Sunday, September 22, 2019

விடுமுறைப் பயணம்

திங்கள் வரை பள்ளி உண்டு என்று சொல்லவும் ஒரே நாளுக்காக ஊருக்குப் போக வேண்டாமே என்று நினைத்து சுக்ரீவன் அம்மாவிடம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் போகப் போகிறேன் என்றேன்..நானும் வரேன்.போற வரவு செலவு அவரவர் உடையது தண்ணீர் வாங்கினால் கூட அவரேர் காசுல வாங்கிக்கலாம் டீல் ஓகேயா என்றாள்..

சரி..தனியா போறதுக்கு துணையா இருக்குமேனு ஓகே சொன்னேன்

சிறிது நேரத்தில் விமலா போன் செய்து நானும் வரேன் டி என்றாள்

சனிக்கிழமை இரவே பரமேஸ்வரி எங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ள ..காலையில் 5.30 க்கு கிளம்பினோம்

வாசலில்.பார்த்தால் 20 பேர்..

பின்னாலிருந்து பரமேஸ்வரி நான் தான் எல்லோரிடமும் சொன்னேன் என்றாள் பெருமையாக...

( என் கூடத் தானே படுத்திருந்தாள்..🤔🤔இது எப்ப நடந்தது?)

அவரேர் காசுல வரோம்.ஆனா ஒன்னாப் போறோம் என்றனர்

முதலில் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

அங்கிருந்து அரேங்கேற்ற அய்யனார் கோயில்...அங்கிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சாப்பிட்டு வெக்காளியம்மன் கோயில் ..அங்கும் தரிசனம்.செய்து விட்டு பஞ்சவர்ணேஸ்வரர் ்..உடனுறை காந்திமதியம்மை கோயில்...அங்கிருந்து வராஹி தனி ஸ்தலம் குழுமணி ரோடில் மங்கள் நகரில் இருப்பதாகச் சொல்லவும் அங்கு கிளம்பினோம்

அங்கும் போய் வராஹி அம்மனை வழிபட்ட பின் மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் வந்து...அங்கு ஒரு ஹோட்டலில் மேனேஜர் வரை அனைவரையும் அலற வைத்து...உரிமையாளரையே சாப்பாடு பரிமாறவைத்து..அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் வந்து...அங்கிருந்து புதுகை வந்துவிட்டோம்..

பேருந்தில் பத்மாவதி க்கு தான் எங்கும் முகம் கழுவி மாலையில் பூ வைத்துக் கொள்ளவில்லை என்ற குறை..( நெற்றி நிறைய குங்குமமும் மஞ்சளும் இருந்ததால், அதனை அழிக்க மனமில்லாமல் மாலை கோயிலில் நேரம்.இருந்தும் தண்ணீர் வசதி இருந்தும் தன்னை அழகாக்கிக் கொள்ளவில்லை என்று மூன்று முறை சொன்னார்

எப்போதும் முடி முதல் கால் வரை வலிக்குது என்று தினம் என்னிடம் புலம்பும் தன்வந்திரி அம்மா அவ்வளவு நடந்தும் ஒன்றுமே சொல்லவில்லை

இடையில் யாருக்குமே வீட்டு நினைவு வரவே இல்லை..நான் மட்டுமே என் அம்மா.அப்பாவும் என் மகள்களுக்கும் ஒவ்வொரு கோயில் சன்னதியிலும்.தொடர்பு கொண்டு பேசினேன்

பொதுவாக எந்த கடையில் சாப்பிட்டாலும் யார் வீட்டில்.கல்யாணத்தில் எங்கு சாப்பிட்டாலும் சாப்பாட்டைக் குறை சொல்லும்.நகுலன் அம்மா சாப்பாட்டை பற்றி மூச்சு விடவில்லை..

பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் அமர்ந்துருக்கும் வேளையில் சப்தமாக பாடினார்கள்..அங்கு வந்திருந்த அனைவரும் நாங்கள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதாக நினைத்துக் கொண்டனர்

பேருந்தில் என்னை டீச்சர் டீச்சர் என்று எல்லோரும் அழைக்க பஸ் கண்டக்டரும் டிரைவரும் கூட அப்படியே அழைத்தனர்..

பரமேஸ்வரி நேற்றே என் வீட்டிற்கு வரக் காரணம் ஏற்கனவே அஷ்டமு அன்று பைரவர் கோயிலுக்குக் கூட்டிப் போவதாகச் சொல்லி பத்து நிமிடம்.கால தாமதமாக வந்ததால் அவளை விட்டு விட்டு  கிளம்பிட்டேன்..அதனால் தானாம்.

கடைசி வரை எனக்கு நிறைய தமிழ் தெரிவதாகவும் எனக்கு பலத்த ஞானம் இருப்பதாகவும் நம்பினர்..

( உண்மையில் பட்டிமன்றம்.பேசவும்..பதவி உயர்விற்காகவும் பிறரை இம்பிரஸ் பண்ணவும்..தேவாரத்தில் பத்து பாடல்கள். திருப்புகழில்.ஐந்து பாடல்கள்.அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்துவில் இரண்டு பாடல்கள்.பாரதியார் பாடல்கள்.பத்து...பாரதிதாசன் பாடல்கள்.பத்து கண்ணதாசன் பத்து இவை மட்டுமே தெரியும் என்பதை ஒரு முறை நான் சொல்லியும் நம்பவில்லை


கடைசி வரை கேசவய்யர் மனைவி என்னோடு கோபத்துடன் இருந்தாள்..வெக்காளியம்மன் கோயிலில்.இருந்து துலுக்க நாச்சியார் கோயில் பக்கம்.அங்கு நான் கூட்டிப் போகவில்லையாம்.

ஆனால் இது புரட்டாசி மாதம் என்பதால் மதியம் ஸ்ரீ ரங்கம் செல்வதாய் தான் முதலில் சொன்னேன்..ஆனால் ப்ளான் மாறியதும்  ஒரு காரணம்.( அழுத்தக் காரி என்னை மாமி என்று அழைக்கக் கூடாது என்றும் சுவா என்று அழைக்கக் கூடாது என்றாலும்.கேட்காமல் வேண்டுமென்றே அப்படியே அழைப்பாள்.எனக்கு.கனகாம்பர்ம்.தலையில் வைக்கப் பிடிக்காது என்று தெரிந்தும் என் தலையில் வலுக்கட்டாயமாய் வைப்பாள்)
அதனால் என்ன லீவில் ப்ளான் பண்ணி போய்ட்டு வாங்க என்றேன்.என்னோடு தான் வரணுமாம்..சரி சரஸ்வதி பூஜைக்கு கூட்டிப் போறேன் என்றேன..அப்ப தான் உங்க அம்மா வீட்டுக்குப் போறீங்களே. என்று எப்படியும் ஒரு நாள் கூட்டிப் போறேன் என்று சொல்லி இருக்கிறேன்..


வழக்கம் போல் வசந்தா ..பிரேமா..பானுப்பிரியா..கலைச்செல்வி எதுவும் பேசவில்லை..

என்னை சமத்து என்றும்..நல்லபடியாக் கூட்டிப் போய் வந்தீர்கள் என்று சொன்ன போது "ஙே" என்று விழித்து..ஹி என்று சிரித்து வைத்தேன்..( அவரேர் காசுல போனது எப்படி நான் கூட்டிப் போனதாகும்??)

நீண்ட நாளுக்குப் பின் நான் மகிழ்வாய் இருப்பது போல் உணர்ந்தேன்.


சிப்காட் நகர்..பழனியப்பா நகர்.சண்முகா நகர்..பாலன் நகர்..கம்பன் நகர்.பெரியார் நகர்..என்று ஒன்பது நகரிலிருந்து ஒரே இடத்தில் குவிந்து பயணித்திருக்கிறோம்

கீரனூர் வந்தவுடன் மழை பார்த்ததும் தான் எல்லோருக்கும் வீட்டு நினைவே வந்தது..

ஏதோ தேவலோகத்துக்கு அழைத்துப் போனதுமாதிரி இரண்டு மூன்று முத்தங்கள் வேறு தந்தார்கள் பிரியும் வேளையில்..

இன்னமும் எனக்கு ஒரு சந்தேகம்

நான் முதலில் சொன்னது சாவித்திரியிடம்.அவள் வரவில்லை..நான் பரமேஸ்வரி.கலைச்செல்வி மூன்று பேர் மட்டுமே போக திட்டமிட்டிருந்தோம்.

அதுவும் சனிக்கிழமை மதியம் தான் சொன்னேன்
.எப்படி அதற்குள் எல்லோரும் இணைந்தார்கள் என்பது ஆச்சர்யம் தான்

பிஸ்கெட்..பேரீட்சை..கடலை மிட்டாய்..கல்கண்டு..கொய்யா...திராட்சை என்று ஆளுக்கு ஒன்றே ஒன்று என்று பகிர்ந்து உண்டது மறக்க இயலாது..

இறங்கும் போது சுவா மாமி  ஸ்ரீரங்கம் எப்போனு சொல்லுங்க என்று கத்தி ச் சொல்லி என் கோபத்தை ரசித்து விட்டிச் சென்றாள் கேசவய்யர் மனைவி..

No comments:

Post a Comment