Friday, January 10, 2014

பாரத நாடு (மழலை இலக்கியம்)

பாரதம் என்பது நம்நாடு
   பண்பில் அன்பில் உயர்நாடு
நாளும் அதன்புகழ் நீப
  நன்மை விளையும் மகிழ்ந்தாடு

வாழ்வில் உயர்வை நீதேடு
  வளத்தைத் தருமே வயல்காடு
கீழ்மை என்றும் நாடாதே
  கேடுகள் கண்டு வாடாதே

இயற்கை இங்கே செழித்திருக்கும்
  இன்பம் தனையே குவித்திருக்கும்
செயற்கை அன்பு இல்லாத
  சீரிய நாடும் ஈதன்றோ?

இந்தியா போல ஒருநாடு
  எங்கே உள்ளது சொல்நீயே
முந்திய பழமை நிறைநாடு
  முன்னேற் றத்தைநீ நாடு.
***********************************************


No comments:

Post a Comment