Friday, February 28, 2014

என் இறைவா









என் இறைவா
எத்தனை மாற்றங்கள்
எத்தனை நிகழ்வுகள்
என்று தெரியாமல்
ஏன் நிகழ்ந்தன
என்று தெரியாமல்
நிறைய நடந்தேறி வந்து விட்டன
மகிழ்வாய்...
குதூகலமாய்....
வெற்றியாய்....
பற்பல....
கவலையாய்...
கண்ணீராய்...
சிற்சில.....
ஆனாலும்
மனம் ஒன்றி
வாழ்வை ரசிக்கிறேன்
மனம் முழுக்க
வாழ்வை நேசிக்கிறேன்
என் இறைவா
உனக்கு நன்றி
என்னை
நேசிப்பில்
ஆழ்த்தியதற்காகவும்
அன்பில்
வீழ்த்தியதற்காகவும்....
*********************************

1 comment:

  1. ரசித்தேன்... அருமையான படம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete