Tuesday, October 15, 2013

இப்படியே போனால்.......

* இன்னமும் நாம்
   நியுட்டனின் விதியையும்
   கலிலியோ தொற்றத்தையும்
   மாறி மாறி க்ற்றுக்கொண்டிருக்கிறோம்!
  மனதுள் மட்டும்
  மாற்றம் வரவே இல்லை.

* சோற்றுக்குக் கூட
   இல்லாமல் வாழ்வதற்கா
   சுதந்திரம் வாங்கினோம்!

* புதைந்து போன
   கடல் நகரங்கள்போல்-நம்
   புன்னகைகளும்
   புதைந்து போயின!

* கல்லூரி வளாகத்தில்
  கனவுகளின் சாம்ராஜ்யம்!
  புதுமை என்றெண்ணி
  புண்களின் தேரோட்டம்!

* தேர்தல் சுவரொட்டிகள்
  தினந்தோறுமா மாறுவது?

  கனன்று கொண்டிருக்கும்
  நெருப்புகளே!
 
   நித்திரையிலிருந்து மீண்டு
  நிகழ்காலத்திற்கு வாருங்கள்!

  அரசியலுக்கு அடிமையான
  அராஜகத்துள் அழிந்துபோன நம்
  அறிவைப் பாருங்கள்!

  அஹிம்சையில்
  ஆங்கிலேயரை மட்டும்ல்ல
  அகிலத்தையே
  அலறவைத்தவர்கள் நாம்!

   நம்மிலா

   குண்டு வெடிப்பு சம்பவங்கள்
  குவிந்து குவிந்து வருவது?

  இனியாவது

  நாட்டின் நார்களில்
  நல்ல பூக்களை தொடுப்போம்!

 அரியாசனத்து அழுக்குகள்
 அரியா  சனத்தையே
 சிதைத்து விடும் போலுள்ளதே

* விடியல் வரட்டுமென்று
   வேடிக்கை பார்த்துக் கொண்டிருதால்
  வேதனை தான் வரும்!!

  கைகளையும்
  கால் கட்டுகளையும்
  அவிழ்த்து விட்டு
  களத்துள் இற்ங்குவோம்!

 **************************************** 

3 comments: