Saturday, June 14, 2014

என் இறைவா (கஸல்)

உயிர்களின் முடிச்சு
விரிசல்களில் நெரிகிறது

இதென்ன உலகம்?
இதென்ன வாழ்க்கை?

போராட முடியாமல்
புழுங்குகிறது மனது

இதயம் மட்டும்
காலைகளின் ஈரங்களை
மழைகால வாரங்களை
இயற்கையின் சுவாசங்களை
நேசிக்கிறது

நேசிக்கட்டும்
நேசத்திலாவது
உலகம்
அன்புமயமாகட்டும்
வானம் வசப்படட்டும்

வெற்றி வளர
அன்பு மலர
சாதிகள் அழிய
நேர்மை உணர
வானம் வசப்படட்டும்

என் இறைவா
இனிமேலேனும்
எல்லோருக்கும்
வானம் வசப்படட்டும்
***************************************

1 comment: