Thursday, October 1, 2015

போராடுங்கள் வெற்றி பெறுங்கள்


போராடுங்கள் வெற்றி பெறுங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3




பெண்கல்வி பெரும் கேள்விக்குறியதாகவும் கேலிக்குறியதாகவும் உள்ளது என்று சொன்னால், இந்த நூற்றாண்டிலா? அல்லது சென்ற நூற்றாண்டிலா? என்று கேள்வி கேட்பார்கள். ஆனால் மிகவும் மறைமுகமாக அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

நான் வேலைக்குவந்த புதிதில் பல பெண் குழந்தைகள் திடீரென்று பள்ளியை விட்டு நின்று விடுவார்கள். ஏன் என்று கேட்டால் பல காரணங்கள் பெண் பிள்ளையை படிக்க வைக்க விரும்பவில்லை. அல்லது அடுத்து பிறந்த பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று  காரணங்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆதவனை அடைக்க முடியாது என்பார்களே அது போல் தான் பெண் கல்வியும் இன்றைய கால கட்டங்களில் மாறியிருக்கிறது என்றாலும் அது முறைப் படுத்தப்பட்டுள்ளதா? அதில் ஒரு தெளிவு இருக்கிரதா? அது உண்மையானதாக இருக்கிரதா என்ற கேள்விகள் எழுந்தால் ஒரு குழப்பமான பதில்களைத்தான் சொல்ல முடியும்.

பெண் படிக்கச் சென்றால், முதலில் தொடரும் பாலியல் தொல்லைகள். பேருந்தில், அலுவலகத்தில், சமூகக் கூடங்களில் என்று தொடர்ந்தவை பள்ளியில் படிக்கும் போது சொல்லிக் கொடுக்குமாசிரியர்களாலேயே நிகழ்ந்திருக்கிறது என்பது நாம் வெட்கித் தலை கவிழ்ந்து ஒத்துக் கொள்ளக்கூடிய நிகழ்வாகவே இருக்கிறது.

பேருந்தில் தன் நண்பனுடன் சென்ற பெண் மானபங்கப்படுத்தும் போதும் அவள் அதன் பாதிப்பில் இறந்த போதும் அவள் ஆடை சரியில்லை, அவள் ஏன் அந்த நேரத்தில் தன் ஆண் நண்பருடன் சென்றாள் என்று பல கேள்விகள் கேட்டார்களேயன்றி அத்தகைய சிக்கலில் உள்ளாக்கியவனின் மன வக்கிரங்களை இந்த அளவுக்கு யாரும் அலசவில்லை.

காதலிக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆசிட் வீசுவோம். எங்களுக்குக் கிடைக்காத இந்த உடம்பு இனி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று இன்ன்னமும் உடல் ரீதியாக பெண்னைப்பார்க்கும் இழி நிலை தான் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

இந்த மனப்பாங்கு திரைப்படங்களால் பல நிலைகளில் இவர்களுக்கு ஊட்டப்படுகிரது. ஒரு சாதாரண மான ஏழ்மை நிலையில் உள்ளவன் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிப்பான்( காதலிக்க வேண்டும்) அல்லது ஒரு படிக்காத முட்டாள் , படித்தவளைக் காதலிப்பான். அவளும் காதலித்தாக வேண்டும். அதற்கு முன் அவளை இடித்துக் கொண்டு பாடுவது, ஆடுவது, என்று பற்பல உடல் ரீதியான தொந்தரவுகள் தருவான். ( இதைத் தான் ஈவ் டீஸ்  என்று சொல்கிறோம்) அதைக் கதாநாயகர்கள் செய்தால் சரி. அப்படியானால் நாட்டில் எல்லோரும் கதாநாயகர்கள் தானே அதனால் எல்லோருக்கும் பெண்களுக்கு எதிரான் வீர தீர செயலகள் எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றி விடுகிறது

ஒரு வேளை அவள் மறுத்தால், அவள் அப்படிப்பட்டவள், இப்படிப்பட்டவள்..இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் தெரிஞ்சு போச்சுடானு எத்தனை பாடல்கள்? ஆனால் ஆண்கள் இவ்வளவு கொடுமைகள் செய்தும் அதை தன் பாட்டில் வடிக்க எந்தத் திராணியும் இல்லை. ஏனெனில் அவளுக்கு அப்படி ஒரு வாய்பு கொடுக்கப் படுவதே இல்லை. அப்பாடி அவள் எழுதினால் பேசினால் கட்டாயம் ஆண்கள் சூழ் உலகால் புறக்கணிக்கப் படுவாள். அவள் நடத்தை பற்றி தாறு மாறாகப் பேசுவார்கள்

இதையெல்லாம் பார்த்து பெண் தன்க்குள்ளேயே சரி தான் இது படித்தால் போதும். நமக்க்கு இன்ன இன்ன நடந்தால் போதும் என்று விட்டுக் கொடுக்கிறாள், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
இன்று இவ்வளவு வலிந்த சமூகம் தகவல் தொடர்பு எல்லைகள் விரிந்து பரந்து மேம்பட்ட போதும் அவள் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் ஏதாவது சிக்கல்கள் வந்து ஆக்கிரமிக்கத் தான் செய்கிரது. சிக்கல்கள் வருவதற்கு 5 வயது, 15 வயது 54 வயது என்று வயது வரம்பெல்லாம் கிடையவே மிடையாது. ஒன்று உடலால் துன்புறுத்தப் படுகிராள் அல்லது வார்த்தைகளால் துன்புறுத்தப்படுகிராள்.

நாம் வேண்டுவதெல்லாம் எல்லாவற்றையும் மீறி, எழுந்து எழுந்து வர வேண்டும் என்பதே அன்றைய கால கட்டத்தில் நக்கண்ணை, ஆண்டாள், என்று எல்லோருக்கும் பிரச்சனைகள் இருக்கத் தான் இருந்தது. அதனை மிறி வடிவம் கொண்டாஅர்கள். வளர்ந்து நின்றார்கள்
எனவே பெண்கள் தன் திறன் என்ன என்று அறிந்து கொண்டு அதனை வளர்த்துக் கொள்ள போராடியே ஆகவேண்டும் நிச்சயம் அந்தப் போராட்டத்தில் நீங்கள் இன்று தோற்றாலும் நாளை யாரேனும் ஒரு பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்து வெற்றி பெற வைப்பீர்கள் எனவே போராடுங்கள், வெற்றி பெறுங்கள் 

2 comments:

  1. ஒரு ஆசிரியராய்ப் பெண் குழந்தைகளின் கல்விநிலையை உடனிருந்துப் பார்ப்பவராய் கசப்பான உண்மையை அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் சுவாதி.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. பெண்கள் தன் திறன் என்ன என்று அறிந்து கொண்டு அதனை வளர்த்துக் கொள்ள போராடியே ஆகவேண்டும் நிச்சயம் அந்தப் போராட்டத்தில் நீங்கள் இன்று தோற்றாலும் நாளை யாரேனும் ஒரு பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்து வெற்றி பெற வைப்பீர்கள் எனவே போராடுங்கள், வெற்றி பெறுங்கள்

    உண்மை
    வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete