Saturday, June 14, 2014

என் இறைவா(கஸல்)

என் இறைவா!
உனக்கும்  எனக்கும் கூட
நெருக்கமில்லாமல் போனது போல
ஒரு தோற்றம்

இது தோற்றம் தான்
நிஜமில்லை

என் இறைவா
உன்னை விடுத்து
நானும்
என்னை விடுத்து
நீயும்
எப்படி இயங்கும்
இந்த உலகம்?

என் இறைவா
விடியல்கள் நிறைய
அமைதியைத் தருகின்றன
கோவில்களோ நிறைய
அன்பைத் தருகின்றன

ஆனாலும்
என் இறைவா
இரவுகள் இல்லாதது போல்
விடியல்கள் மலராதது போல்
எவ்வளவு அழுகைகள்?
எவ்வளவு இழப்புகள்?
எவ்வளவு துயரங்கள்?

உன்னை நினைக்க
எதுவும் இல்லாமல் போகும்
உன்னை நினைக்க
எதுவும் கிடைத்துவிடும்

துயரங்களை இல்லாமல் செய்து
நிம்மதியைக் கிடைக்கச் செய்யாமல்
துன்பங்களை நிறைத்து
அன்பை அநாதையாக்கி விட்டார்கள்

என் இறைவா
எல்லா உயிரினமும்
அமைதியாகட்டும்

எல்லா உயிரினமும்
இன்பமுறட்டும்

எல்லா உயிரினமும்
வெற்றியடையட்டும்
எங்களை வாழ்த்து
***************************
எல்லை என்பது இதயத்திற்கு இல்லை
 என்ற எனது நூலிலிருந்து.....

No comments:

Post a Comment