Wednesday, June 18, 2014

தொண்டு(குழந்தைபாடல்கள்)

தொண்டு செய்யும் மனத்துடனே
தொடர்வோம் வாழ்வுப் பயணத்தை
மக்கள் சேவை பெரிதெனவே
மதிக்கும் மாந்தர் வாழ்வாரே


காக்கும் கரமே தெய்வம்தான்
காலம் சொல்லும் நன்றியினை
தொண்டு செய்யும் வரலாறு
தூணாய் நிற்கும் நாட்டினிலே


தெரசா என்றொரு தெய்வமகள்
தேசம் கடந்து வந்தாரே
தொண்டுகள் பலவும் தான் செய்து
தூயநெஞ்சம் கொண்டாரே


அன்னை என்றே அவரையும்
அகிலம் போற்ற வாழ்கின்றார்
அன்பே என்றும் பெருமைதரும்
அல்லல் நீக்கி வாழ்வுதரும்


இந்த உண்மை நாமெல்லாம்
இன்றே உணர்வொம்! உய்ர்ந்திடுவோம்
மண்ணில் பிறந்த யாவருமே
மனித நேயம் காத்திடுவோம்.
****************************************************************

1 comment:

  1. ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதமான பாடல்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete