Wednesday, October 30, 2013

பிறந்தநாள்

எல்லாப் பிறந்தநாளும்
இப்படித்தான் கடந்து போகும்
நேற்றைய சாதம்
நிறைய மீதம் இருக்கும்
அம்மாவீட்டில்!
சரஸ்வதி பூஜை என்பதால்
சர்க்கரைபொங்கல்
சுண்டலோடு கழியும்
பள்ளி வயதுகளில்
விடுமுறை என்பதால்
தோழிகளின் வாழ்த்தும் கிடைக்காது
ஒவ்வொரு முறையும்
நிறைய எதிர்பார்த்து
நிறையவே ஏமாறுவேன்
எனக்கான வாழ்த்து
எங்கேனும் கிடைக்காதாவென்று!
திருமணம் ஆனதும்
ஏமாறுவேன் என்று தெரிந்தும்
ஏமாற்றத்துக்காக வருந்துவேன்
எனக்கும் கூட
கொண்டாட மாட்டார்களா
ஏக்கம் நிறைக்கிறது மனதை
தெருவெல்லாம்
பந்தலிட்டு
ஏழைகளுக்கு உணவிட்டு
என்பதாகக்கூட இல்லாமல்
நாலே நாலு பேர் வாழ்த்தி
ஒரேஒரு புத்தகமேனும் வாங்கி
வந்து வாய்த்து விடாதா
ஒரே ஒரு பிறந்தநாளேனும்????
****************************************

1 comment:

  1. புத்தகம் ஏக்கம்... புரிகிறது வரிகளில்... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete