Sunday, March 30, 2014

தமிழ்வழிக் கல்வி...(மரபுக்கவிதை)

நற்றமிழில் நாமெல்லாம்
     பேசி வந்தால்
நயக்கு மாம் நம்தமிழும்
       என்றும் தான்
புற்றீசல் போலிங்கு
    தொடங்கி விடும்
புண்மைக்கு பிறகல்வி
     தொலைந்து போகும்


எக்காலமும் மனதிற்குள்
    பயந்து கொண்டு
அங்குதானே அனுப்புகிறோம்
    நாமெல்லாம்
எக்காலம் நாமுந்தான்
    திருந்தி இங்கே
இப்பள்ளி சேர்ப்போமோ
    கேள்விக் குறி


அரசுக்குத் தெரிந்துமேதான்
    நடக்கிறது
ஆட்சியாளர் பயப்படுவார்
   வாக்காளனன்றோ
அரசன் போல் வாழவேண்டி
    இருந்தோரை
அரக்கன் எரித்ததுவோ
    (கும்ப)கோணத்தீ


இருந்தும் ஏன் மவுனமோ
    தெரியலையே
இவரெல்லாம் எப்போதான்
   திருந்திடு வார்
மருந்துக்க்கும் அவராலே
   மகிழ்வு இலை
மயக்கம்ஏன் தயக்கம் ஏன்
   மறுப்பதேன்?

கல்விக்கண் தந்திட்டார்
    காமராஜர்
கயமைக்கண் ஆனதையா
   என்ன சொல்ல
புல்விக்கும் புதல்வர்கள்
    ஆனார் அம்மா
புதல்வர்கள் பாரதத்தில்
   ஐய்யோ ஏனோ


வணிகமது ஆயிற்றே
   கல்வி யன்றோ
வன்முறைகள் தொடந்ததுவும்
   அதனால் தானோ
துணிகரமாய் நடக்குதய்யா
      விற்பனைக்கூடம்
தேய்ந்துவிட்டார் நாட்டுமக்கள்
   துயரத்தாலே

வரமென்று தந்திருவீர்
   கடவுள் காள்
வாழ்ந்திருவோம் வணங்கிடுவோம்
  என்றுமே தான்
தரமென்று இல்லாத
  பள்ளியெலாம்
தரைமட்டம் ஆகட்டும்
   தவிக்கட்டும்


திக்கெட்டும் பரவட்டும்
  நம்கல்வி
திகட்டாமல் படிக்கடும்
   தமிழிலேயே
சிக்கட்டும் அவர்மானம்
     சிதையட்டும்
சீழ்பிடித்துப் போகட்டும்
     அவர்கல்வி


வெல்லட்டும் தமிழிங்கு
   விண்முட்டும்
வினயல்லாம் தீரட்டும்
   விரைவாக
நல்லெண்ணம் படைத்திட்ட
   நல்லவரே
நம்தமிழில் கற்றிடுவோம்
   நலமுண்டாக...


விடியட்டும் விடியட்டும்
     விடியலாக
வீதியெல்லாம் தமிழென்றே
      பரவலாக
முடியட்டும் முடியட்டும்
     ஆங்கிலமோகம்
முழங்கட்டும் முழங்கட்டும்
      தமிழும் மேவ
**************************************************


2 comments:

  1. அன்பு கூர்ந்து எனது இந்தப் பதிவைப் படிக்க வேண்டுகிறேன் - http://valarumkavithai.blogspot.in/2014/03/blog-post_28.html
    படிப்பீர்கள் என்று நம்புகிறேன். முன்கூட்டியே நன்றி.

    ReplyDelete
  2. நாகப்பன்June 5, 2014 at 4:33 AM

    அடடா விருத்தங்கள் உங்களுக்கு அருமையாக வருகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete