Monday, June 23, 2014

யாமிருக்க பயமேன்

விடுமுறை வந்தாலோ
விருந்தாளிகள் பயம்

வெளியே செல்லலாம் என்றாலோ
கொள்ளையர்கள் பயம்

வீட்டுக்குள் கிடக்க எண்ணினால்
பூகம்ப பயம்

வீதிக்கு வந்தாலோ
விபத்துக்கள் பயம்

கொல்லைக்கு போனால் கூட
கற்பழிப்பு பயம்

ஆனாலும்
சிரிக்கிறார்
முருகன் சாமி
யாமிருக்க பயமேன் என்றபடி!
*****************************************************************

9 comments:

  1. துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பார்கள் அல்லவா
    அதுதான் முருகன் சிரித்துக் கொண்டிருக்கிறார்
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  2. வணக்கம்
    கொஞ்சம் சிந்திக்கவைக்கும் கவிதை பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பாவம் அவர் என்ன செய்வார்...?

    ReplyDelete
  4. மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இதுதான் பய முரணோ கவிஞரே!
    கவிதை நன்றாய் இருந்தது!

    ReplyDelete
  6. கவிதை கைகொடுக்க இனி பயமேன்? நல்ல கவிதை.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete