Thursday, October 17, 2013

கொண்டாட்டம்

 பலகாரம் செய்தல்
 மாவு அரைத்தல்
 விருந்தினருக்கும்
 வீட்டினருக்கும் உபசரித்தல் என்று
 பண்டிகை விடுப்பு எடுத்துக் கொண்ட
 வேலைக்காரி வேலையுடன் சேர்த்து
 தொடர்ந்து, நீண்டு............................
 பல வேலைகளுடனும், களைப்புடனும்
 முடிகிறது தீபாவளி
 பெண்களுக்கு...........
 தொலைக்காட்சி பார்த்தல்
 புது ஆடை உடுத்துதல்
 இன்னும்
 இரண்டு மூன்று தேநீர் பருகுதல் என்று
 வெற்று அரட்டைகளுடனும்
 ஆடம்பரமாக
 நகர்கிறது தீபாவளி
 ஆண்களுக்கு.........

**********************************************

5 comments:

  1. இன்றைக்கும் இப்படித்தான் இருக்கு...!

    ReplyDelete
  2. ஆணாதிக்கம்..

    ReplyDelete
  3. ok . theepavali vandhirichu pola .

    ReplyDelete
  4. புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் வேறென்ன பண்றது

    ReplyDelete
  5. அனுபவித்த உண்மைகள். ஆண்களும் உதவ வேண்டும் தன்னுடைய தாய், சகோதரி, மனைவி இப்படி யார் வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்கள் படும் துன்பங்களின் வலியை உணர்ந்தவனே ஆண்மை நிறைந்தவன் என்பது எனது கருத்து. நல்லதொரு கவிதைக்கு நன்றீங்க சகோதரி.

    ReplyDelete