Friday, October 11, 2013

நான் ஆன நான்

ஒரு சமயம்
சிலரிடம்
கோபப்பட்டதற்காக
பின்னொரு நாளில்
வருந்துகிறேன்
ஒரு சில நேரம்
கோபப்படாமல் இருந்தற்காக
பின்னர் வருந்துகிறேன்
என்னை
உயர்வானவள் என்று
எண்ணிக் கொள்கிறேன்
அமைதியாய் இருக்கும் போதும்
எதிர்க்க இயலாமல் போகும் போதும்
ஏன் இப்படி
தாழ்வானவளாக இருக்கிறேன்
என்று சலனப்படுகிறேன்
**************************************

4 comments:

  1. சிந்தனைகள் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பெண்ணினத்திற்காக ஒலிக்கிறது உங்கள் குரல் .சிலநேரம் சில முகமூடிகள் தேவைப்படுகிறது சகோதரி.நாமும் நம் கோபங்களும்?சிந்திக்கவைக்கிறது .நன்றி.

    ReplyDelete
  3. இயல்பு எல்லோருக்கும் பொதுமை இது...

    ReplyDelete
  4. குமறலாய் எரிமலை உன்னுள்

    ReplyDelete