Monday, December 2, 2013

சுதந்திரம்

இந்திய நாட்டு முன்னோர்கள்
சிந்திய குருதி போதாதா?
விடுதலை பெற்ற திருநாட்டில்
படுதுயர் மக்கள் படலாமா?

அச்சம் விலகி ஓடட்டும்
அவனியில் அனைவரும் வாழட்டும்
வெற்றி ஒன்றே குறிக்கோளாம்ம
விளங்கி நின்று சிறந்திடுவோம்

வேதனை எல்லாம் தீரட்டும்
வெற்றி எங்கும் பரவட்டும்
சாதனை பற்பல குவியட்டும்
சரித்திரம் படைப்போம் வாருங்கள்

பாரத நாட்டுப் பண்பாடு
பாரே புகழ நீபாடு
வீர சுதந்திரம் பெற்றுள்ளோம்
விடியல் இன்றே சமைத்திடுவோம்
*********************************

1 comment: