Saturday, November 30, 2013

புத்தகம் படிப்போம்(மழலை இலக்கியம்)

புத்தகம் பலவும் படித்திடுவோம்
  புதுமை நாளும் செய்திடுவோம்
முத்தமிழ்த் தேனும் பருகிடுவோம்
  முறையாய் நாளும் கற்றிடுவோம்

புத்தகம் கற்பது பெருமையன்றோ
  பூக்கள் சிரிப்பது அழகன்றோ
சித்தம் குளிரச் செய்திடலாம்
  சிகரம் எதையும் தொட்டிடலாம்

அறிவுச் செல்வம் பெற்றிடலாம்
  அமைதி வழியைக் காட்டிடலாம்
செறிவு நிறைந்த வாழ்க்கையிலே
  செந்தமிழ் என்றும் உதவிடுமே

படித்தே உயர்ந்தார் மேதைகள்
  பாரே போற்றிட நடந்தாரே
நாமும் அது போல் படித்திடுவோம்
  நன்மை பலவும் செய்திடவே

********************************************************

1 comment:

  1. சிறப்பான கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete