Saturday, June 7, 2014

புழுக்கம்.....

எங்கும் ஒரே புழுக்கம்!
அதோ வந்தது
இதோ வந்தது
எப்படியும்
தென்றல் வரும்
என்றார்கள்
அந்நியபுழுக்கம்
அழிக்கப் பட்டு
புதிய பூமியின்
புதுப் புழுக்கம் தான் வந்தது!

ஆனால்
புதிய தென்றல்
என்று அறிமுகப்படுத்தப்பட்டது!
மேடைகளில்
விளம்பரப்படுத்தப்பட்டது!
காவல் நிலையங்களில்-அன்றி
மாந்தோப்பு
புளியந்தோப்பு- முதற்கொண்டு
அங்கிங்கெனாதபடி
எங்கும்
புழுக்கம் குறையவில்லை
வியர்வைக்கு
விலையும் கிடைக்கவில்லை.
**************************************************

பின்குறிப்பு: இங்கே புழுக்கம் என்றால் விடுதலையை மட்டும் தான் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது.

4 comments:

  1. வணக்கம்

    தங்களின் கவிதை மிக ஆரமையாக உள்ளது புனைந்து சென்ற விதம் சிறப்பு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி ரூபன் சார்.

    ReplyDelete
  3. நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை. தாங்கள் கூறியபின் அவ்வாறு நினைக்கலாமோ என்ற எண்ணம் வந்தது.

    ReplyDelete
  4. ஆழமான பொருள் கொண்ட கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete