Thursday, July 3, 2014

விலங்கின் பிரதிபலிப்புகள்

விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்

இதைப்
 படிக்கும் போதெல்லாம்
சந்தேகம் வரும்

மனம் வழக்காடும்

நிச்சயமாய் இருக்காது

அதெப்படி? என்று
அறிவு யோசிக்கும்

கடைசியில்
இல்லை, இல்லை என்ற
முடிவுக்கே
மீண்டும் மீண்டும் வரும்

இப்போதெல்லாம் தொன்றுகிறது
இவன் நிச்சயமாய்
மிருகங்களின் பரிணாமம் தானோ?

எங்கும் எங்கும்
விலங்குகளின் பிரதிபலிப்புகள்
விலங்குகளின் பிம்பங்கள்
மனித போர்வையில்....

1 comment:

  1. “ விலங்குகளின் பிம்பங்கள்
    மனித போர்வையில்“
    உண்மைதான் கவிஞரே!
    சுரணையற்ற ஒரு சில ம(ா) க்கள் பற்றிய உண்மைச் சூடுள்ள கவிதை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete