Monday, June 16, 2014

தரணி போற்ற வாழ்வோம்

தமிழன் என்றே பண்ணிசைத்துத்
   தரணி போற்ற வாழுவோம்
அமிழ்தம் போன்ற மொழியதனால்
   அகிலம் காப்போம் வாருங்கள்


அன்பு கொண்டே அனைவரையும்
   அணைத்து வாழ்வோம் தோழர்களே
தென்றல் போல இணைந்தே நாம்
   தேசப் புகழில் மகிழ்வோமே

முன்னோர் மொழிந்த கருத்துக்களை
   முத்தாய், பொன்னாய்ப் போற்றிடுவோம்
அண்ணல் காந்தி நேருபிரான்
   அறிவு மொழிகள் பேணுவமே

நித்தம் நெஞ்சில் நேர்மையினை
   நிலையாய்ப் பெற்று வாழுவமே
புத்தம் புதிய கலையினிலே
   பூக்கும் தமிழைப் போற்றுவமே

***********************************************

1 comment:

  1. த.ம ஒன்று
    நல்ல கவிதை

    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    ReplyDelete