Thursday, June 5, 2014

தமிழ் வணக்கம்

காப்பாய் காப்பாய் என்தேவி
   கவிதைத் தேரில் வலம் வரவே
பூப்பாய் பூப்பாய் என்தேவி
   புன்னகை விரித்தே என் நாவில்!


அறிவின் சுடர்கள் ஆளட்டும்
   அண்டம் எல்லாம் திரும்பட்டும்
தெறிவின் விளிம்பில் வள்ம்சேர்த்து
   தேவை நிறைப்போம் என் தேவி

பூக்கும் பூக்கள் பூக்கட்டும்
   புண்மை அழித்து மகிழட்டும்
போக்கும் துயரை உன் வரவும்
   பொறுமை சேர்க்கும் நல்தேவி

வெற்றி!வெற்றி! இனி வெற்றி!
   வேழம் போற்றும் நல்வெற்றி
முற்றிய நற் சொல் தருவாயே
   முழுமை பெறவே வழி தருவாய்

பாரதி படைத்தான் ஒரு மரபு
   தாசன் படைத்தான் பலகவிதை
சாரதி என் எனை ஆக்கிவிடு
   சாதனை படைக்க ஆணையிடு

பாரதம் முழுக்க பரப்பிவிடு
   பாரினில் சிறக்க ஆசிகொடு
‘பா’பல எழுத கோலும் கொடு
   மரணம் இல்லா வாழ்வு கொடு
************************************


1 comment:

  1. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 9:22 AM

    உங்களுக்கு சொற்கள் சரளமாக வரிகிறது. நிறைய எழுதுங்கள்

    ReplyDelete