Monday, September 28, 2015

எங்கள் தேசம்


தேசம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை5 மரபுக்கவிதைப்போட்டி
*************************************

வகை காவடி சிந்து
*************************



வெற்றி நடமிடும் தேசம்-என்றும்
 பொங்கிப்பெருகிடும் நேசம்---தினம்

     வளம் கொட்டிட மதுரக்கவி
     அதனைக் கொடு மனமொத்திட---------------வாராய்--இங்கு
                                                                                            பாராய்



பெற்றி வடமிடும் நேரம் --எங்கள்
பாரதம் பேசிடும் தீரம்----அவர்

     மனமொத்திட தரம் கொட்டிட
     களம் பற்றிட கவியும் புனை____________-------நாடு--பண்

                                                                                                 பாடு



மின்னி மறையிடும் தீயும் ---இங்கு
வந்து பிறந்திடும் சேயும்---பலர்

     நலம்பற்றிட தினம் கற்றிட
     பெருமைப்படு வறுமைகெடு-----------------------அழியும்---தனம்
                                                                                                வழியும்


வண்ண மிகையிடும் நாடு---என்றும்
வந்து இதனையே நாடு

     பசுமைகொடு பகைமைகெடு
     பரிவில்மூட பழமைகெடு---------------------------இன்றே---குணக்
                                                                                                குன்றே

******************************************************************************    

No comments:

Post a Comment