Sunday, July 13, 2014

சரித்திரம் படைப்போம்

இன்பம் கோடி காண்போமே
இடர்கள் ஓடிப் போ என்போம்
அன்பும் அறனும் சிரித்திடவே
அடக்கம் காத்து வாழ்வோமே

பண்பும் பாசம் மிகக் கொண்டு
பாரில் நன்றாய் வாழ்வோமே
இன்னல் எழுந்து வருமாயின்
மின்னல் போல நீக்குவமே

கன்னல் தமிழில் கவிபாடி
காலம் முழுதும் களிப்போமே
தன்னலம் மறந்தே உழைப்போமே
தமிழின் பெருமை உணர்வோமே

எங்கள் கவிபோல் உலகினிலே
எவரே படைத்தார் சொல்லுங்கள்
சங்கத் தமிழின் புகழ்பாடிச்
சரித்திரம் படைப்போம் வாருங்கள்
**************************************************

3 comments:

  1. கன்னல் தமிழில் கவிபாடி
    காலம் முழுதும் களிப்போமே

    கன்னல் கவிதைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சிறப்பாகச் சொன்னீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுகப்படுத்தியவர்-மகிழ்நிறை மைத்திலி கஸ்தூரிரெங்கன்


    பார்வையிட முகவரி-வலைச்சரம்


    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
    என்பக்கம் கவிதையாக

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete