Thursday, October 1, 2015

பெண்களைப் புரிந்து கொள்வோம் வாரீர்

பெண்களைப் புரிந்து கொள்வோம் வாரீர் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை .எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3


குழந்தை, பிறப்பு, கிராமம், அன்பு, ஆசிர்வாதம், பண்பு, மரியாதை, திருமணம், பாராம்பரியம், கலாச்சாரம்,  இப்படி பல சொற்களால் நிரம்பியதுதான் நம் வாழ்க்கை. ஆனால் இவை அனைத்தும் வெறும் சொற்கள் தானா?

வாழ்வில் நல்லவைகளும் அல்லவைகளும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன். நல்லவைகளில் கொண்டாடுவதும் அல்லவைகளில் திண்டாடுவதும் நம் வாழ்க்கையின் நிகழ்வுகளாகப் போனது

சற்று கூர்ந்து நோக்கினோம் என்றால் நாம் எவற்றை இழந்தோம்? எவற்றை எல்லாம் பெற்றோம் என்பதெல்லாம் தெரியும்

இப்போது எல்லாப் பெண்களும் கட்டாயம் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குழந்தை, வீடு, வாகனம்,வசதி, சமுதாய அந்தஸ்து, என்று இன்ன பிற காரண்ங்களுக்காக மட்டுமே தான் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

பெண்கள் கல்வி கற்று முன்னேறி தங்களை உயர்த்தி தங்கள் நாட்டை உயர்த்தி மேன்மைப் படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக ஆண்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை.( ஆண்களில் சிலர்)

அதே சமயம் பெண்கள் வேலைக்குப் போனாலும் அவள் கோயிலுக்குப் போனாஅலும் வேறு வகைக் கூட்டங்களுக்குப் போனாலும் எங்கே சென்றாலும் அவள் தன்னோடு தன் குடும்பத்தையும் எடுத்துச் செல்கிறாள். அவள் தான் தன் குழந்தைகள் சாப்பிட்டார்களா? வீடு சுத்தம் செய்ய வேண்டுமா என்பதோடு தற்போது நவநாகரிக காலங்களிலும் பல வீடுகளில் பாத்ரூம் கழுவமும் அவளே தான் மெனக்கெட வேண்டி இருக்கிறது.
எந்த வேலையையும் நான் சத்தியமாய் குரை சொல்ல வில்லை ஆனால் அந்த வேலையை எந்த ஆண் செய்கிறான். 100 க்கு 10 ஆண்கள் என்பது கூட மிகை தான் என்கிறது ஒரு பெண்ணின் ஆய்வு.

திருமணம் ஆன புதிதில் பலவாறாக கவனிக்கப் படும் அந்தப் பெண் இரண்டு குழந்தைகள் பிறந்த உடன் கணவனால் முதலில் புறக்கணிக்கப் படுகிறாள். தன் குடும்பத்தாரால் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் உள்ளிட்ட அனைவராலும் தள்ளி வைக்கப் பட்டு விடுகிறாள். இந்த கால கட்டங்களில் தான் பெண்ணுக்கு பல்வேறு சுமைகள் ஏற்படுகின்றன, மன ரீதியாக உடல் ரீதியாக பல மாற்றங்களுக்குள் உள்ளாகும் பெண் தன்னால் என்ன ஆகும்? தான் எதற்குத் தான் பிறந்தோம் என்று நினைத்து நினைத்து ஏங்கி பல நாட்கள் அவள் காலம் கடத்த வேண்டியதாய் இருக்கிறது.

