Tuesday, October 28, 2014

எங்கள் பள்ளி....

இன்று தாரகை ஆயத்த ஆடை யகம் நிறுவனத்தின் திரு முகம்மதுஇக்பால் அவர்கள் எங்கள் பள்ளிக்கு ஆர்வோ சிஸ்டம் கொடுத்திருக்கிறார்.

அவர்கள் முன்பே தீபாவளிக்கு எங்கள் பள்ளி பிள்ளைகளுக்கு அழகிய ஆடைகள் மிகவும் தரம் உயர்ந்ததாகவும் விலை சற்று அதிகமாகவே வழங்கியிருந்தனர்.

என் உதவிஆசிரியருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து பிள்ளைகளின் துணிகளை வாங்கி வாங்கி பார்த்தார் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்று ஏதும் கண்டுபிக்க இயலவில்லை அவரால்...

திருமிகு முகம்மது இக்பால் அவர்கள் வந்ததும் எங்கள் பிள்ளைகளிடம் இவர் தான் உங்களுக்கு அந்த அழகிய ஆடைகளை வழங்கியவர் என்று கூறினேன்

மறைந்து பின்னால் போய்... முன்னால் வந்து.... மிக மிக ஆச்சர்யமாய் அவரையே பார்த்துக் கொண்டே இருந்தார்கள்...சிறு பிள்ளைகளுக்கே உரிய இலக்கணத்துடன் (  அவர் நிறமும் ஒரு காரணம் என்றாலும் அவர் மீது வைத்த அன்பே மிகையான காரணம்)

இங்குள்ளோர் எல்லோரும் குடவுனில் பணிபுரிபவர்கள் பெண்கள் வேலை கிடைத்தால் போவார்கள் இல்லையேல் சித்தாள் வேலைக்கும் மற்றும் வயல் வேலைக்கும் செல்வார்கள் என்று சொன்னேன்.

(அந்த  வள்ளல்) அவர் உடனே நாம் இவர்களுக்காக பொங்கலுக்கும் வருகிறேன் என்று சொன்னதும் மாணவர்கள் நான் சொல்லிக் கொடுக்காமலேயே கைதட்டிக் கொண்டே இருந்தனர்.

ஒரு தந்தை எழுந்து நின்று கை தட்டினார்.

இந்த ஊரில் உள்ள அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன், ஏனெனில் என்னைவிட பெரியவர்களாக இருப்பார்கள் . ஆனால் நான் அந்த வழியாக சென்றால் எழுத்து வேட்டியை கீழே இறக்கி விட்டு எழுந்து நிற்பார்கள் .

மேலும் என்னை ஆயா...என்றோ அம்மா என்றோ ஆத்தா என்றோ தான் அழைப்பார்கள்




கொஞ்சம் நடுத்தர வயதுடையவர்கள் ” மேடம்பு ”என்றே அழைக்கிறார்கள் (மேடம் என்று கூப்பிடுகிறார்களாம்)
எங்கள் பிள்ளைகளின் தூய்மையான் அன்பில் அவர் திளைத்திருக்க வேண்டும். ஏனெனில் அன்று ஆடை வழங்கிய போது இவர் நல்ல ஆரோக்கியத்துடனும் அன்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று ஒரு சிறப்பு வழிபாடு நடத்தியிருந்தனர். அதனை நேரில் தெரிவித்தனர். அவர் அதில் தான் நான் பொங்கலுக்கு வருகிறேன் என்று சொன்னது...( அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்???)
(இன்னும் மழை பெய்யுதுன்னா இப்படி சில மனுச மக்க வாழுறதுதாம்பா என்ற ஒரு கிழவியின் குரலை கேட்காமலே ஒரு புன்னைகையோடு கடந்து போனார். )
உண்மையில் நான் ஒருத்தருக்கு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கிறேன். அவர் திரு எஸ்.டி.பசீர் அலி அவர்கள் ( இவர் இருக்குமிடமெல்லாம் அன்பு ஒன்றே நிலைத்திருக்கும்) (தீராத உழைப்பாளி. நல்ல குணங்கள் கொண்டவர்...தான் மட்டுமல்லாது தன்னைச் சேர்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் என்று நற்குணத்தார்...)
யாரோ யாருக்கோ என்று ஏதோ தண்டமாக வேலை செய்யாமல் மிகவும் தரமான பொருட்களைத் தந்துள்ள புளுநைல் திரு ஜான்சன் அவர்களுக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்.
விழாவிற்கு வந்திருந்த பிலிம் சொசைட்டி தலைவர் திரு எஸ்.இளங்கோ, பாலா டிரேடிங் ஹவுஸ் செல்வா எல்லோருக்கும் என் நன்றி

1 comment:

  1. உடை தந்த வள்ளலுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete