Monday, October 6, 2014

பக்ரித் பண்டிகை

இன்று பக்ரித் பண்டிகை....

புதுக்கோட்டையில் நாணயவியல் சங்கத்தை தொடங்கியிருக்கும் திரு.எஸ்.டி.பஷீர் அலி அவர்களின் இல்லத்திற்கு அழைத்திருந்தார்.

காசிம் புதுப்பேட்டை..அவரது ஊர்...

மிகவும் அழகிய கிராம்...

அதன் அருகில் அணவயல், கீரமங்கலம்...என்ற ஊரெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ஊர்கள்...(கீரமங்கலம் நான் பிறந்த ஊர்)

அழகிய வீடுகள் ...மிக மிக பிரமாண்டமாய்.....

அதைவிடவும் அழகு எல்லோர் வீடுகளிலும் இருந்த தாவரங்கள்

மரங்களும் செடிகளும் நிரம்பிய ஊர்....

அதைவிடவும் மனித மனங்கள் மிக மிக அழகாக இருந்தது....மனிதாபிமானம் நிரம்பிக்கிடந்தது...

இனிய வரவேற்பு தந்தார்கள்.

(மிகவும் தன்னடக்கமாய்)நீங்கள் புத்தகங்களுக்கு செல்ஃப் செய்து அடுக்கி வைத்துள்ளதால் தான் நானும் அடுக்கி வைத்துள்ளேன் என்று ஒரு அறையைக்காட்டினார்.காணக்கிடைக்காதவைகள் சிலவும், அதில் இடம்பெற்றிருந்தன.

அவர் வீட்டு அம்மாவுக்கு நாங்கள் சைவமாய் இருப்பது குறித்து பெரிய வருத்தம் .அவராவது சாப்பிட்டாரே என்ற மகிழ்வு. (அவர் அசைவம் தான்)

அவர் மகள் என்னை சுவாதி அக்கா என்று கூப்பிட்டதும் சரளமாக பேசியதும் சக்தியோடும் சூர்யா வோடும் அன்புடன் பேசியதும் இன்னும் இனிக்கிறது

அவர் பேரன் சிறுவன் அனீஸ் 3ம் வகுப்பு பயில்கிறான். ஈது திருநாள், தியாகத் திருநாள், பற்றி விளக்கங்கள் சொன்னதோடு பல செய்திகளை அழகான மழலை தமிழில் உரையாற்றினான்...

அவன் தங்கை ஆயிஷா அழகோ அழகு...சக்தி, சூர்யாவிற்கு அவளை விட்டு வர மனமே இல்லை....தூக்கி வைத்துக் கொண்டார்கள்...

வரும் போது மல்லிகை , செம்பருத்தி, மருதாணி நாற்றுகளை பறித்து வந்திருக்கிறாள். பெரியவள்...





சில மனிதர்கள் நம்மிடம் நேசத்தின் முகவரியைச் சொல்கிறார்கள்...சில மனிதர்கள்????????? 

No comments:

Post a Comment