Friday, September 25, 2015

என் இறைவா

என் இறைவா
சில சம்பவங்கள்
என்னை
நிறைய சலனப்படுத்துகிறது
எனை ஆட்கொள்கிறது
எனை
மேற்கொண்டு சிந்திக்கவிடாமல்
தடுக்கிறது
என் இறைவா
நெஞ்சை அறுக்கும்
நிகழ்வுகள்
இதயம் தொலைக்கும்
நிகழ்வுகளில்
நான் ஆழ்ந்து போகிறேன்
அது
என்னைச் சூழ்ந்து கொள்கிறது

என் இறைவா
சலனங்களை சலனப்படுத்தி
நான்
முன்னேற வேண்டும்
நான்
மேன்மேலும்
நிமிடத்திற்கு நிமிடம்
நொடிக்கு நொடி
உயர வேண்டும்
பண்பால், அன்பால்
கம்பீரத்தால், கௌரவத்தால்
உயர்ந்துகொண்டே
இருக்க வேண்டும்
எனக்கு
வரம் வழங்கு
எந்தச் சலனங்களும்
என்னை
ஆட்கொள்ளாதிருக்கட்டும்
****************************************

No comments:

Post a Comment