Tuesday, January 14, 2014

குறள்{ மழலை இலக்கியம்}

குறளின் கருத்தை உணருவோம்
குறை யில்லாமல் வாழ்வோம்
அறமும் பொருளும் நம்மவர்க்கு
இன்பம் ஒன்றே முதியவர்க்கு

குறளின் வழியே நாம்நிற்க
குன்றா வாழ்வு வந்திடுமே
விதைகள் நன்றாய் இருந்தாலே
விளையும் பயிரும் நன்றாகும்

குறளைப் படிப்போம் நாள்தோறும்
குவலயம் நம்மை போற்றிடுமே
கற்போம் கற்போம் கசடறவே
நிற்போம் நிற்போம் அதுபோல

வள்ளுவர் சொன்ன வாய்மொழியில்
வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்
உள்ளம் வானாய் உயரட்டும்
உவகை தேனாய்ப் பாயட்டும்!
************************************

2 comments:

  1. வரிகள் அனைத்து சிறப்பு... வாழ்த்துக்கள் பல... நன்றி...

    ReplyDelete