Monday, June 9, 2014

உயிரோடு.....

உயிரோடு
இருந்தபோது
முகம் காட்ட மறுத்தவர்கள்
இறந்தபின்
விசாரணைக்கு
வீதிக்கே வந்தார்கள்
இவர்களுக்கு
அவன் வாழும் போது
அனுபவித்த அவலங்களைப்
பங்கிடுவதை விட
 இறந்த பின்
எப்படி இறந்தான்
என்ற வேதனையை
 பகிர்வது போல் வந்து
பல மடங்கு ஆக்குவதிலே
பலசாலிகள்!
இறந்தவன்
 எழவே போவதில்லை என்ற
 பாதுகாப்பு உணர்வுடன்!
***************************************************

1 comment:

  1. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 9:19 AM

    செத்த பிறகு தான் வருவாங்க உண்மை தான் என்றாலும் என் மனதை இந்தக் கவிதை அழ வைக்கிறது. கடைசி வரி தான் அருமை பாதுகாப்பு உணர்வுடன். அருமையாக கவிதை படைக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete