Tuesday, June 17, 2014

என் இறைவா (கஸல்)

என் இறைவா
வாழ்வின் சுவர்கள்
எவற்றில் அடைபடுகிறதென்று
தெரியவில்லை

ஆனாலும்
அது சுவர்களால் சூழ்ந்து
சோகங்களில் வீழ்த்தப்பட்டு
அன்புகளில் கரைந்து
ஆளுமைகளில் நிறைந்து
இருளில் மூழ்கி
வெளிச்சத்தில் விடிகிறது

இதில்
எதை இடிப்பது?
எதை மேலெழுப்புவது?
எதனில் அமர்வது?

எதுவும் புரியாமல்
வாழ்க்கை ஓடம்
ஓடுகிறது
அமைதியாகவோ
ஆனந்தமாகவோ

என் இறைவா
எப்போதும்
விடியலில் சுகமில்லை
எப்போதும் உள்ள
வெற்றியில் பலமில்லை
எப்போதும் இருக்கிற
ஆனந்தத்தில் பரவசமில்லை

ஆனாலும்’
உழன்று சுழன்று
இது எப்போது நிற்கும்?
புரியவில்லை
இது எப்போது என்னாகும்’
தெரியவில்லை

நடத்து! நடத்து!
உன்
ராஜ்ஜியத்தை
நடத்திக் கொண்டேயிரு
**************************************************************

No comments:

Post a Comment