Tuesday, October 29, 2013

மனிதர்கள்

பொறாமையில்
பொறுமுகிறார்கள்!
அன்பில்
நிறைகிறார்கள்
கோபத்தில்
தகிக்கிறார்கள்
துக்கத்தில்
துவண்டு
போகிறார்கள்
மனிதர்கள்
மனித்ர்கள்
யார், எங்கே,எப்படி?
இருப்பார்களென
அறிய முடியவில்லை என்னால்
அந்தந்த குணங்களினூடே
அவரவர்களைச் ச்ந்தித்து விடுகிறேன்
பிரியமில்லாவிடினும்’
பல்வேறு எண்ணக்குழம்பில் குழம்பி
என்னையும் குழப்பி
மடிய, வடிய, ஒடிய
வைத்து விடுகின்றனர்
என் மனதை
************************************** 

1 comment: