Wednesday, October 16, 2013

நானும் என் மாணவர்களும்

இன்று இனிமையான் நாள்.....
இன் மாணவர்கள் இன்று அளவுக்கு அதிகமான் உற்சாகத்துடன் இருந்தனர்.வாசலில் வரும் போதே இரு பக்கங்களையும் அடைத்தவாறு நின்று கூச்சல் போட்டனர். எனக்கு செய்வது புரியாமல் விழித்தேன்... ஆனால் அவர்களோ இரு பக்கமும் ஏதோ தனியார் பள்ளியில் வரவேற்பார்களே அது போல பூக்கள் தூவி வரவேற்றனர்... என்ன ஆயிற்று என்று யோசிப்பதற்குள் ஒருவன் ஓடி வந்து ஒரு அட்டையை நீட்டினான். அதில் தப்புத் தப்பாக happy birth day to u my dear teacher என்று எழுதப்பட்டு இருந்தது. மற்றொருவன் ஒரு பெரிய பேப்பர் கத்தைகளை நீட்டினான். அதில் ப ல மாணவர்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்து இருந்தனர். மற்ற்வன் வேகமாக வந்து பொக்கே போன்ற ஒன்றைக் கொடுத்தான். அதில் அவர்களுக்கு எளிமையாய் என் ன பூக்கள் கிடைக்குமோ அது வெல்லாம் இருந்தது. வகுப்பறையில் நுழைந்ததும் ஒருவன் மின் விசிறியை சுழல விட்டான். அதிலிருதும் பூக்கள் தூவியது. என்னடா பண்றீங்க என்று கத்தியே விட்டேன். அப்போது தான் ஒரு மாணவன் சொன்னான். உங்களுக்கு சரஸ்வதி பூஜை அன்று பிறஎத நாள் தானே அதான் அன்று பள்ளி இல்லாததால் இன்று கொண்டாடுகிறோம் என்றான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் எல்லோருமே தங்கள் பிறந்தநாளை எந்த வகையிலும் கொண்டாட இயலாத ஏழைகள்... ஆனால் என் பிறந்த நாளை....அதுவும் என்றோ நான் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டு அவர்கள் இப்படி செய்தது மிகப்பெரிய ஆச்சரியம்.இதை விட வேறு என்ன வேண்டும் என்றே தோன்றியது. நெஞ்சம் நெகிழ கண்கள் குளமாக...... அவர்கள் எல்லோரும் மிக நல்ல நிலைமைக்கு வர வேண்டும் வரவைக்க வேண்டும் என்பதே என் இப்போதையக் கவலை

3 comments:

  1. நெகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எட்டாம் வகுப்புவரை மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.. அடுத்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் அவர்களை தொடர்பு கொண்டு எந்த வாத்தியாரை பிடிக்கும் என்று கேட்டுப் பாருங்கள்... நினைத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது ரிசல்டுக்கு அமுக்கும் வாத்தியார்களை மாணவர்கள் வெறுப்பதில் வியப்பேதும் இல்லை...

    ReplyDelete
  3. தேவராஜன் ஆசிரியர்June 18, 2014 at 3:21 AM

    வாழ்த்துக்கள் சுவாதி... அவர்களிடமிருந்து வந்த அன்பு உங்கலிடமிருந்து போனது தான் . அதனால் தான் தன் பிறந்த நாளை நினைவில் கொள்ளாதவர்கள் உங்கள் பிறந்த நாலைக் கொண்டாடுகிறார்கள். கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு....இதை எங்க பயல்கள்ட்ட படிச்சுக்காட்டி எனக்கும் இது மாதிரி செய்யச் சொல்லிட்டேன்

    ReplyDelete