Friday, April 4, 2014

இந்திய மக்கள்

விளையும் பயிரை
முளையிலேயே
செயற்கை உரத்திற்குள்
சிதைப்பவர்கள் இங்கு
விவசாயிகள்

அழிப்பவர்களுக்கு
பாதுகாப்பு அளிப்பவர்கள் இங்கு
காவலர்கள்

நோக்குமிடமெல்லாம்
வன்முறை வள்ர்ப்பவர்கள் இங்கு
ஊடகவியலாளர்கள்

அறிவியலில் அழிவை மட்டுமே
தெரிந்து கொண்டவர்கள் இங்கு
அறிஞர்கள்

உள்ளுக்குள் மூளும் மூர்க்கம் மறைத்து
நடைபாதைக்கடைகளில்
தேநீர் அருந்தினால்
அரசியல்வாதிகள்

குடும்பத்தை மட்டுமே
எல்லா பொது நிகழ்வுக்கும்
பிரதானப் படுத்துவர்கள் இங்கு
தலைவர்கள்

தாவுவதற்கு இடமே இல்லாமல்
எல்லோருடனும்
கூட்டணி வைப்பவைகள் இங்கு
கட்சிகள்

மனிதர்களின் நலன் மறந்து
தன் மருத்துவமனைக்
கல்லாப்பெட்டி நிறைப்பவர்கள் இங்கு
மருத்துவர்கள்

வேலை கிடைத்ததோடு படிப்பை
பரணில் போட்டவர்கள் இங்கு
ஆசிரியர்கள்

எல்லாவற்றையும்
பார்த்து பார்த்து
ஏமாந்தது தெரிந்தே
ஏமாறுபவர்கள்
இந்திய மக்கள்

2 comments:

  1. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்.
    வேலை கிடைத்ததும் படிப்பைப் பரணியில் போடாத
    தங்களின் எழுத்து அருமை. இனி தொடர்வேன்

    ReplyDelete
  2. நாகப்பன்June 5, 2014 at 4:28 AM

    கரந்தையாரைத் தொடர்ந்து நானும்....

    ReplyDelete