Saturday, June 21, 2014

குழந்தையின் குரல்

எப்போதும் ஏதேனும்
ஒரு புழுக்கத்துள்
புதைந்து போகும் மனசு

வாழ நினைக்கிறது

வாடி அழுகிறது
ஒன்றில்லாவிடில்
மற்றொன்றிலிருந்து

எங்கிருந்தாவது
குத்தப்பட்டுவிடுகிறது
ஈட்டிகள், ஊசிகள்
வேல்கள், ஆணிகள்
அரூபமான ஆயுதங்கள்
வெளிப்படையாய்த் தெரியாத
பனிப்போர்கள்

மனம் ஒடுங்கி
என்ன வாழ்வு இது
என்ன பிறப்பு இடு
என்ன நடப்பு இது
என்ன நட்பு இது

எல்லாம் வெறுத்து
சூழல் மறந்து
சுற்றம் மறந்து
சுகம் மறந்து

இறப்பை நோக்கி
இதயம் எழுகையில்
அம்மா என்கிறாள்
குழந்தை

இறப்பு மறந்து
வஞ்சம் மறந்து
மாயச் சூழல் மறந்து

மீண்டும்....மீண்டும்...
மீண்டு
வாழத்துடிக்கிறது
மனசு
******************************************************

3 comments:

  1. ///எங்கிருந்தாவது
    குத்தப்பட்டுவிடுகிறது
    ஈட்டிகள், ஊசிகள்
    வேல்கள், ஆணிகள்
    அரூபமான ஆயுதங்கள்
    வெளிப்படையாய்த் தெரியாத
    பனிப்போர்கள்///
    இன்றைய வாழ்வியல் யதார்த்தம்
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete