Friday, November 15, 2013

அவர்களை மேம்படுத்த

அந்தப்படிப்பு. இந்த படிப்பு
என்று அலைந்தவர்கள்
எதுவும் ஆகவில்லை
நாமெல்லாம் என்ன செய்ய முடிஉம்
என்று வகுப்பறையில்
ஏழ்மையை மட்டும்
உடுத்தியிருந்தவர்களில் சிலர்
உயர்ந்த நிலைக்கு வந்து விட்டார்கள்
நிறைய பேசியவர்களும்
படிப்பது போன்றே பாவலா செய்தவர்களும்
நடுத்தர நிலையில் இருக்கிறார்கள்
இவர்கள்
வாழ்க்கையில் என்னகற்றார்கள்
என்று தெரியவில்லை
பலர் அழுவது போலவும்
பலர் அழுகையாகவும்
காண்பிக்கவேண்டும்
என்றும் வாழ்கிறார்கள்
இயல்பாய்...இயற்கையாய்...
ஒருவர் முகமும் தெரியவில்லை
ஆனாலும்
இன்னமும் தொடர்கிறேன்...
என் பள்ளியில்....
அவர்களை
மேம்படுத்தும் ஏதோ ஒன்றை!
***********************************

1 comment:

  1. இன்னமும் தொடர வேண்டும்... அருமை.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete