Friday, July 18, 2014

என் இறைவா

என் இறைவா

வாழ்க்கைச் சக்கரம்
சுழலும் என்கிறார்கள்

மேலோன் கீழோன்
எல்லா விதியும் மாறும்
என்கிறார்கள்

மாற்றம் மட்டுமே
மாறாத சொல்
என்கிறார்கள்

பானை மண்ணாகிறது
மண் பானையாகிறது

அழியாப் பொருள்கள்
ஏதும் இல்லையா?

அழியும் பொருள்கள் எனில்
அதன் பிறப்பின்
மர்மம் என்ன?

அழியாப் பொருள்கள் எனில்
அதன் வாழ்வின்
 ரகசியம் என்ன?

உயிரே அழியும் போது
மற்றவை மரிக்காதா?

உலோகங்களும் ஒருநாள்
அழியும் எனில்
எந்தக் காலத்தில்
எத்தனை ஆண்டுகளாகும்?

என் நிலையும் மாறுமோ?

எவர் நிலையெலாம் மாறும்?

நானறிந்து
 இங்கு ஏழைகள்
பரம்பரை ஏழைகள்

செல்வர்கள்
பரம்பரை செல்வர்கள்

வஞ்சகர்கள்
 பரம்பரை வஞ்சகர்கள்

ஏமாளிகள்
பரம்பரை ஏமாளிகள்

ஒருவேளை இவர்கள்
ஒன்றில் உயர்ந்து
மற்றொன்றில் தாழ்கிறார்களா?

மற்றொன்றில் ஏமாந்து
ஒன்றில் விழிப்படைகிறார்களா?

என் இறைவா

எல்லோரும் ஏதோ
சந்தர்ப்பம் வருவதாய்ச்
சொல்கிறார்கள்

எனக்கும் கொடு
நானும் வாழ வேண்டும்
நானும் மாற வேண்டும்

என்
வாழ்வில்
மாற்றம் வேண்டும்
**************************************************








3 comments:

  1. வாழ்வில் இறையருள் காரணமாக மாற்றம் வரும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பலமனிதர்களுடைய ஏக்கத்தின் பெருமூச்சை அழகாக வடித்துள்ளீக்கள் சகோதரி அருமை, அற்புதமாக இருக்கிறது கவி(தை)த்தது மனதை...
    நேரமிருப்பின்..
    www.killergee.blogspot.com
    வரலாமே...

    ReplyDelete
  3. நல்ல சந்தர்ப்பம் வாய்க்கட்டும்! நன்றி!

    ReplyDelete