Monday, September 28, 2015

தமிழின் மேன்மை```

தமிழின் மேன்மை எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை5 மரபுக்கவிதைப்போட்டி
*************************************

தன்னத்தன தன்னத் தனதன
தன்னத்தன தன்னத் தனதன
தன்னத்தன தன்னத் தனதன------தனதானா

                        
எண்ணத்தினில் வண்ணக்குமிழிடும்
பண்ணிற்கவி என்னிற் பெருகிட
தண்ணிற்புவி மெல்லப்பரவிட- ---நிறைவாக

பட்டுத்தறி இட்டுத்தரவென
எட்டுத்திசைக் கொட்டிக்களித்திட
சிட்டுக்கவி பல்கிச் சிறந்திட-----வளமாக

தங்கத்தமிழ் வைத்துக்குலவிடும்
எங்கட்தமிழ் பொங்கிப்புகழிட
திங்கட்சுடர் சிங்கத்தமிழென-----தலைதூக்கு

கொற்றக்களம் பற்றிப்படிந்திட
சுற்றித்தரும் கொட்டிக்களமிட
கற்றுத்தரும் முற்றப்பழமென ----தமிழாக

தெள்ளக்கவி தெங்கிற்சுவைதர
கள்ளிற்சுவை அன்னச்சுகம் எழ
பிள்ளைசுகம் பொங்கிப் பொலிவுற-----வருதாமோ?

சொல்லிற்சுகம் தங்கிக் கமழிட
இல்லில்வளம் பொங்கிப் பொலிவுற
கல்லும்கவி தொட்டுப்பரவசம் -------அடையாதோ?

விண்ணில் அலை கோள்கட் பணிசெய
புண்ணிற்புதை உள்ளம்மகிழிட
தண்ணிற்கவி தந்தத் தமிழெனும்-----அமிழ்தாமே?

மின்னற்பொறி மிஞ்சிப்பொலிவுற
கன்னற்சுவை தன்னிற் சுவைமிக
பொன்னின்மிகு செம்மைச் சுடரென-----தமிழாகும்
*********************************************************




(இதை வேண்டியோர் தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம்))))

பின்குறிப்பு....புதுக்கோட்டையில் இருந்தால் எழுதக்கூடாது என்று நானாக நினைத்துக் கொண்டிருக்க 22ம் தேதிவரை சும்மா இருந்து விட்டு எல்லோரும் எழுதணும் நு சொன்னவுடனே யோசிச்சு....யோசிச்சு...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பரிட்சைக்குக்கூட இத்தனை மணிவரை படிக்கலை சாமி...இதோட தனபாலன் அய்யா நிலையை கேளுங்க...போஸ்டிங் போட்டுட்டு போட்டுட்டு அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறேன்...

இனி யாரும் சந்தக்கவிஞர் சுவாதி எங்கே என்று குறுஞ்செய்தி அனுப்புவார்களா என்ன? ( இது அப்படி அனுப்பிய அன்பு நெஞ்சத்துக்கு மட்டும்)

No comments:

Post a Comment