எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை5 மரபுக்கவிதைப்போட்டி
*************************************



தன்னதன தான தானத் தான
தன்னதன தான தானத் தான
தன்னதன தான தானத்தான------தனதானா

கொஞ்சிவரும் மேகம் காணக் காண
நெஞ்சிலொரு மோகம் ஏறிப்போக
வஞ்சியுனைத் தேடிப் பாடும் பாடல் ----தமிழாகும்

துள்ளித்திரி பாவை போல நாடும்
வெள்ளியென ஞானம் மேவ, கூடும்
வெள்ளமென இன்பம் சேரச் சேர ---வருவாயே

தும்பையதில் மேவும் போது
அம்பலவன் மேனி நீறு; நீறு
விம்மியெழும் ஞானம் சேரும் பாதை ---தெளிவாகும்

குற்றமதில் வாழும் மாயக்கூட்டம்
சுற்றமிடை தேயும் தீயக் கேடு
முற்றுமழிந்தோடும் போகப்போக---நிறைவாக

நன்மையதும் கூடிக் கோர்க்க கோர்க்க
இன்னலதும் தீர்ந்து ஓடிப்போக
கன்னலுமாய் நானும் தேறிப்போக----வளமாக

வந்துவிடும் காலம் நாதம் போல
சிந்துதரும் தூது வேதம் போல
முந்திவரும் போதில் சூழச்சூழ---தமிழாகும்

என்னிலொரு பாடல் சூடச்சூட
தென்மதுரை மீனாள் ஆடிப்பாடி
கன்னியெனை நாளும் பார்க்கப் பார்க்க---வருவாளே

எந்தமிழும் பூவாய்ச் சேரச் சேர
தந்தருளும் தேவி வாராய் வாராய்
முந்திவரு பாவாய் தாராய்,தாயாய்,-----கவியாக
*********************************************************************888

No comments:

Post a Comment