Tuesday, November 12, 2013

காதல் திருமணத்தின் வலி

அனேகமாக
பெண்களுக்கு மட்டுமே
இந்த வலி ஏற்படுகிறது
கணவர்வீட்டுடன்
பிணக்கம் ஏற்படும் போதோ
எப்போதேனும்
மனசுக்கு ஆறுதல் தேடும் போதோ
போக வழியற்று
வலி ஏந்தித்திரிகிறார்கள்!
புரிந்து கொள்ளாத ஆண்கள்
தங்கள்
பிறந்தகத்தின் பெருமையை ஏற்றியும்
பெண்ணின் பிறந்தகத்தை
அடித்து துவம்சம் செய்கிறார்கள்
வார்த்தைகளில்!
வீட்டுக்கு வருபவர்களோ
மற்ற சொந்தக்காரர்களோ
சாதி பற்றி அறிவதில்
அதிக அக்கறை காட்டுகிறார்கள்
அதே சாதி என்றானபின்
அதிக நட்புடனும்
வேற்று சாதி என்றால் கொஞ்சம்
 விலகியும் நின்று விடுகிறார்கள்!
அவளின்
பொருளாதாரம், வேலை, படிப்பு
என்பது பற்றி
குடும்பத்தில் அல்லாத பலருக்கும்
கவலை வருகிறது!
அதிக பணக்காரி
என்றால் பொறாமையும்
படிப்போடு வேலையும் இருந்தால்
வேறு மாதிரியாகவும் பேசப்படுகிறது!.
இவளைப் பற்றி
வேறென்ன புரணீகள் பேசலாம்
என்ற தீவிர ஆலோசனையுடன்
நகர்ந்து போகிறது ஒரு கூட்டம்.....!
இங்கு
காதல் தோல்விவலிகளை விடவும்
காதல் வெற்றி வலி
அதிகமாய்தான் இருக்கிறது
எல்லாப் பெண்ணுக்கும்!
புரிந்துகொள்வார்களா
புதிய காதலர்கள்???????? 

2 comments:

  1. ரொம்ப எதிர்பார்க்கிறாய் சுவாதி

    ReplyDelete
  2. மலர்மகன்June 17, 2014 at 9:18 PM

    அதே நாங்களும் பொலம்பலாம்ல ...உங்களுக்கு சப்போட்டா இந்த கீதா

    ReplyDelete