Sunday, July 13, 2014

காமராஜர்

கல்விக் கண்ணைத் திறந்தவர்
கல்விக் கூடம் கண்டவர்
நல்லோர் பலரும் மகிழ்ந்திட
நண்பகல் உணவு தந்தவர்

இன்னல் தன்னை உணர்ந்தவர்
ஈடில் லாத பெருந்தலைவர்
துன்பம் மக்கள் அடைந்திடவே
தூயவர் பொறுக்க மாட்டாரே

தொண்டு செய்தே வாழ்ந்தாராம்
துணிவு மிகவும் கொண்டவர்
என்றும் அவரைப் போற்றுவோம்
ஏழை வாழ்வை உயர்த்துவோம்

ஐந்து ஆண்டுத் திட்டத்தால்
அகிலம் போற்ற வாழ்ந்தவர்
அவரின் வழியைத் தொடர்ந்துமே
அனைவரும் நன்றாய் வாழ்வோமே
********************************************


(நாளை மறுநாள் கல்வித் திருநாள் முன்னிட்டு)

3 comments:

  1. ஆமாசாமிJuly 13, 2014 at 7:06 AM

    நேற்று கவிதையைக் காணும்...நான் பயந்துட்டேன் டீச்சர்

    ReplyDelete
  2. வணக்கம்

    சான்றோர் வழி சிறந்தது.....
    தங்கள் கவிதையும் சிறந்தது
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சிறப்பாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete