Tuesday, December 3, 2013

குறுங்கவிதைகள்

மழை எழுதிய கவிதைகள்
வரப்பெங்கும்
புல்வெளிகள்

பழைய பேப்பர்காரர் படித்திருப்பாரோ
தெரியாமல் போட்டுவிட்ட
கவிதைநோட்டை

நிலவோடு பேசும் நேரம்
அடிக்கடி வரட்டும்
மின் தடை

பிடிக்காதவர்களிடமும்
சொல்லவேண்டியிருக்கிறது
“வணக்கம்”

மேலதிகாரியின் அறை
பொய்கள் நிரம்பிய
கோப்புகள்
**********************************************

3 comments:

  1. நிலவோடு பேசிகிறீர்களா சுவாதி...எங்கள் வீடு அப்பாட்மெண்ட்... அதனால் இல்லை...

    ReplyDelete
  2. சுந்தர் ஆசிரியர்....December 3, 2013 at 9:45 AM

    அடக் கடவுளே....நாந்தேன் இப்படி ஒரு வணக்கம்போட வேண்டிருக்குண்னா...நீங்களுமா? பாவம் நீங்கள்....

    ReplyDelete
  3. நல்ல கவிதைகள் சுவாதி.நீ வணக்கம் போட யோசிப்பியே.பிடிக்கலன்னா ஏன் சொல்லனும்.

    ReplyDelete