Saturday, March 15, 2014

என் மகள் ராகசூர்யாவிற்குப் பிறந்தநாள்..... வாழ்த்துங்கள்....எனக்குப் பிடித்த பாடல்...இது அவளுக்காக எழுதியது போலவே இருக்கும்.16.03.2014


















இது சங்கீதத் திருநாளோ?
புது சந்தோசம் வரும் நாளோ?
ரதி
என் வீட்டில் பிறந்தாளோ?
சிறு பூவாக மலர்ந்தாளோ?
சின்னச் சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்தமழை கன்னங்களில் நனைந்தாளே
கொஞ்சிக் கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே
கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களைப் பின்புறம் கொண்டு மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும்போதும் என்னைத் தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்

பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்றில் இவள் போல சுகம் இல்லை
இது போல சந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே என் தேவதை
நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்
சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில் வரந்து வைத்த ஓவியம்
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்
எங்கும் என்றும் இவள் ஞாபகம்

இவள் போகும் வழியெல்லாம் பூவாவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்
இவள் ஆடும் பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்......

5 comments:

  1. வணக்கம்

    பிறந்த நாள் பாடல் நன்றாக உள்ளது. தங்களின் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  2. அழகான அருமையான கவிதை...

    ராகசூர்யாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ராகசூர்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஆகா நான் ஊரில் இல்லாமல் போயிட்டேனே? இளைய கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது சாதனைகள் தொடர அன்பான வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நாகப்பன்June 5, 2014 at 4:39 AM

    இந்த அழகிய பெண்ணை விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமாக படிக்க வையுங்கள்.( எனக்கு சாமுத்திரிகா லட்சணம் தெரியும் சகோதரி)

    ReplyDelete