வாழ்க்கையை அதன் பின் ஆண்கள் மட்டும் ரசிக்கிரார்கள் பெண்கள் வீட்டில் இருக்கும் மேசை, நாற்காலி, குளிர்பதனப்பெட்டி, துவைக்கும் இயந்திரம் என்ற அளவில் அவளும் ஒரு பொருளாய் தான் மதிக்கப் படுகிறால். ஒரு வேளை அவள் வேலைக்குப் போனால் அவள் ஒரு சம்பாதித்துத் தரும் இயந்திரம் என்ற அளவில் மாறி , மாறி கடைசியில் தன் மனம் வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

வேலை பார்க்கும் பெண்மணிகள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. எல்லா நாட்களிலும் பெண்கள் வேலைக்குப் போய் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு தேவைப்படும் அந்த நாட்களிலு கூட மன்ம் இருகி, போகிறாள். அந்த நேரத்தில் எரிச்சல், கோபம், வேதனை எல்லாம் சேர்ந்து கொள்ள கணவனிடம் காண்பிக்க முடியாமல் தன் பிள்ளைகளிடம் காண்பிக்கிராள். அந்தக் கணவர்களும் இதை ச் சாக்காக  பிள்ளைகளை சமாதானப் படுத்துவது போல் அவர்கள் பால் கோபத்தைத் திருப்பி விடுவதும் ப்ல வீடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பெண்ணின் மிக மிக முக்கியமான பிரச்சனை மெனோபாஸ் தான். அந்த காலங்களில் அவளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளோடு  , விரக்தி, கோபம், போன்ற பல்வேறு உணர்வுகளுக்கும் ஆட்பட்டு விடுகிறால். இதனை பல ஆண்கள் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்.

இதன் காரணமாக தங்களைத் தாங்களே தனிமைப் ப்டுத்திக் கொண்டும் கோயில், ஆசிரமம் என்றும் போய் அங்கும் வேறு மாதிருயான பிரச்சனைகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.

பல வீடுகளில் அவளூக்குப் பிடித்த மெல்லிசை கேட்பது, சினிமா செல்வது, புத்தகம் படிப்பது, சுற்றுலா தலங்கள் செல்வது என்று எதுவும் அவளுக்கு வழங்கப்படுவதே இல்லை

பெண்கள் விடுதலை பெற்றிருக்கிறார்கள்
ஆட்டுக்கல்லிருந்து கிரைண்டருக்கும்
அம்மியிலிருந்து மிக்ஸிக்கும்
எல்லாம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது
அடுப்படி ...கிச்சனாகி
சிமிண்ட் தரை மார்பிள்ஸாகி
முத்தக்கட்டு சிங்காகி
எல்லாம் நவீனமாகிவிட்டதுதான்
ஆனாலும்
அடுக்களை என்ற கிச்சனுக்குள்ளும்
பெண்தான்
சமைக்கிறாள்!
*************************.

இப்படி ஒரு கவிதை எழுதினே. சில ஆண்டுகளுக்கு முன்..ஆனால் இன்னமும் இதன் நிலை மாறவில்லை.

 பலகாரம் செய்தல்
 மாவு அரைத்தல்
 விருந்தினருக்கும்
 வீட்டினருக்கும் உபசரித்தல் என்று
 பண்டிகை விடுப்பு எடுத்துக் கொண்ட
 வேலைக்காரி வேலையுடன் சேர்த்து
 தொடர்ந்து, நீண்டு............................
 பல வேலைகளுடனும், களைப்புடனும்
 முடிகிறது தீபாவளி
 பெண்களுக்கு...........
 தொலைக்காட்சி பார்த்தல்
 புது ஆடை உடுத்துதல்
 இன்னும்
 இரண்டு மூன்று தேநீர் பருகுதல் என்று
 வெற்று அரட்டைகளுடனும்
 ஆடம்பரமாக
 நகர்கிறது தீபாவளி
 ஆண்களுக்கு........

இந்தக் கவிதையும் நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது தான். இன்னும் சில ஆண்டுகள் கழித்தேனும் பெண்ணின் நிலை மாற வேண்டும். புரிந்து கொண்டோர் அதிகமானால் , அவள் வழக்கம் போல் தன் மகத்துவம் பெறலாம். இல்லையேல் மனநோய் கண்டு அதுதான என்றே தெரியாமல் மட்கிப்பொகும் அந்தப் பெண் மட்டும் அல்ல. அந்த சமுதாயமும்
*************************************************************************

1 comment:

  1. இதிலுள்ள கவிதைகள்தேவையின் கருதி முன்பு எழுதியது என்று சொல்லியே பயன்படுத்தப்பட்டுள்ளது

    ReplyDelete