Friday, January 10, 2014

படி (மழலை இலக்கியம்)

காலையிலே எழுந்து படி
கருத்துடன் எதையும் படி
மனதிலே கொண்டு படி
மறக்காமல் இருக்கும் படி

  மூளையிலே இருத்திப்படி
  முனைப்போடு எதையும் படி
  நாளை உனதென்று படி
  நம்பிக்கை கொண்டு படி

சிறந்தஓர் நூலைப் படி
சிந்தையில் வைத்துப்படி
மறக்காமல் நாளும் படி
மகிழ்ச்சியுடன் என்றும் படி

  ஊக்கம் கொண்டு படி
  உயர்வுநாளை உண்டு படி
  ஆக்கம் விளைக்கப் படி
  அறிவியல் விளங்கப் படி
**************************************

1 comment:

  1. படி என்றாலே பாட நூல் என்றே பெற்றோர்களே நினைக்கிறாங்க சுவாதி .நல்ல கவிதை

    ReplyDelete