Thursday, May 29, 2014

மக்களும் மாக்களும்

சாதியைப் பார்ப்பதே இல்லை
என்கிறார்கள்
சந்திப்போகளிடமெல்லாம்
சாதி தேடுகிறார்கள்
எதையெல்லாம்
செய்ய இயலாதோ
அதையெல்லாம் செய்வதாகச்
சொல்கிறார்கள்
செய்ய இயலுவதை
செய்வோம்,
செய்யப்போகிறோம்
என்பதாகப் போக்குக் காட்டுகிறார்கள்
அல்லது
மாயத்தோற்றம் மட்டுமே
எழுப்பிக்கொள்கிறார்கள்
தப்பித்தவறி தானாய்
ஏதாவது நல்லது நடந்துவிட்டால்
தானே செய்ததாகவும்
செய்வதற்குப் பாருபட்டதாகவும்
செய்யவைக்க
தவமிருந்ததாகவும்
சொல்லிக்கொள்கிறார்கள்
அடுத்தடுத்து
புதிதாய் முளைப்பவர்களும்
அட்சரம் பிசகாமல்
அதை மட்டும் கற்றுக் கொள்கிறார்கள்
நிறைய நடிக்கவும்
கொஞ்சமாக செயல்படுபவர்களும்
மட்டுமே தான் அங்கு அனுமதி
நடிக்கவே தெரியாமல்
நிறைய செயல்படுபவர்கள்
இன்னும்
தெருவில் தான் நிற்கிறார்கள்
எப்பொருள்
யார் யார் வாய் கேட்டாலும்
மெய்ப்பொறுள்
அறியவே முடியவில்லை
இவர்களின் ஊழல்கள்
அவர்களாலும்
அவர்களின் ஊழல்கள்
இவர்களாலும் தான்
நமக்கு
அறிமுகமாகின்றன்
நமது
சிறு சிறு தவறூகளை
குற்றமெனச் சொல்பவர்கள்
பெரும் பெரும் குற்றங்களை
சிறு தவறுகளாகக் குட
ஒத்துக் கொள்வதில்லை
என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது
மக்களாய் இருப்பதைவிட
மாக்களாய் இருப்பதே
நலமென்று தோன்றுகிறது
***********************************



4 comments:

  1. கவிதை உள்ளடக்கம் நன்று.
    உருவத்தை இன்னும் பொறுமையாகச் செதுக்கியிருந்தால் கவிதை உச்சத்தைத் தொட்டிருக்கும். பொறுமை பொறுமை கவிஞரே! (எழுத்துப் பிழைகளைத் திருத்தக் கூடப் பொறுமை இல்லாத அளவுக்கு அப்படி என்ன அவசரம்?. கவிஞர்களிடம்தான் இப்படிப் பார்க்க முடிகிறது. கட்டுரை, சிறுகதை, நாவல் என்றால் ஒரே மூச்சில் எழுதி அனுப்பிவிடுவீர்களா? கவிதையில் மட்டும் ஏன் இப்படி அவசரம்?)

    ReplyDelete
  2. கவனிக்க தமிழ்மணம் செயல்படுகிறது...

    இணைத்து ஓட்டளித்து விட்டேன்... நீங்களும் ஓட்டளிக்கலாம்...

    சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்க... dindiguldhanabalan@yahoo.com / 9944345233

    ReplyDelete
  3. விலங்காய் இருப்பது மேல்தான் சகோதரியாரே
    விலங்குகளிடம் பொறாமை கிடையாது
    துரோசகச் சிந்தனை கிடையாது
    நன்றி சகோதரியாரே
    தம 2

    ReplyDelete