Wednesday, June 11, 2014

எதிர்பார்த்ததும் கிடைத்ததும்

நாங்கள்
உளவாளிகளை
எதிர்பார்த்தோம்
முதலாளிகள் தான்
கிடைத்தார்கள்

நாங்கள்
மேய்ப்பர்களை
எதிர்பார்த்தோம்
கசாப்புக்கடைக்காரர்கள்தான்
 கிடைத்தார்கள்

நாங்கள்
 பயிர்களைத்தான்விதைத்தோம்
பதர்கள் தான் விளைந்தது

நாங்கள்
மருத்துவர்களைக் கேட்டோம்
நோயாளிகள் தான் கிடைத்தார்கள்

நாங்கள்
காதல்களைக் கேட்டோம்
காமங்கள் தான் கிடைத்தது

நாங்கள்
 நன்னெஞ்சைக் கேட்டோம்
நயவஞ்சகம் தான் கிடைத்தது

நாங்கள்
அகிம்சையைக் கேட்டோம்
ஆக்ரோஷம் தான் கிடைத்தது

நாங்கள்
பள்ளிகளைக்கேட்டோம்
வீட்டுப் பாடவிடுதிகள் தான் கிடைத்தது

நாங்கள்
விண்வெளி ஆராய்ச்சி கேட்டோம்
கம்ப்யூட்டர் ஜோதிடம் கிடைத்தது

நாங்கள்
சிற்பங்கள் கேட்டோம்
சிலைகள் தான் கிடைத்தது

நாங்கள்
கவிதைகள் கேட்டோம்
காசு பண்ணும் ரகசியம் கிடைத்தது

நாங்கள்
இலக்கியங்கள் கேட்டோம்
புரியாத புத்தகங்கள் கிடைத்தன

நாங்கள்
இதயங்களைக்கேட்டோம்
இறுகிய பாறைதான் கிடைத்தது

நாங்கள்
இறைவனைத் தேடினோம்
மதங்கள் தான் கிடைத்தன!

2 comments:

  1. பதர்கள் தான் விளைந்தன, காமங்கள் தான் கிடைத்தன, வீட்டுப் பாடவிடுதிகள் தான் கிடைத்தன, சிலைகள் தான் கிடைத்தன - என்றிருந்திருக்கலாமோ? எதிர்மறையில் ஒரு நேர்மறைக் கவிதை. நன்றி.

    ReplyDelete
  2. வீட்டுப் பாட விடுதிகள்
    சொல்லாட்சி
    மாட்சி
    கவிஞரே ..
    தொடர்க
    http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

    ReplyDelete