Saturday, June 14, 2014

என் இறைவா(கஸல்)

என் இறைவா
மனிதர்களுக்குள் எத்தனை வேலிகள்
மனதிற்குள் எத்தனை போலிகள்

உறவுகளில் உப்புகள்
உறவுகளின் கசப்புகள்
எல்லாம் நல்லதுதான்
அளவோடு இருக்கும் வரை

மாயைகள் அழிய வேண்டும்
மாண்புகள் நிறைய வேண்டும்

ஆனால்
என்னதான் நடக்கிறதிங்கே

அழிய வேண்டியவை
வாழ்கின்றன்
 வாழ வேண்டியவை
 அழிகின்றன

எது அழிவு?
எது வாழுவு?எது உண்மை?

ஒன்றுமே புரியாத நிலையில் தான்
ஒவ்வொரு மனிதரும்
ஒவ்வொரு வாழ்க்கையும்
ஒவ்வொரு நிமிடமும்

என் இறைவா
 எங்களை நெறிப்படுத்து
எங்களை முறைப்படுத்து
எங்களைச் செம்மைபடுத்து
எங்களை வாழவிடு
***************************************************************************

1 comment:

  1. நீங்கள் ஒரு எழுத்துக் கடவுள்.....நீங்களே இன்னொரு கடவுளிடமா?

    ReplyDelete